வெளிநாட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை பணம் பெறலாம் FCRA விதிகளை திருத்தியது மத்திய அரசு

வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ஓராண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பலாம் என்று வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை (எப்.சி.ஆர்.ஏ.,) மத்திய அரசு திருத்தியுள்ளது. இதுவரை ஓராண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் என்று இருந்த உச்ச வரம்பை 10 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக பணம் பெரும் இந்தியர்கள் 30 நாட்களுக்குள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற காலக்கெடுவையும் 90 நாட்களாக மாற்றியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மத்திய … Read more

தமிழ்நாட்டில்  சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில்,  சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூலை 2) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, … Read more

தமிழ்நாட்டில் இன்று 2533 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 1059 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1059, செங்கல்பட்டில் 393, திருவள்ளூரில் 142 மற்றும் காஞ்சிபுரத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 117, கன்னியாகுமரி 88, திருச்சி 72, திருநெல்வேலி 70, தூத்துக்குடி 62, மதுரை 50, ராணிப்பேட்டை 41, சேலம் 38, ஈரோடு 34, விழுப்புரம் 27, சிவகங்கை 25, கிருஷ்ணகிரி 19, விருதுநகர் 17, பெரம்பலூர் மற்றும் தென்காசியில் தலா 16 பேருக்கும், … Read more

உதய்பூர் படுகொலை தொடர்பான பதிவுகளை உடனே நீக்குங்கள்! சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: நூபுர் ஷர்மாவை தொடர்ந்து, பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட உதய்ப்பூர் படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அது தொடர்பான பதிவுகளை உடனடியாக நீக்கி, தடை செய்ய வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களுக்கு  மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. டைம்ஸ் நவ்,  ஆங்கிலத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பயங்கரவாதிகள் இருவர், உதய்ப்பூரில் டெய்லர் … Read more

சர்ச்சை கருத்து: நூபுர் சர்மா மீது கொல்கத்தா போலீஸ் லுக்அவுட் நோட்டீஸ்…

கொல்கத்தா: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, நூபுர்சர்மா மீது கொல்கத்தா காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளது. தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில்  ஞானவாபி மசூதி தொடா்பான விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா பேசிய கருத்து சர்ச்சையானது. இதுகுறித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்மீது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நூபுர் சர்மா மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.  மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை … Read more

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ…

‘சாணிக்காயிதம்’ இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 1930 க்கும் 40 க்கும் இடைப்பட்ட காலத்தில் மெட்ராஸ் ப்ரெசிடெண்சியில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்க இருக்கிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு ஷ்ரேயஸ் கிருஷ்ணா, … Read more

ஆன்லைனில் சொத்துவரி செலுத்தினால் சினிமா டிக்கெட் ஃபிரி! சென்னை மாநகராட்சி

சென்னை: ஆன்லைன் மூலம் சொத்துவரி செலுத்தி வரி செலுத்தி வங்கி நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ்பேக், வவுச்சர், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகளைப் பெறலாம் என்று சென்ன மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சொத்துவரி வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதன்படி சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 27-ம் தேதி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு … Read more

நூபுர் சர்மா குறித்து உச்சநீதி மன்றம் – சசிகலா சொத்து முடக்கம் குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

சென்னை; நூபுர் சர்மா குறித்து உச்சநீதி மன்றம் கடுமையாக விமர்சித்து, அவரை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டு உள்ளது. அதுபோல  சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம் குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது. ஆடியோ https://patrikai.com/wp-content/uploads/2022/07/pari-cartoon-Audio-2022-07-02-at-5.00.42-PM.ogg

காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்புள்ள செருப்புகள்! பக்தர்கள் காணிக்கை!

நெல்லை: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்பில் செருப்புகளை பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ளனர். தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் (Nellaiappar Temple). இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயமும் ஒன்று. இது தாமிர அம்பலமாக கருதப்படுகிறது. இத்திருக்கோவிலில் வளர்க்கப்படும் காந்திமதி … Read more

நூபுர் ஷர்மா விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களை திரும்பப் பெற மனு தலைமைநீதிபதியிடம் மனு…

டெல்லி: நபிகள் நாயகம் தொடர்பாக கருத்து தெரிவித்த, நுபுர் ஷர்மா மீதான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நீதிபதிகளின்  எதிர்மறையான கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. நூபுர் ஷர்மா தொடர்பான வழக்கை விசாரித்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள், சூர்யாகாந்த் மற்றும் ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால சட்ட அமர்வு கடுமையாக விமர்சனம் செய்தது. இந்த … Read more