கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு…

டெல்லி: கேரளா அரசின் பரிந்துரையை ஏற்று 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தர்கள்  நியமனம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  துணைவேந்தர்கள் விவகாரத்தில்,  கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது;  இதையடுத்து புதிய துணைவேந்தர்களாக சஜி கோபிநாத், சிசா தாமஸ் ஆகியோர் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே மோதல் … Read more

தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் அரசுக்கு மற்றொரு கண்! காலநிலை மாற்றம் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது அரசுக்கு மற்றொரு கண் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின்,  இந்தியாவுக்கு வழிகாட்டும் நிலையில் தமிழகம் இருக்கிறது  என்றவர், அரசு எடுத்த முன்னெச்சரிக்கையால் டிட்வா புயல் சேதம் தவிர்க்கப்பட்டது  என சென்னையில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியில்  தெரிவித்தார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான குழுவின் 3வது கூட்டம், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அப்போது இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு … Read more

அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து,  தமிழ்நாடு அரசு பதில் அளிக்க  உத்தரவிட்டு உள்ளது. திமுக அமைச்சர் நேருவின் துறையான நகராட்சி துறையில், அரசு பணிக்கு ரூ.35லட்சம் பணம் பெற்றதாகவும், குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது மற்றும் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மாநில டிஜிபிக்கு கடிதம் … Read more

அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்! ராமதாஸ் தலைமையிலான பாமக நிர்வாக குழுவில் தீர்மானம்!

விழுப்புரம்: அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தைலாபுரத்தில் பாமக நிறுவனர்  ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற  பாமக நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையோ அலையோ என அலைகிறார் அன்புமணி என ராமதாஸ் தரப்பில் கடுமையாக விமர்சித்ததுடன், “அன்புமணி ராமதாஸ் இல்ல.. அன்புமணி மட்டும்தான்.. என் பெயரை பயன்படுத்தக் கூடாது” என்றும் கறாராக ராமதாஸ் கூறியுள்ளார்.  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்  இன்று சென்னை … Read more

காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது! ப.சிதம்பரம்

சென்னை: காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது  என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார். மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில்,   காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் மத்திய அரசு  டிசம்பர் 16ந்தேதி புதிய  மசோதாவை  அறிமுகம் செய்தது.  … Read more

முதல்வர் ஸ்டாலின் டிச.20, 21ந்தேதி நெல்லையில் சுற்றுப்பயணம் – பொருநை அருங்காட்சியகம் திறப்பு! அமைச்சர் நேரு தகவல்..

நெல்லை: முதல்வா் ஸ்டாலின் டிச.20, 21இல் நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது,  பொருநை அருங்காட்சியகத்தை திறப்பு உள்படபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என அமைச்சர் நேரு கூறினார். தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வரும் 20, 21 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் என்று நகராட்சி நிா்வாகத் துறை – திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு. கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை விஜயத்திற்காக,  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி … Read more

பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சோகம்! இது திருவள்ளூர் சம்பவம்…

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால்  மாணவன் உயிர் பறிபோயுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில்  அமர்ந்து  உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென பள்ளியின்  பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் மோகித் உயிரிழந்தார். இந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், … Read more

சென்னை முதல் தூத்துக்குடிவரை இன்றுமுதல் 2 நாள் மழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் தகவல்

சென்னை: சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக  தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கூடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் … Read more

நாளை வேலூர் பொற்கோயிலுக்கு வருகை தருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

சென்னை: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை பிரச்சித்தி பெற்ற வேலூர் பொற்கோயிலுக்கு வருகை தருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நாளை (டிச.17) தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேலூர் பொற்கோவிலில் வழிபாடு நடத்தவுள்ளார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு வேலூர், ஸ்ரீபுரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் டிசம்பர்  டிசம்பர் 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, … Read more

பணிகள் நிறைவு: வேளச்சேரி – பரங்கிமலை ரயில் நிலையம் வரையிலான சோதனை ஓட்டம் வெற்றி…

சென்னை: சென்னை கடற்கரை-வேளச்சேரி-பரங்கிமலை மின்சார ரயில் பாதை இணைப்புப் பணிகள் நிறைவடைந்து, 5 கி.மீ. தூரத்திற்கு சரக்கு ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது.  இந்த சோதன ஒட்டம் வெற்றிபெற்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சுமார் 17 ஆண்டுகள் நீடித்து வந்த இந்த பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை கடற்கரை – வேளச்சேரி உயர்மட்டப் பாதையில் (MRTS)  தற்போது தினசரி 100 மின்சார ரயில் சேவைகள் … Read more