மகா சிவராத்திரி: அறநிலையத்துறையின் கீழ்உள்ள சிவாலயங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு..

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு அறநிலையத்துறையின் கீழ் உள்ள 330 சிவாலயங்களில் நாளை சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. குறிப்பாக, 5 முக்கிய சிவாலயங்களில் கலைநிகழ்ச்சிகளுடன் விடிய விடிய விழா நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திலுள்ள 330 சிவாலயங்களிலும் நாளை இரவு முழுவதும் பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபற உள்ளது. குறிப்பாக,  மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், … Read more

ஹிண்டன்பர்க் அறிக்கை: மத்தியஅரசின் கருத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

டெல்லி: அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்தியஅரசு வழங்கும் குழுவினரை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம், இந்திய தொழிலதிபர் அதானி நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி அறிக்கை வெளியிட்டருது. இதன் காரணமாக, அதானி நிறுவனம் கடுமையான சரிவை சந்தித்தது. அதுபோல உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அதானி … Read more

ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியீடு… சிஎஸ்கே ஆடும் போட்டிகள் விவரம்…

சென்னை: நடப்பாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. போட்டியானது அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. அதன் முழுவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. … Read more

பூண்டி ஏரியின் உயரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டம்! பொதுப்பணித்துறை தகவல்…

சென்னை: ரூ.550 கோடியில் பூண்டி ஏரியின் உயரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்காக ரூ.550 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றான, பூண்டி ஏரியின் உயரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது, திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ளது. இந்த குடிநீர் தேக்கம் ரூ.65 லட்சம் செலவில் 1939-ல்  தொடங்கப்பட்டு 1944-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போதைய சென்னை மேயராக இருந்த … Read more

ஐ.ஏ.எஸ்.அதிகாரி கதிரவன் திடீர் மரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..

சென்னை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி கதிரவன் பணி நிமித்தமாக சென்னை வந்திருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.  அவருக்கு வயது 55. அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சேலம் ஏற்காடு மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு டேன்மேக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்தவர் கதிரவன். சேலம் டேன்மேக் நிறுவனத்தின் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், … Read more

மீனவர் பலி – கர்நாடக வனத்துறை விளக்கம் – தமிழகம்-கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்

பாலாறு: வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் மீனவர் பலியான நிலையில், அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, தமிழகம்-கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் அடிபாலாறு பகுதியில் கடந்த 14-ந்தேதி மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் ராஜா பலியானார். அவரது உடல் காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதனால் தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சேலம் … Read more

49வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது…

டெல்லி: 49வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்  நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், வரி ஏய்ப்பை தடுப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப்பட்டு, இதற்கான கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி விவாதித்து வருகிறது.  இதுவரை 48முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூடி விவாதித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில்,  49வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், … Read more

கோயிலில் பாகுபாடு கூடாது! உயர்நீதிமன்றம் மதுரை

மதுரை: கோயிலில் பாகுபாடு கூடாது என உயர்நீதிமன்ற மதுரை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி என்பவர், தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்தவிடாமல் உயர்சாதியினர் தடுப்பதாகவும் தங்கள் குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், ஆட்சியரிடம் இதுகுறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், ‘கோயில் … Read more

குட்கா வழக்கு: மார்ச் 20ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்,  கூடுதல் அவகாசம் கேட்ட சிபிஐ வாதத்தைத் தொடர்ந்து, வழக்கு  மார்ச் 20ந்தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, கடந்த  2015-ம் ஆண்டு புகையிலைப் பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினர் முக்கிய டைரி ஒன்றி சிக்கியது. அதில் இருந்த தகவலின்படி,   அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் … Read more

கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரிப்பு! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம்ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி பல லட்சம் மக்களையும் காவுவாங்கியது. இதைத்தடுக்க தடுப்பூசி ஒன்றே இலக்கு என பல நிறுவனங்களின் தடுப்பூசிகள் உலக மக்களுக்கு செலுத்தப்பட்டன. இந்தியாவில்,  கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் இல்லை என கூறப்பட்டாலும், சமீப காலமாக பல்வேறு புதிய நோய்கள் அதிகரித்து … Read more