பிரபாகரன் உயிரோடு வந்தால் மகிழ்ச்சி, நான் சந்திப்பேன்! கேஎஸ்.அழகிரி…

சென்னை: “பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி; அவர் வந்தால், நான் சந்திப்பேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். முன்னாள் பிரதமரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளால் கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தற்போது,  பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி. அவரை சந்திப்பேன்” என தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி … Read more

இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பாதிப்புக்குள்ளாகி வரும் பாகிஸ்தான்… ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.1000

இஸ்லாமாபாத்: இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்குண்டு அவதிப்பட்டு வருகிறது. அங்கு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.1000க்கு விற்பனை செய்யப்படும் அவலம் அரங்கேறி உள்ளது. பால் லிட்டருக்கு ரூ.210 மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சாமானியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் பால் விலை முதல் முறையாக லிட்டருக்கு ரூ.200ஐ தாண்டியது கவலையை அதிகப்படுத்துகிறது. அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இந்தியாவின் தெற்கு எல்லையில் … Read more

குரூப் 4 தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும்! தமிழகஅரசுக்கு டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை…

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முடிவடைந்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அத்தேர்வு தொடர்பாக முடிவுகள் வெளியிடப்படாதது ஏன் என கேள்வி எழுப்பி யுள்ளவர், இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ச.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசுத் துறைகளில் … Read more

உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ குறித்து அதிகாரிகளுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முத்திரை பதிக்கும் தமிழ்நாடு அரசன் திட்டங்கள் குறித்து 2 மாதங்களுக்கு ஒருமுறை நானே நேரடியாக ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, அந்த திட்டங்கள் தொடர்பான அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடன்று ஆய்வு மேற்கொண்டார்.  … Read more

பொள்ளாச்சி வழக்கு: எடப்பாடி பழனிச்சாமியை சேர்க்க கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை: பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சேர்க்கக்கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது. பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் எடப்பாடி பழனிசாமி விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனு அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்,  பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், டாக்டர், பேராசிரியை என்று பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதுதொடர்பான வீடியோ கடந்த 2019- ம் ஆண்டு … Read more

காதலர் தினத்தை கொண்டாட ‘ஆடு’ திருடிய வாலிபர்கள்! இது விழுப்புரம் சம்பவம்…

விழுப்புரம்: பிப்ரவரி 14ந்தேதி காதலர் தினத்தையொட்டி, அதை கொண்டாட பணம் இல்லாததால், ஆடுகளை திருடிச்சென்ற இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Teenagers who stole a goat to celebrate Valentine’s Day! This is Villupuram incident… ரோமானியாவில், காதலர்களுக்கான பாரம்பரிய கொண்டாட்ட தினம், பிப்ரவரி 24 அன்று கொண்டாடப்படும் டிராகோபீட் ஆகும். பாபா டோகியாவின் மகனாக இருக்கலாம் என்று கருதப்படும் ரோமானிய நாட்டுப்புற கதாபாத்திரத்தின் நினைவாக இவ்வாறு … Read more

இந்தூர் மைதானத்துக்கு மாற்றப்பட்டது இந்தியா ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி – குனேமேனை இறக்குகிறது ஆஸ்திரேலிய அணி…

டெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து, இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியஅணி இளம் பவுலரான குயின்ஸ்லாந்து பவுலர் குனேமேனை இறக்குவதாக அறிவித்து உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கு டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் மோதுகிறது. இரு அணிகளுக்க இடையே நடெபற்ற முதல் டெஸ்ட் போட்டி  நாக்பூரில் நடைபெற்றது. இதில்,  இந்தியா இன்னிங்ஸ் மற்றும் … Read more

எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்! பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்…

தஞ்சாவூர்: விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன்,  தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளும் இடையே நடைபெற்ற போரில், விடுதலை புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.  வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே … Read more

பிப்ரவரி 13: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 268-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 268-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை இன்று தொடக்கம்

பெங்களுரூ: பெங்களூருவில் இன்று நடைபெறும் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ஏரோ இந்தியா என்ற பெயரில் இந்த விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் என மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று சர்வதேச விமான கண்காட்சி தொடங்கி நடைபெற … Read more