ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து, அமமுக வேட்பாளரும் போட்டியில் இருந்து விலகல்…

ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இருந்து ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில்,  தொடர்ந்து, அமமுக வேட்பாளரும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு … Read more

இந்த ஆண்டு முதல் மீண்டும் சென்னையில் இருந்து மீண்டும் ஹஜ் பயணம்! புதிய கொள்கை திட்டம் வெளியீடு…

டெல்லி: சென்னையில் இருந்து மீண்டும் ஹஜ் பயணம் புறப்படும் வகையில்,  ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதனால் பயணி ஒருவருக்கு ரூ.50ஆயிரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, இஸ்லாமியர்களின் புனித பயணத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் வரை நடைபெற்ற விமான சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் இரந்து   ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு கூடுதலாக செலவினம் ஏற்பட்டது. … Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பிரபல கால்பந்து வீரர்கள் எங்கே? பலி எண்ணிக்கை 5,102 ஆக உயர்வு… இந்திய நிவாரண பொருட்கள் விநியோகிக்க தீவிரம்..

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக, பலியானவர்கள் எண்ணிக்கை இந்திய நேரப்படி இன்று மாலை 4மணி அளவில் 5102 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள பிரபல  கால்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் வீரர்கள் பலரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இந்திய மீட்புபணி வீரர்கள் மற்றும்  நிவாரணப் பொருட்கள் அங்கு சென்றடைந்துள்ள நிலையில், அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்தவற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு … Read more

போலி மதுபான ஆலை நடத்திய திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது!

மதுராந்தகம்: வெளியே அரிசி ஆலை  என பெயரிட்டுவி,.  உள்ளே சென்றால் போலி மதுபான ஆலை நடத்தி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவரும், திமுக தொண்டரணி செயலாளருமான வடிவேலு என்பவர்  கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலம் முழுவதும் தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து மக்களை குடிகாரர்களாக்கி வரும் நிலையில், ஆங்காங்கே கிராமப்புறங்களில், அரசியல் கட்சியினர் திருட்டுத்தனமாக மதுபானங்களை தயாரித்தும், புதுச்சேரி உள்பட பல பகுதிகளில் வாங்கி அதிக விலைக்கும் … Read more

தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைய வேண்டும்! மறைந்த ஜெ. உதவியாளர் பூங்குன்றன்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றுமறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின்  பூங்குன்றன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து மீண்டும் மீண்டும் தன்னை பரதன் என்று நிரூபித்து கொண்டிருக்கிற ஓபிஎஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய ஆசை, வேட்பாளர் தென்னரசு அவர்களுக்கு ஓபிஎஸ் அவர்கள் பணியாற்ற … Read more

சென்னையில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட 1,813 கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு! மாநகராட்சி தகவல்…

சென்னை:  குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் 13.01.2023 முதல் 03.02.2023 வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,98,500/-அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் 13.01.2023 முதல் … Read more

கணினி பொறியாளர்கள் நிறைய பேர் தேவைப்படுவார்கள்.! டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: எதிர்காலத்தில் கணினி பொறியாளர்கள் நிறையபேர் தேவைப்படுவார்கள். அதனால் கணினி படியுங்கள் என நிகழ்ச்சியில் பேசிய  டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். நாட்டில் தற்போது சைபர் குற்றங்கள் என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு டிஜிட்டல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் முதல் பெரிய இடத்தில் இருப்பவர்கள் வரையில் பலரிடமும்,  சைபர் குற்றவாளிகள் தனது கைவரிசையை செய்து வருகின்றனர். ஏராளமானோர் சைபர் குற்ற வலையில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளனர். அதனை குறிப்பிட்டு விழிப்புணர்வு … Read more

கொரோனா காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்த வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: கொரோனா காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி  பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,   இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  (7-2-2023) எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத … Read more

துருக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிதைந்து போன 2200ஆண்டு பழமையான காசியான்டெப் கோட்டை…

துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கி தரைமட்டமான நிலையில், பாரம்பரிம் மிக்க  2200 ஆண்டு பழமைவாய்ந்த காசியான்டெப் கோட்டையும் உடைந்து நொறுங்கி சிதைத்துபோனது. இந்த பாரம்பரியமான மற்றும் பழமையான கோட்டை  அண்மையில் புனரமைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில்,  தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பழமையான காசியான்டெப் கோட்டை தரைமட்டமானது. துருக்கியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருக்குலைந்தன. அதில், 2200 ஆண்டுகளுக்கு … Read more

திமுகவின் பி-டீமாக செயல்படும் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஐ சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை! ஜெயக்குமார்

சென்னை:  திமுகவின் பி-டீமாக இருந்து வரும் பன்னீர்செல்வம் ஈபிஎஸ் ஐ சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை”  என அதிமுக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஈரோடு இடைத்தேர்தல் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இபிஎஸ் அறிவித்த வேட்பாளர் தென்னரசு களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவு கேட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பும் ஆதரவு தரும் என கூறிய நிலையில், வேட்பாளர் பெயரை கூறாமல் … Read more