பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு – 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என, பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்ததை அடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டு உள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ -இன்சாப் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் … Read more

ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை 7வது முறையாக தட்டிச் சென்றது ஆஸ்திரேலியா

நியூசிலாந்து: நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற 2022 ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. அந்த அணி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் வெல்லும் ஏழாவது சாம்பியன் பட்டம் இது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறையில் முதல் சுற்று நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி … Read more

பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்கம்

பஞ்சாப்:  பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்க செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்கம் செய்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் நாதசு செய்தித்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி, புதிய ஆளுநர் நியமனம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் … Read more

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமனம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்கம் செய்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் நாதசு செய்தித்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி, புதிய ஆளுநர் நியமனம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு

இஸ்லாமாபாத்: நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார். இந்த நிலையில், பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் … Read more

மன்மத லீலை: சினிமா விமர்சனம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘மன்மத லீலை’. நடித்தவர்கள், இசை அமைத்த பிரேம்ஜி, ஒளிப்பதிவு செய்த தமிழ் அழகன் எல்லோரும் படத்துக்கு பலம். ஆனால் படமே பலமாக இல்லையே! சொதப்பலான கதை, திரைக்கதை, இயக்கம் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு. இதனால் பட உருவாக்கத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் உழைப்பும் வீண். இடைவேளைவரை அசோக் செல்வன், யாராவது ஒருவருடன் குடித்துக்கொண்டே இருக்கிறார். இப்படி குடித்தால் உயிரோடே … Read more

பீஸ்ட் ட்ரெய்லர்: இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களே நெட்டிசன்கள்!

நெல்சன் திலீப்குமார் இயக்கதிதல் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று திரையரங்குகள் மற்றும் யூ-ட்யூபில் … Read more

துவங்கியது ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’!

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், இயக்குநர் வம்சி ஆகியோரின் கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக தொடங்கியது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தின் தொடக்க விழா மாதப்பூரிலுள்ள நோவாடெல் என்னுமிடத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விழா மேடையில் நடைபெற்றது. தெலுங்கு திரை உலகம் இதற்கு முன் … Read more

காய்கறி விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: காய்கறி விலை தீடீர் என்று உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 30ம் தேதி ரூ.6க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.15க்கு விற்பனையாகிறது. பீன்ஸ் விலை இருமடங்காக உயர்வு-ரூ.40க்கு விற்பனையான பீன்ஸ் தற்போது ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.7-12 வரை விற்பனையான வெண்டைக்காய் தற்போது ரூ.30-35க்கு விற்பனையாகிறது. திடீரென காய்கறி விலை உயர்ந்துள்ளதால். பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்ற செய்தி நேற்று வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்த கல்வித்துறை, தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்றும், பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.