அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடும் யமுனை நதி… வீடுகளுக்குள் வெள்ளம் – பொதுமக்கள் வெளியேற்றம்…

டெல்லி: யமுனை நதி தனது அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக கரையோர  வீடுகளுக்குள் வெள்ளம்  புகுந்த நிலையில்,   பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழைக்குப் பிறகு யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதால், டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், நீர்மட்டம் உயர்ந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட வைஷ்ணோ தேவி யாத்திரை தொடங்காததால் 7000 பக்தர்கள் அவதி…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணோ தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் 35 பேர் பலியானார்கள் 22 பேர் படுகாயமடைந்தார்கள். ஒரு வாரம் ஆன நிலையிலும் அந்த இடத்தை சீரமைக்கும் பணி இன்னும் நிறைவு பெறாததை அடுத்து வெளிமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். யாத்திரை தொடங்குமிடமான கத்தாராவில் மட்டும் சுமார் 7000 யாத்ரீகர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பலர் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே … Read more

இந்தோனேசியாவில் நடந்த வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு 20 பேர் மாயம்

இந்தோனேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆடம்பர சலுகைகள் தொடர்பாக வன்முறை போராட்டம் வெடித்ததை அடுத்து குறைந்தது 20 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராகப் பொறுப்பேற்ற முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபியாண்டோ-வுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக இது உருவெடுத்தது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை திரும்பப்பெறுவதாக பிரபோவோ சுபியாண்டோ அறிவித்தார். ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் துணை ராணுவ போலீஸார் ஒரு இளம் டெலிவரி டிரைவரைக் கொல்வது … Read more

ஜப்பானில் ஷின்கான்சென் உள்ளிட்ட புல்லட் ரயில் சேவைகள் ரத்து… காரணமென்ன ?

கனமழை காரணமாக வடகிழக்கு ஜப்பானில் ஷின்கான்சென் உள்ளிட்ட சில புல்லட் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன, செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், இப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படும் என்று வானிலை நிறுவனம் எச்சரித்தது. செப்டம்பர் 2 ஆம் தேதி பிற்பகலில் ஓமகாரி மற்றும் அகிதா நிலையங்களுக்கு இடையில் மழை காரணமாக அகிதா மாகாணத்தில் உள்ள ஷின்கான்சென் புல்லட் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஜேஆர் ஈஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த … Read more

ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது என தமிழ்நாடு அரசு  உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, கடந்த காலத்தில் எந்த அரசியல் ஆட்சி எந்தக் காலத்தில் என்ன செய்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குடியரசுத் தலைவரின் குறிப்பை நாங்கள் முடிவு செய்யப் போவதில்லை என்று தலைமை நீதிபதி கூறினார். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு எதிராக குடியரசு தலைவர் மூலம் கேள்வி எழுப்பிய தொடர்பான வழக்கு … Read more

சென்னை புரசைவாக்கம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை….

சென்னை: சென்னையில்  புரசைவாக்கம் உள்பட  10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆகஸ்டு 30ந்தேதி அன்று தங்க வியாபாரம் முறைகேடு தொடர்பாக பூக்கடை , மீனபாக்கம் உள்பட பல இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி … Read more

நீர்வீழ்ச்சியில் குதித்து வாழ்வை முடித்துக்கொள்ள வந்த தொழிலதிபர்… ஆறுதல் கூறி தேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்த நல்ல உள்ளங்கள்…

நீர்வீழ்ச்சியில் விழுந்து வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் வந்த நபரை ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகில் உள்ளது ஜோக் பால்ஸ். இந்தியாவின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியான இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். சமீபத்தில் ஜோக் பால்ஸ் வந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஆட்டோவில் ஏறி அந்த பகுதியில் சுற்றியுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனரிடம் அங்குள்ள அபாயகரமான மற்றும் உயரமான இடங்கள் … Read more

மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும்! மதுரை ஆட்சியரிடம் ஆதீன இளைய தம்பிரான் புகார்..

மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும் என வலியுறுத்தி  மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்பிரான், ஆதீனம்மீது புகார் கூறி   மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதரின் மறைவுக்குப் பிறகு ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மதுரை ஆதினத்தின் 293ஆவது  மடாதிபதியாவார். அதாவது,   மதுரை குருமகா சந்நிதானத்தின் 293ஆவது சன்நிதானமாக,  ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ … Read more

‘டெட்’ கட்டாயம்: ஆசிரியர்கள் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘டெட் தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஆசிரியர் பணிக்கு ‘டெட்’ தேர்வு கட்டாயம்   என்பதை உறுதிபடுத்தி உள்ள உச்சநீதிமன்றம்,  ஆசிரியர்கள்  பணியில் தொடர தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில்,  5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் தேர்வு எழுத வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதுடன்,  தேர்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று  ஏற்கனவே சென்னை … Read more

உதயநிதி ஸ்டாலின் மீதான சனாதன வழக்கு 2026க்கு ஒத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் தாராளம்….

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி மீதான  சனாதன தர்மம் குறித்த வழக்கின் விசாரணை 2026 பிப்ரவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விரிவான விசாரணைக்காக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இந்துக்கள் மனதை புண்படுத்திய நிலையில், அவர்மீது தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து உதயநிதி தாக்கல் செய்த மனுவில், மற்ற மாநிலங்களில் உள்ள மனுவை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும், தன்மீதான … Read more