சென்னையில் 4ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு – 90ஆயிரம் பேருக்கு வேலை! அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: சென்னையில் வரும் 4ம் தேதி மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு  நடைபெற உள்ளதாகவும், அதில், 90ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னையில்  அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. கடந்த ஓராண்டில் 2.26 லட்சம் பேருக்கு … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்குவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது. குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ந்தேதி நடைபெற உள்ளது. அதுபோல துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்  ஆகஸ்ட் 6 ஆம்  தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 12ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மக்களவை செயலகம்  வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை … Read more

தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள்! மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள் கொண்ட வாகனத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின்சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தடயவியல் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதலமைச்சர் … Read more

சிங்கப்பூர் நிறுவனத்துடன் செமிக்கண்டக்டர் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்! ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை:  சிங்கப்பூர் நிறுவனத்துடன் செமிக்கண்டக்டர் உயர் தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (IGSS Ventures – IGSSV), தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் ரூ. 25,600 கோடி மதிப்பீட்டில் ஒரு செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்பப் பூங்காவை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் சார்பாக வழிகாட்டி நிறுவனத்துக்கும் ஐ.ஜி.எஸ்.எஸ். வென்ச்சர்ஸ் இடையே உயர் தொழில் … Read more

தஞ்சையில் காணாமல் போன 300ஆண்டு புராதன தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

லண்டன்: தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் இருந்து திருடப்பட்ட பழமையான தமிழ் பைபிள், லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட 300ஆண்டு பழமையா புதியஏற்பாடு என்ற அந்த புராதன பைபிள், தற்போது லண்டனில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் என்பவர், நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முறையாக தமிழில் மொழி பெயர்த்தார். இந்த பைபிளில் தஞ்சை மன்னராக இருந்த சரபோஜி மன்னரின் கையெழுத்திட்டிருந்தார். சுமார்  300 … Read more

‘டிபேட்’ விவகாரம்: ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி ஊடகத்தை கடுமையாக சாடிய உச்சநீதி மன்றம்…

சென்னை: நூபுர் சர்மா விவகாரத்தில், சர்ச்சைக்குரிய வகையில்  கியான்வாபி மசூதி தொடர்பாக விவாதம் நடத்திய டைம்ஸ்நவ் ஊடகத்துக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன், இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவாதங்களை நடத்திய ஊடகவியலாளர் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறியது. சமீப காலமாக தொலைக்காட்சி ஊடகங்களில் ‘டிபேட்’ என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி, அதனால், நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வு, சர்ச்சைகளை ஏற்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஊடகங்கள், தங்களின் வளர்ச்சிக்காக இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்பி … Read more

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையில் ரூ.750 கோடி மோசடி! அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையில் ரூ.750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜு. அவரது தலைமையின் கீழ் கூட்டுறவுத்துறையில்  பல மோசடிகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கூட்டுறவுத்துறையின் ஊழல்கள் கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியாசமி கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ. … Read more

கொரோனா அதிகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தைத் தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது கொரோனாவில் 4வது அலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், தொற்று பரவலை … Read more

ஜூலை 5ந்தேதி தமிழகம் முழுவதும் பாஜக உண்ணாவிரத போராட்டம்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை  கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும்  வரும் 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். தி.மு.க. அரசு தேர்தலின்போது  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். மக்கள் … Read more

எம்.பி.க்களின் கடந்த 5ஆண்டு ரயில் பயண செலவு எவ்வளவு தெரியுமா?

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள், இந்நாள் எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி என இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியே தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) ரெயில்களில் முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும். இதைப்போல முன்னாள் எம்.பி.க்கள் 2-ம்வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனது துணையுடனோ அல்லது … Read more