தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை வெளியீடு, திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான காசோலையை பயனர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023”னை வெளியிட்டு, தமிழ்நாடு (SC/ST) புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் 8 நிறுவனங் களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறையின் கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். … Read more

தேர்தல் மாய்மாலம்: மகளிர் இடஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை: பாராளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள மகளிர் இடஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது, தேர்தல் தேர்தல் மாய்மாலம் என குறிப்பிட்டள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற சிறப்பு அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றுவதில் … Read more

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறை சோதனை…! பரபரப்பு…

மேட்டூர்: தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், மேட்டூர்  அனல் மின் நிலையத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது பல அமைச்சர்களின் உதவியாளர்கள், சொந்த பந்தங்கள், காண்டிராக்டர்கள், அரசு அதிகாரிகள், அரசு அலுவலகங்கள் என  பல பகுதிகளில் சோதனை நடத்தியது. இதில் கிடைத்த ஆவணங்களின் … Read more

பறக்கும் விமானத்தில் அவசரக் கால கதவைத் திறந்த ராணுவ வீரர்

சென்னை டில்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் அவசரக் கால கதவை நடுவானில் ஒரு ராணுவ வீரர் திறக்க முயன்றுள்ளார். நேற்று டில்லியில் இருந்து சென்னைக்கு ஒரு இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது.  நடுவானில் பயணி ஒருவர் திடீரென நடுவானில் அவசரக் கால கதவைத் திறக்க முயன்றுள்ளார். இதனால் அச்சமடைந்து விமானத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். விவரம் அறிந்ததும் ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். சென்னையில் விமானம் தரையிறங்கியது, அங்கு காவல்துறையினர் அந்த நபரைத் தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தமிழகத்தின் செங்கம் பகுதியைச் சேர்ந்த ராணுவ … Read more

பழனிமலை முருகன் கோவிலில் மொபைலுக்கு தடை

பழனி பழனிமலையில் உள்ள முருகன் கோவிலில் மொபைல்கள் மற்றும் வீடியோ சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளனது.  பழனிமலைக் கோவில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும் இந்த  பழனி முருகன் கோவிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச் சென்று வருகின்றனர்.  பழனியில் வாரவிடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட … Read more

வங்கக் கடலில் புதிய  காற்றழுத்த பகுதி

டில்லி இந்திய  வானிலை  ஆய்வு மையம் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தப்பகுதி உருவாகி உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 17 ஆம் தேதி முதல் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த கனமழை  குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிகக் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று மேற்கு … Read more

மீண்டும் நேரில் ஆஜராக விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வரும் 22 ஆம் தேதி நடிகர் விஷால் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ரம் உத்தர்விட்டுள்ளது.  பிரபல நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் கேட்டிருந்தார். லைகா நிறுசனம்  இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்தி இருந்தது. விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் பணத்தைத் திருப்பி செலுத்தும் வரையில், லைகா நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. … Read more

இசையமைப்பாளரின் மகள் எழுதிய  தற்கொலைக் கடிதம் கிடைத்தது

சென்னை இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய தற்கொலைக் கடிதம் கிடைத்துள்ளது. இன்று பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின்  முதற்கட்ட விசாரணையில் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து,அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை … Read more

மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா : கனிமொழி கருத்து

சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் எனக் கூறி உள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். நாளை மக்களவையில் மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா … Read more

சிபிசிஐடி விசாரணையின் கீழ் செங்கல்பட்டு என்கவுண்டர், : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 1 ஆம் தேதி சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரிப் பகுதியில் வினோத் என்ற சோட்டா வினோத், மற்றும் ரமேஷ் என்ற இரண்டு ரவுடிகள் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். சோட்டா வினோத்தின் தாயார் ராணி  இந்த என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், சம்பவத்தன்று வினோத் மற்றும் அவரது நண்பர் … Read more