‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ : சோயப் அக்தர் சாயலில் பேட்ஸ்மேன்களை மிரட்டும் ஓமன் பந்துவீச்சாளர்

சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், ப்ரைன் லாரா உள்ளிட்ட உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தவர் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். ராவல்பிண்டியில் பிறந்த சோயப் அக்தர் 1997 முதல் 2011 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார். 100 கி.மீ. வேகத்துக்கு மேல் பந்துவீசும் உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய இவர் மணிக்கு 161.3 கிமீ. வேகத்தில் வீசிய பந்து தான் இன்றுவரை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக வீசப்பட்ட … Read more

சனாதனம் சர்ச்சை: உதயநிதியின் முழு பேச்சை அறியாமல் பிரதமர் பேசுகிறார்! முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

சென்னை: சனாதனம் சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியும் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து,  உதயநிதியின் முழு பேச்சை அறியாமல் பிரதமர் பேசுகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் டெல்லியில்,  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் று நடந்தது. சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை பேச்சுகள் தொடர்பாகவும் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என தகவல் வெளியானது. அப்போது,  எந்த … Read more

சனாதனம் சர்ச்சை: இனப்படுகொலை செய்யத் தூண்டினேன் என திரித்து கூறும் மத்தியஅமைச்சர்கள்மீது வழக்கு தொடர வேண்டும்! உதயநிதி காட்டம்

சென்னை: அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  இனப்படுகொலை செய்யத் தூண்டினேன் என திரித்து கூறும் மத்தியஅமைச்சர்கள்மீது வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தி உள்ளதுடன், 9 ஆண்டுகால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பொய் செய்திகளை கையில் எடுத்துள்ளது  என கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மணிப்பூர் வன்முறையில் 250 பேர் கொல்லப்பட்டதையும், ₹7.5 லட்சம் கோடி ஊழல் விவகாரத்தையும் திசை திருப்ப, சனாதன நாடகத்தை கையில் எடுத்துள்ளனர் மோடி … Read more

சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சரியல்ல என்று சென்னை  உயர்நீதி மன்றம் அறிவுறுத்திய பிறகும் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்? மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். “அனைவருக்கும் உள்ள ஒரே கேள்வி, உயர்நீதிமன்றம் கூறிய பிறகும், செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன என்பதுதான்”,என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சட்டவிரோத … Read more

ஜி 20 மாநாடு : டில்லி செல்லும் தமிழக முதல்வர்

சென்னை நாளை மறுநாள் ஜி 20 மாநாட்டையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டில்லி செல்கிறார் . வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். தவிர ஐரோப்பிய  யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். டில்லி நகர் இதையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது.  வரும் செப்டம்பர் 9 ஆம்தேதி அன்று குடியரசுத் தலைவர் … Read more

டில்லியில் ஜி 20 மாநாடு – மணிப்பூரில் ஊரடங்கு : காங்கிரஸ் விமர்சனம்

டில்லி மத்திய அரசு டில்லியில் ஜி 20 மாநாட்டை நடத்தி, மணிப்பூரில் ஊரடங்கை அமல்படுத்துவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில், மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்து 160-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் வெடித்து 4 மாதங்களை கடந்த நிலையில், வீடுகளை விட்டு வெளியேறியவர்கள், தங்கள் வீடுகளுக்குத் திரும்புமாறு மணிப்பூர் … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 34

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 34 பா. தேவிமயில் குமார் அன்புள்ள ஆசிரியர் ஆசிரியரே நீங்கள் இடையில் வந்த உறவுதான்… ஆனால் இடைவிடாத உறவு, இரத்த சொந்தமில்லை ஆனாலும், சொத்து சுகத்தை விட சுகமான நினைவுகள்…. கடவுளுக்கு அடுத்ததாய் கைகள் தானாக…. அனிச்சையாக உயரும் இடத்தில் நீங்கள்…. காகித பூக்களுக்கு ஆயுத எழுத்தை அறிவித்த அறவழி ஆன்றோர் நீங்கள்! உங்கள் கைப்பிடித்தே உலக உருண்டையை ஒரு சுற்று வருகிறேன் இப்போதும்….. உங்கள் பிரம்படி எங்களுக்கு … Read more

சனாதனம் பற்றி தவறாகப் பேசுவோருக்குப் பதிலடி கொடுக்க மோடி அறிவுறுத்தல்

டில்லி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி சனாதனம் பற்றி தவறாகப் பேசுவோருக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.   அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதினர். சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

திவ்யா ஸ்பந்தனா நலமுடன் உள்ளார்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் இந்தியா திரும்புவேன்…

தமிழில் கிரி, குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் என 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் இறந்ததாக இன்று காலை சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இதனை அவருடன் தொடர்பில் இருக்கும் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினர். தொடர்ந்து திவ்யா ஸ்பந்தனா, “நான் நலமுடன் இருக்கிறேன், விரைவில் இந்தியா திரும்பியதும் உங்களை சந்திப்பேன்” என்று கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள திவ்யா ஸ்பந்தனா நாடாளுமன்ற … Read more

நேதாஜியின் கொள்ளுப்பேரன் பாஜகவில் இருந்து விலகினார்

கொல்கத்தா பாஜகவில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்ளுப்பேரன் விலகி உள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நமது இந்தியா சுதந்திரம் அடைய பெரும் பங்காற்றிய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர் ஆவார் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமையும் நேதாஜியைச் சேரும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேரனான சந்திரகுமார் போஸ் கடந்த 2016ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். சந்திரகுமார் போஸுக்கு மேற்கு வங்க பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு தேசிய குடியுரிமை … Read more