நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டில் தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரம்…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டில்  (2019 முதல் 2021 வரை) தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரம், இவர்களில் அதிகம் பேர்,  தினக்கூலிகள், சுயதொழில் செய்வோர் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் பூபேந்தர் யாதவ்  தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் 66,912 இல்லத்தரசிகள், 53,661 சுயதொழில் செய்பவர்கள், 43,420 சம்பளதாரர்கள் மற்றும் 43,385 வேலையில்லாதவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் … Read more

தலைமை தகவல் ஆணையராகிறார் இறையன்பு? மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்த அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில், மாநில தகவல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நியமித்த மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்த தேடுதல் குழுத் தலைவர் நீதியரசர் அக்பர் அலி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார். இதையடுத்து, புதிய மாநில தகவல் ஆணையராக இறையன்பு நியமிக்கப்படுவார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005இன் படி தமிழகத்தில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் … Read more

நாசிக் அருகே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 90 ரயில்வே கண்டெய்னர்கள் மாயம்… ரயில்வே அதிகாரிகள் திணறல்…

நாக்பூரில் இருந்து மும்பையில் உள்ள ஜவாஹர்லால் நேரு துறைமுகத்திற்கு (JNPT) ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 90 ரயில்வே கண்டெயினர்கள் மாயமானது. 20 அடி நீளமுள்ள மொத்தம் 90 கண்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தது. பிப்ரவரி 1 அன்று PJT1040201 என்ற எண் கொண்ட ரயில் மூலம் MIHAN இன்லேண்ட் கண்டெய்னர் டிப்போவில் (ICD) இருந்து புறப்பட்ட ரயில், … Read more

உலக கோடீஸ்வரர் பட்டியலில் 24வது இடத்திற்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி!

டெல்லி: அமெரிக்க நிறுவமான ஹிண்டர்பெர்க் அறிக்கையை தொடர்ந்து, உலக பணக்கார்கள் பட்டியலில் இருந்து கவுதம் அதானி 24வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலீட்டாளர்களுக்கு ரூ.53,000 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்திற்கு அதிக அளவில் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை … Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 37ஆயிரத்தை தாண்டியது.. ஐ.நா. உதவி…

துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 37,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 50ஆயிரத்தை நெருங்கும் என ஐ.நா. தெரிவித்து உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.  இந்த நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மிக்க கூடும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. … Read more

மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் – முழு விவரம்..

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  மே 5;ந்தேதி  வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். மதுரை என்றாலே நினைவுக்கு வருவது சித்திரை திருவிழா. பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் இந்த திருவிழா உலகப்புகழ் பெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ளும் சித்திரை திருவிழாவின்போது,  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும்,  ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல் யாணம் போன்றவை பெரும் சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில், நடப்பாண்டுக்கான (2023)  மதுரை சித்திரை திருவிழா  … Read more

ஈரோடு கிழக்கில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள்! சி.வி.சண்முகம் புகார்

சென்னை:  இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு,  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி 31முதல் வேட்புமத்தாக்கல் நடைபெற்ற பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது.  இதையடுத்து பிப்ரவரி … Read more

பிபிசி டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…

டெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்ட பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபோல மும்பை அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு  மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. ஆனால், குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த சாட்சியமும் … Read more

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும்! ராகுல் காந்தி – வீடியோ

டெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும் என டிவிட் பதிவிட்டுள்ள  ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின்போது, காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மலர்கொத்து வைத்து அஞ்சலி செலுத்திய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்தில் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, தற்கொடை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள், வெடிகுண்டுகள் … Read more

காந்தி மண்டபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: சென்னை அடையாறு காந்தி மண்டப வளாகத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளான மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார். ரூ.95 லட்சத்தில் கிண்டி காந்தி மண்டபத்தில்  நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகள்  திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மருதுபாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைகள், வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு, வ.உ.சி.யின் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டு உள்ளது. இந்த … Read more