பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கு டிச.31ம் தேதி வரை நீட்டிப்பு! மத்திய அரசு உத்தரவு!!

டெல்லி : பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு அளிக்கப்பட்டுள்ள தற்காலிக விலக்கு டிசம்பர்.31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை மத்திய அரசு டிசம்பர் 31, 2025 வரை நீட்டித்துள்ளது. இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்க, மத்திய அரசு ஆகஸ்ட் 19, 2025 முதல் செப்டம்பர் 30, 2025 வரை பருத்திக்கான இறக்குமதி வரியை தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளது. அமெரிக்காவின் 50% வரி அமலுக்கு வந்ததுள்ள … Read more

அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது, கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது  என முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். மத்தியஅரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு ஜவுளி சந்தையில் பேரிழப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்திக்க உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனா். தமிழ்நாட்டில், ஈரோடு, திருப்பூர் பகுதிகள் ஆயத்த தடை தயாரிப்பில் முன்னணியில் இருப்பதால்,  … Read more

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வந்த பெண் ஓய்வு நாட்களில் வேறு இடத்தில் ஒளிவுமறைவாக வேலை செய்ததால் ரூ. 9 லட்சம் அபராதம்

சிங்கப்பூரில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து வரும் பிடோ எர்லிண்டா ஒகாம்போ என்ற பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் S$13,000 (தோராயமாக ரூ.8.8 லட்சம்) அபராதம் விதித்துள்ளது. 53 வயதான ஒகாம்போ 1994ம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட நான்கு வெவ்வேறு நிறுவனங்கள் மூலம் சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக பணிபுரிந்து வந்தார். ஒளிவுமறைவின்றி ஓரிடத்தில் வேலை செய்து வந்த ஒகாம்போ வார விடுமுறை நாட்களில் தனது எஜமானருக்கு தெரியாமல் வேறு இரண்டு சிங்கப்பூரர் நபர்களின் வீடுகளில் வேலை … Read more

சென்னை எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம்!

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை  எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை எழிலகம் வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை  நடத்தி … Read more

‘மூளையை தின்னும் அமீபா’ குறித்து பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ‘மூளையை தின்னும் அமீபா’ குறித்து பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நீர்மூலம் பரவும் இந்த யோய் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கண்டறியப்பட்டு உள்ளது.  தற்போது 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த … Read more

எங்க ஊரு சொர்க்க பூமிங்க… .இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க…! டிரெண்டிங்கான கூமாபட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.10கோடி ஒதுக்கீடு…

சென்னை; எங்க ஊரு சொர்க்க பூமிங்க”….இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க…!   என சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான கூமாபட்டி வளர்ச்சிக்கு  தமிழ்நாடு அரசு ரூ.10கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான்  இயற்கை கொஞ்சும் இடத்தில்,  இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த இடமானது,   பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணையுடன் மலையடிவாரத்தில் இந்தக் கிராமம் அமைந்திருப்பதால், கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகளைக் கொண்டுள்ளது. … Read more

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது! மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்…

சென்னை: ரஜினி நடித்துள்ள கூலி படத்துக்கு யு/ஏ சான்று கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம்,  தள்ளுபடி செய்தது. ‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரி, படத்தை தயாரித்த நிறுவனம் சார்பில்   சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவை  தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக,  எம்.ஜோதிபாசு என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்தின் சாா்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் … Read more

‘ஆபாச நடத்தை’ தொடர்பான புகார்களை அடுத்து பெண்களை ‘பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக’ கேரள எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் மீது சமூக ஊடகங்கள் மூலம் பெண்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், இதனால் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், மலையாள நடிகரும் முன்னாள் பத்திரிகையாளருமான ரினி ஆன் ஜார்ஜ் உள்ளிட்ட பல பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மம்கூத்ததில் ராஜினாமா செய்தார். பின்னர், ஆகஸ்ட் 25 ஆம் … Read more

நாளை புறப்படுகிறார்: பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்….

பெய்ஜிங் :  பிரதமர் மோடி 4 நாட்கள் பயணமாக நாளை (ஆகஸ்டு 29) வெளிநாடு பயணமாகிறார்.  அவரது இந்திய பயணம், ஜப்பான்  மற்றும் சீனாவுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. சீனாவின் தியன்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்கிறார். பிரதமர் மோடி 8வது முறையாக தற்போது மீண்டும்  ஜப்பான் செல்வது அவரது சீனாவின் தியன்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி  மாநாடு ஆகஸ்டு ம் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு … Read more

சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24மணி நேர பாதுகாப்பு – சனி, ஞாயிறுகளில் கடலில் கரைப்பு…

சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் இந்த சிலைகள் சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் நீர்நிலைக்களில் கரைக்கப்படும் என காவல்துறை அறிவித்து உள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், மாநிலம் முழுதும், 35,000 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.  இந்த  சிலைகள் பாதுகாப்பு … Read more