ஈரோடு கிழக்கு தொகுதியில், மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்  இன்று மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. வரும் 7ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போது,  77பேர் களத்தில் இருந்தாலும், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, திமுக அமைச்சர்கள் குழு அங்கு முகாமிட்டு … Read more

புதுவீட்டில் பால் காய்ச்சிய தனுஷ்…

நடிகர் தனுஷ் சென்னையில் புதிதாக வீடுகட்டி பால் காய்ச்சி குடியேறி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக வலம்வந்த நடிகர் தனுஷ் தனது பங்கிற்கு போயஸ் கார்டனில் புதிதாக இடம்வாங்கி வீடு கட்டியுள்ளார். இந்த புதிய வீட்டில் நேற்று பால் காய்ச்சி குடியேறிய தனுஷ் தனது குடும்பத்தினருடன் உள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்யநாராயணாவின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது. தனுஷ் மற்றும் அவரது மனைவி … Read more

அமெரிக்கா – தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சி… ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை செலுத்தி எதிர்ப்பை தெரிவித்த வட கொரியா

தென் கொரிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவம் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் இந்த கூட்டு நடவடிக்கையை எதிர்த்து வரும் வட கொரியா கடந்த இரண்டு நாட்களாக கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை கடலில் வீசி சோதனை செய்து வருகிறது. 🚨#WATCH: As the regime of North Korea broadcasted through their state media that they had launched a new long-range ballistic missile … Read more

கிருஷ்ணகிரி ராணுவவீரர் கொலை: திமுக அரசை கண்டித்து சென்னையில் நாளை பாஜக உண்ணாவிரதம் – மெழுகுவர்த்தி பேரணி…

சென்னை: கிருஷ்ணகிரி ராணுவவீரர்  திமுக கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,  திமுக ஆட்சியை கண்டித்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி பேரணி நடத்தவிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பட்டப்பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், தி.மு.க. நிர்வாகியால் படுகொலை செய்யப்படுகிறார். சட்டமும், காவல்துறையும், தன்னை ஒன்றும் செய்யாது என்று படுகொலை செய்த நபர் கொக்கரிக்கிறார். இதை கண்டித்து … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்!

ஈரோடு: திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் 2 நாள் ஈரோடு கிழக்கு தொகுதியில்  பிரசாரம் மேற்கொள்கிறார். 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் போட்டியிடும், தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகள் முகாமிட்டு வாக்குவேட்டையாடி வருகின்றன. வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று … Read more

இனி முகநூல், இன்ஸ்டாவிலும் ‘Blue Tick’ பெற கட்டணம்

புதுடெல்லி: டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளுடிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பர்க் புளுடிக் கட்டணம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.. “இந்த வாரம் நாங்கள் மெட்டா வெரிஃபைட் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளோம். அரசின் ஆவணங்கள் மூலம் உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும், நீல … Read more

குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அசையும் சொத்துக்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.3,49,38,500 வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: ’சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீஸார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் வித்திக்கப்பட்டு வருகிறது. ஒருசிலர் மட்டுமே அபராதம் செலுத்தும் நிலையில் … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

டெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லியில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 263, இந்தியா 262 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 61/1 ரன் எடுத்திருந்தது. இந்திய அணி … Read more

திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்

புண்ணியகோடியப்பர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒரு சிவத்தலமாகும். திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது. விடையன் என்னும் சூரிய குலத்து அரசன் கோயில் கட்டி வழிபட்ட தலமாதலால், இத்தலத்திற்கு “திருவிடைவாசல்” என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் சிவனின் வாகனமாகவும், கொடியாகவும் “விடை” உள்ளது. சிவத்தலமான இங்கு விடையுடன் நெருங்கிய … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மீன் விற்பனை செய்து வாக்கு சேகரிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீன் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார். திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக … Read more