எத்தனை பேர் எடப்பாடிக்கு ஆதரவு? தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை சமர்ப்பித்தார் தமிழ்மகன் உசேன்…

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுபடி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் உள்ள அகில இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். முன்னதாக, ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற்றார். ‘ அதிமுகவில் நிலவி வரும் பிரச்சினை காரணமாக, ஈரோடு இடைத்தேர்தலில் இரு தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தியது. இதனால் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக எடப்பாடி தொடர்ந்த வழக்கில், … Read more

வழக்கறிஞர் கவுரி உள்பட 5 பேரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு!

சென்னை: வழக்கறிஞர்  விக்டோரியா கவுரி உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.   உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் எட்டு பேரை பரிந்துரை செய்த நிலையில், 5 பேரை மத்தியஅரசு குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூடு தலைமையில்  கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்து … Read more

ரூ.1057 கோடி மதிப்பிட்டில் தமிழ்நாட்டிற்கு 9 புதிய ரயில் பாதைகள்! மத்திய பட்ஜெட்டில் தகவல்…

டெல்லி:  40 ஆண்டுகளுக்குப்பின், தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் வழித்தடம் மற்றும்  ரயில்பாதைகள் விரிவுபடுத்த  2023-24 மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு (2022) தாக்கல் செய்த பட்ஜெட்டிலும்,  தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்,  46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன கூறியிருந்தது. அதுபோலவே இந்த ஆண்டும், அதே அளவிலான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 1ந்தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் … Read more

தமிழக ரயில் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு – போதுமான நிதி ஒதுக்கிடு செய்யவில்லை! மதுரை எம்.பி. குற்றச்சாட்டு

மதுரை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். பிப்ரவரி 1ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ரூ. 2.40 லட்சம் கோடி  ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதில்,  தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் வழித்தடம் மற்றும்  ரயில்பாதைகள் விரிவுபடுத்த  ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மத்திய … Read more

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300ஆக உயர்வு… இந்தியா உதவிக்கரம்…

துருக்கி, சிரியாவில் இன்று அதிகாலையில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், துருக்கிக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த சூழலில் இன்று பிற்பகல் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று அதிகாலை  7.8 ரிக்டர் அளவில் … Read more

ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி: பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளரை தூக்கிய திமுக…

சென்னை:  பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து  திமுகவில் இணைந்தார்.  அவருடன் ஈரோடு நிர்வாகிகளும் இணைந்தனர். ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு இந்த அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது. தமிழக பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்து வருபவர் என்.விநாயகமூர்த்தி. இவர் சமீப நாட்களாக கட்சி மீது அதிருப்தியில் இருந்த நிலையில், இன்று  அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன்,  … Read more

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை: ஆளுநரே பொறுப்பு என அன்புமணி காட்டம்…

சென்னை: மதுரையில் இன்று ஆன்லைன் ரம்மியால் இளம் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மதுரை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மதுரையைச்சேர்ந்த மகாலட்சுமி – முத்துராமன் தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளான குணசீலன் (26), பசுபதி (25), கமல் (23) ஆகிய மூன்று பேரும் பாட்டி தமிழரசியின் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் – வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு…

ஈரோடு:  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத்தால் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளையுடன்  வேட்புமனு தாக்கல்  நிறைவடைகிறது. முன்னதாக, இன்று ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்  விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இடைத் தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  அதிமுக வேட்பாளராக தென்னரசு நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக … Read more

அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை:  செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டிடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.42.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டடம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டிடங்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  அடிக்கல் நாட்டினார். அதனப்டி,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.15.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய … Read more

ஒருதலைப்பட்சமான பயிர் சேதம் கணக்கெடுப்பு: அழுகிய பயிருடன் விவசாயிகள் சாலை மறியல்

தஞ்சாவூர்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர் கணக்கெடுப்பில், வருவாய்துறை அதிகாரிகளின் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும், ஒருதலைப்பட்சமாக கணக்கெடுத்தாகவும் குற்றம் சாட்டி,  தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தில் இன்று காலை கையில் அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் பெய்த தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி நெற்கதிர்கள் மற்றும் மானாவாரி பயிர்கள் சேதம் அடைந்துவிட்டது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் மாநில அரசுக்கு … Read more