திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்த “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்… முழு விவரம்

சென்னை:  திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்த “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை  பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளில், நான்கரை ஆண்டுகள் ஆகியும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை  வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு அரசு திட்டங்களுக்கான   நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது என்று தெரிவித்து உள்ளதுடன், இந்திய அளவில்,  தமிழ்நாடு கல்வியில் 20-ஆம் இடம், … Read more

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாகி உள்ளது. இதன் கேரளாவுக்கு நல்ல மழையும் தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடற்கரைக்கு அருகே, வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் … Read more

தொடரும் கனமழை: ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவு, பாலம் இடிந்து விழுந்தது – கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு… வீடியோ

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாவி பகுதியில் பாலம் இடித்து விழுந்தது. கனமழை காரணமா எற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான  வீடியோ வைரலாகி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது. மாநிலத்தின் … Read more

செப்டம்பர் 7-ந்தேதி சந்திர கிரகணம் – சென்னை மக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்! திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடல்…

திருமலை: செப்டம்பர்  7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அன்றைய தினம் கிரகணம் சென்னையில் முழுமையாக தெரியும், பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் என  அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை யொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. செப்டம்பர்  7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது, சூரியன், பூமி, … Read more

தவெக மதுரை மாநாட்டில் விஜய் ரசிகர் பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்ட கொடூர சம்பவம்! காவல்துறையில் புகார்…

மதுரை: மதுரையில் நடிகர் விஜய் நடத்திய தவெக மாநாட்டில் அவரை பார்க்க சென்ற ரசிகர் பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்ட கொடூர சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், தூக்கிய எறியப்பட்டதால் காயமடைந்த அந்த ரசிகர் தனது தாயாருடன் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ம் தேதி  பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில்தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த … Read more

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான தமிழ்நாடு அரசின் மிக நீளமான மேம்பாலம் கட்ட ரூ. 2100 கோடி மதிப்பீடு

கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 14.2 கி.மீ நீளமுள்ள நான்கு வழி மேம்பாலம் ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் தனியார் கூட்டாண்மை மூலம் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) இதை நிறைவேற்றும். தமிழ்நாடு அரசு கட்டவுள்ள மிக நீளமான மேம்பாலத் திட்டமான இதன் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற காரணங்களால் இறுதி திட்டச் செலவு அதிகரிக்கக்கூடும் … Read more

15 மண்டலங்களிலும் ABC மையம்… டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு (ABC) மையங்கள் டிசம்பர் மாதத்திற்குள் அமைக்கப்படும் என்று சென்னை மேயர் ஆர். பிரியா உறுதியளித்தார். தற்போது, ​​நகரில் ஐந்து ஏபிசி மையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. தெருநாய் மோதல் குறித்து நாடு தழுவிய விவாதம் நடைபெறு நிலையில் இதனை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கவுன்சில் கூட்டத்தில், துணை மேயர் மகேஷ் குமார் மேயர் மற்றும் இணை ஆணையர் (சுகாதாரம்) வி.பி. ஜெயசீலனிடம், ராட்வீலர் மற்றும் பிட்புல் போன்ற … Read more

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவிப்பு….

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவித்து உள்ளார். அஸ்வின் ரவிச்சந்திரன்  ஐபிஎல் போட்டியில் இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனது சொந்த ஊரான சென்னையில்  விளையாடிய நிலையில், அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதுடன்,  மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் … Read more

28, 29ம் தேதி சுபமுகூர்த்த நாளையொட்டி, சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு…

சென்னை: நாளை  மற்றும் நாளை மறுதினமான (ஆகஸ் 28, 29ம் தேதிகள்)  சுபமுகூர்த்தநாள் என்பதால், அன்று ஏராளமான பத்திரபதிவுகள் நடைபெறும் வகையில், கூடுதல்  முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது. சுபமுகூர்த்த தினங்களான நாளை மற்றும் 29ம் தேதி கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்,   சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை … Read more

சென்னை கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ. 5 கோடி முறைகேடு? துணைவேந்தர் சஸ்பெண்ட்…

சென்னை: சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு  நடைபெற்றுள்ள நிலையில், அக்கல்லூரியின் துணைவேந்தர் தற்காலிக மாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் ரூ. 5 கோடி வரையில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. பல்வேறு செலவினங்களில் முறைகேடு நடந்துள்ளதைக் கணக்கு குழுவினர்க் கண்டறிந்தனர். இந்த  சம்பவம் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து,  … Read more