தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே PM SHRI நிதி விடுவிக்கப்படும்! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் அறிவிப்பு

டெல்லி: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே PM SHRI நிதி விடுவிக்கப்படும் என கேரள எம்.பி.யின் கேள்விக்கு  நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது,  பிஎம்ஸ்ரீ நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ்    கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள … Read more

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதுமுதலே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினசரி ஒவ்வொரு புகார்களை கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இநத நிலையில்,  நாடாளுமன்ற வளாகத்தில்  முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லியில் அதிகரித்து காற்று மாசுபாட்டை … Read more

மாம்பழம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்! சிவில் நீதிமன்றத்தை நாட ராமதாசுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பாமக யாருடையது என்பது குறித்து விசாரிக்க சிவில் நீதிமன்றத்தை நாட  டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. விசாரணையின்போது, மாம்பழம் சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்னா முன்பு விசாரணை நடைபெற்றது. அன்புமணி தரப்பில் ஆஜரான … Read more

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

டெல்லி: ரஷ்ய அதிபர் புதின்  அரசுமுறைப் பயணமாக இன்று  மாலை இந்தியா வருகிறார்.  அவரது பயணம்இரு நாட்கள் என திட்டமிடப்பட்டஉள்ளது. ஜனாதிபதி புடின் இன்று மாலை  தலைநகர் டெல்லிக்கு வர உள்ளார். அவர் வந்த சில மணி நேரங்களுக்குள், பிரதமர் மோடி அவருக்கு ஒரு தனிப்பட்ட இரவு விருந்தை வழங்குவார், ஜூலை 2024 இல் பிரதமர் மோடியின் மாஸ்கோ பயணத்தின் போது ரஷ்யத் தலைவர் செய்த அதே போன்ற செயலுக்கு ஈடாக. இந்த இரவு உணவு முறைசாராதாக … Read more

தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டும் ஏரிகள்! செம்பரம்பாக்கம், பூண்டி, புழலில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்பட பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, செம்பரம்பாக்கம், பூண்டி,  புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு அதிகரித்துள்ளதால், ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இரக்கும்படி அடிவுறுத்தப்பட்டு உள்ளது.  இந்​திய வானிலை ஆய்வு மையம், சென்னை  திரு​வள்​ளூர், காஞ்சிபுரம்  மாவட்​டத்​துக்கு கனமழைக்​கான எச்​சரிக்​கையை … Read more

மாலை 5மணி விசாரணையின்போது, அறநிலையத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லையே ஏன்? திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்  தொடர்பான  நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவில் இன்றே தீர்ப்பு  வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்து உள்ளது. ஒரு தரப்பினர் தங்கள் மதச் செயல்பாட்டைச் செய்வதைத் தடுப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை அடைய முடியாது. சகவாழ்வால் மட்டுமே அதை அடைய முடியும். வருடத்திற்கு ஒரு முறை, யாரையும் பாதிக்காமல் விளக்கேற்றினால், அவர்களை அனுமதிப்பதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?  என  விசாரணையின்போத நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி … Read more

சாத்தான்குளம் அருகே பயங்கரம்: பெண் போலீஸ் ஆய்வாளர் கணவர் வெட்டிப்படுகொலை!

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தன் தருவை பகுதியைச் சேர்ந்தவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மெட்டில்டா. இவரது கணவர் ஜேம்ஸை அதே பகுதியில் வைத்து மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு … Read more

திமுக ஆட்சியில் பங்கு கேட்டீர்களா? செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் எஸ்கேப் ஆன செல்வபெருந்தகை …

சென்னை: திமுக ஆட்சியில் பங்கு கேட்டீர்களா?  என  தொகுதி பங்கீடு குறித்து  திமுக தலைமையிடம்  பேசிய செல்வபெருந்தகையிடம் செய்தியாளர்கள்  கேட்டதற்கு, பதில் கூறாமல் எஸ்கேப் ஆனார். இதன் காரணமாக, திமுகவை மீண்டும் தோளில் சுமக்க தேசிய கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணி குழு அமைத்தவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என செல்வப்பெருந்தகை கூறிவிட்டு சென்றார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, நேற்று … Read more

நாடு முழுவதும் ‘உபா’ சட்டத்தில் 2,900 பேர் கைது! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் ‘உபா’ சட்டத்தில் 2,900 பேர் கைது  செய்யப்பட்டு இருப்பதாக  நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு  தெரிவித்துள்ளது. அதிகபட்சம் பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது  பாலக்காடு காங்கிரஸ் எம்பி ஷாபி பரம்பில் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:- பயங்கரவாத செயல்கள் மற்றும் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உபா சட்டத்தின் … Read more

பராமரிப்பு பணி: இந்த மாதம் வைகை உள்பட 16 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் – விவரம்

சென்னை: பராமரிப்பு பணி  காரணமாக  இந்த மாதம் வைகை உள்பட 16 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் பல இடங்களில் டிசம்பர் மாதத்தில் ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், வைகை உள்பட 16 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதன்விவரம் வருமாறு: போத்தனூர்- சென்னை சென்ட்ரலுக்கு டிச.8-ம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (06124) வழியில் … Read more