சனாதன ஒழிப்பு : தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “டெங்கு, மலேரியா, கொரோனா போன்று சாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். இவரது இந்த பேச்சுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் … Read more

தற்போது சென்னையின் பல பகுதிகளில் கனமழை

சென்னை தற்போது சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று முதல் 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.   தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்து இருந்தது. தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாகச் சென்னை அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், … Read more

காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை : அமைச்சர் பேச்சு

சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டச் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.  பிறகு அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது அமைச்சர் ”தமிழகத்தில் ஏற்கனவே காலியாக உள்ள 1021 மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தவிர ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் இதனையும் எம்.ஆர்.பி. மூலம் விரைவாக நிரப்ப … Read more

அதிமுக ஒரே நாடு ஒரே தேர்தலால் பலிகடா ஆகும் : முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அதிமுக பலிகடா ஆகும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று சென்னையில் நடந்த திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார். முதல்வர் தனது உரையில் ”பாஜக அரசு இந்தியா கூட்டணியின் 3 கூட்டங்களைப் பார்த்துப் பயந்து போய் நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளது. சிலருக்கு திமுக குடும்பமாகச் செயல்படுவது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு … Read more

தனது குடும்பத்தை புறக்கணித்தவர் அடுத்தவர் குடும்பம் பற்றிப் பேசக் கூடாது : உத்தவ் தாக்கரே

மும்பை தனது குடும்பத்தை புறக்கணித்தவர் அடுத்தவர்களின் குடும்பத்தைப் பற்றிப் பேசக்கூடாது என உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். கடந்த 31 மற்றும் 1 ஆம் தேதிகளில் மும்பையில் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்  நடந்தது.  பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கூட்டணி வாரிசு அரசியல், ஊழலை ஒழிக்க விரும்புகிறது எனக் கூறியிருந்தார். இதையொட்டி மோடியின் பெயரை குறிப்பிடாமல் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்து உள்ளார். உத்தவ் தாக்கரே,  ”தனது சொந்த குடும்பத்தையே புறக்கணித்தவர்கள், அடுத்தவர்களின் குடும்பங்களைப் பற்றிப் பேசக் … Read more

இஸ்ரோ-வின் குரலாக ஒலித்த வளர்மதி மரணம்… சந்திரயான்-3 உள்ளிட்ட பல விண்கலங்களை ஏவ கவுண்ட்-டவுன் கூறியவர்…

2023 ம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பல்வேறு விண்கலங்களை ஏவி வருகிறது. சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட போது அதனை நேரலையிலும் தொலைக்காட்சியிலும் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். சந்திரயான்-3 கடைசி கட்ட கவுண்ட் டவுன் ஒலித்த போது அந்த குரலுடன் பல்லாயிரம் பேர் தங்களை அறியாமல் ஐக்கியமானார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த குரலுக்கு சொந்தக்காரரான இஸ்ரோ-வில் பணிபுரியும் வளர்மதி கடந்த ஆறு ஆண்டுகளாக இஸ்ரோ ஏவும் அனைத்து ராக்கெட்டுகளுக்கும் கவுண்ட்-டவுன் குரல் … Read more

ஓணத்தை முன்னிட்டு 7027 பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை

திருச்சூர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 7000க்கும் அதிகமான பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை புரிந்துள்ளனர். கேரள மாநிலத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று திருவாதிரை நடனம் ஆகும்  இந்த நடனம் ஓணம் பண்டிகையின் அங்கமாக நடைபெறுகிறது.  இந்த நடன விழாவில் திரளான பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடிப் பாடலுடன் ஆடலாய் கவனம் ஈர்ப்பார்கள். பெண்கள் எண்ணிக்கை அதிகமாக கூடுவதைப் பொறுத்து திருவாதிரை நடனத்தின் பிரமாண்டம் அமையும். திருச்சூர் குட்டநெல்லூர் அரசுக்கல்லூரி மைதானத்தில், மாவட்ட அளவிலான ஓணம் … Read more

தமிழக அரசின் நிதி உதவிக்கு நன்றி : தமிழக முதல்வருக்கு இமாசல முதல்வர் கடிதம்

சென்னை தமிழக அரசு இமாசலப் பிரதேசத்துக்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்கு அம்மாநில முதல்வர்  தமிழக முதல்வருக்கு நன்றிக் கடிதம் அனுப்பி உள்ளார்.  தமிழக அர்சு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப்பிரதேசத்திற்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்காக, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் தமது கடிதத்தில் , “தமிழக அரசு இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்குச் சவாலான நேரத்தில் வழங்கிய ரூ.10 கோடி நிதி பங்களிப்பிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். … Read more

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகலாம் என எச்சரித்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது சென்னை உட்படப் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வடக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனத் தகவல் தெரிவித்துள்ளது அதாவது வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி … Read more

மோடியை எதிர்த்து நேரடியாகப் போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவு ; சீமான்

கோயம்புத்தூர் ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டு அவருக்கு எதிராக நேரடியாக திமுக போட்டியிட்டால் தாம் ஆதரிக்க உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். இன்று கோயம்புத்தூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒஉர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.  அப்போது சீமான் செய்தியாளர்களிடம், ”கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை.  அதாவது 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி கட்சிகளுக்குத்தான் பெரும்பாலும் ஒதுக்கியது. திமுக தூத்துக்குடியில் மட்டுமே எதிர்த்துப் போட்டியிட்டது … Read more