நாளை தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லை வரை மட்டுமே இயக்கம்

சென்னை நாளை கர்நாடகாவில் பந்த நடைபெற உள்ளதால் தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லை வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. கர்நாடக அரசு அம்மாநிலத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்குக் காவிரி நீரை திறந்து விட்டது. கர்நாடகத்தில் இதைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த 18 அன்று மாண்டியாவில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அங்கு விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து … Read more

அக்டோபர் 3 அன்று சென்னை பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை ஆலோசனை

சென்னை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக . மற்றும் அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையொட்டி பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் சரமாரியாக வார்த்தைப் போர் நிகழ்த்தி வருகின்றனர்.  சமூக வலைத்தளங்களில் இந்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒருவரை … Read more

கோவில் பிரசாதம் திருட்டு : டில்லியில் முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை

டில்லி டில்லியில் கோவில் பிரசாதத்தை திருடிய குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் டில்லி நகரில் உள்ள சுந்தர் நகரி பகுதியைச் சேர்ந்த அப்துல் வஜித் என்பவருக்கு முகமது இஸ்ரார்) என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். அப்துல் வஜித் பழக்கடை நடத்தி வரும் நிலையில், இஸ்ரார் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். நேற்றைய தினம் வீட்டில் இருந்து அதிகாலையில் வெளியே சென்ற இஸ்ரார், நீண்ட நேரமாகத் திரும்பி வரவில்லை. பிறகு ஒரு ஆட்டோவில் உடல் … Read more

காவல்துறை மரியாதையுடன் வேளான் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு இறுதி அஞ்சலி

சென்னை மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்று அதிகாலை வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.  அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், “பசிப்பிணி ஒழிப்பு – உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் … Read more

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு குறித்து ஓ பி எஸ் மேல் முறையீடு

டில்லி உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக் குழு விவகாரம் குறித்து ஓ பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்துள்ளார். சென்ற ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், பொதுச் செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்கவும் வலியுறுத்தி இருந்தனர். மனுக்களை விசாரித்த தனி … Read more

தினமும் என்னிடம் பாஜக தலைமை பேச்சு : ஓபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு

சென்னை தினமும் பாஜக தேசியத் தலைமை தன்னிடம் பேசுவதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளது. இந்நிலையில்,இன்று  முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். பேட்டியில் பன்னீர் செல்வம், ”என்னிடம் கடந்த ஒரு மாத காலமாக பாஜக தேசிய தலைமையிடம் இருந்து தினமும் பேசி வருகிறார்கள். நீங்களே அதாவது செய்தியாளர்களே பாஜக – அதிமுக கூட்டணி முறிவு நாடகம் என்று கூறுகிறீர்கள். தொடர்ந்து … Read more

ஊழல் – நிஜ வாழ்க்கையில் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று – நடிகர் விஷால் ஆதங்கம்

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் அண்மையில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்திருந்தார். அதே படத்தை ஹிந்தியில் மஹாராஷ்டிராவில் வெளியிட தம்மிடம் லஞ்சம் கேட்டதாக அவருடைய ஆதங்கத்தை, அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். வெள்ளித்திரையில் ஊழல் காட்டப்படுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஊழல் தவறானது. அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக மும்பை அரசு #CBFC அலுவலகங்களில் மோசமாக ஊழல் நடக்கிறது. எனது #மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு 6.5 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் … Read more

நாளை மறுநாள் தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை நாளை மறுநாள் தாம்பரம் மற்றும் திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை மறுநாள் தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்(அக்டோபர் 1-ந்தேதி) காலை 6.10 மணிக்குத் திருச்சி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக திருச்சியில் இருந்து அக்டோபர் 1-ந்தேதி இரவு 10.45 மணிக்குப் … Read more

மக்களவையில் தரக்குறைவாகப் பேசிய எம்பிக்கு புதிய பொறுப்பளித்த பாஜக

டில்லி மக்களவையில் தரக்குறைவாகப் பேசியதால் கடும் கண்டனத்துக்குள்ளான பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அக்கட்சி புதிய பொறுப்பை அளித்துள்ளது. டில்லி தெற்கு தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ் பிதுரி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் சந்திரயான் 3 குறித்த விவாதத்தின் போது, சக நாடாளுமன்ற உறுப்பினரான பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கிக் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவரது பேச்சு ‘இஸ்லாமிய வெறுப்பு பேச்சு’ என பல்வேறு அரசியல் கட்சிகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன. பிதுரியின் பேச்சுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் … Read more

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

சென்னை:  பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு வயது 98. இந்தியாவின் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய  புகழ்பெற்றவரும், விவசாயத்தின் தந்தை என்று போற்றப்பட்டவருமான  பிரபல  விஞ்ஞானி, எம் எஸ் சுவாமிநாதன் காலமானார். வயது மூப்பு காரணமாக, சென்னையில் ஓய்வெடுத்து வந்த நிலையில், இன்று லை 11.20 மணிக்கு காலமானார். கும்பகோணத்தை சேர்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். 1925ம் ஆண்டு  ஆகஸ்ட் 7 ந்தேதி  கும்பகோணத்தைச் சேர்நத்  டாக்டர் எம்.கே.சாம்பசிவன்  பார்வதி தங்கம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் … Read more