கிரிக்கெட் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு

பரிந்துரைகளை செயற்படுத்தத் தயாராகும் ஜனாதிபதி. குறுகிய காலத்தில் அறிக்கையை தயாரித்தமைக்காக ஜனாதிபதி பாராட்டு இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி குழுவின் அறிக்கையை நேற்று (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார். அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டதிலிருந்து ஒன்றரை மாதம் என்ற குறுகிய காலத்திற்குள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். கடந்த நவம்பர் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைய … Read more

உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!!

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் பெய்த மழை காரணமாக உன்னிச்சை குளத்தின்  மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளமாக திகளும் உன்னிச்சை குளம் 33 அடி நீரினை கொள்ளளவாக   கொண்டுள்ள நிலையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அறிக்கையின் பிரகாரம் 10″  அடிக்கு மேல் நீர் வான் பாய்வதனால் குளத்தின் 3 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் ஒரு கதவு 60″ அடி   ஏனைய இரண்டு கதவுகளும் 72″  அடி  மாக திறக்கப்பட்டுள்ளன. உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் மூன்று … Read more

உயர் கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்க நடவடிக்கை – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் உத்தரவாதம் மற்றும் நிலைபேறான விருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு  (29) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெற்றது.  உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சுரேன் ராகவனின் தலைமையில் உயர் கல்வி அமைச்சின் அரச சார்பற்ற பிரிவு இச்செயலாளர் ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வில்  அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் வேந்தர்கள், பேராசிரியர்கள் உட்பட கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.   இதன்போது செயலமர்வின் விசேட … Read more

2023 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கொடுப்பனவுகளுக்கும் அவசியமான நிதி திறைசேரியினால் விடுவிக்கப்பட்டது

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2023 வரவு செலவுத் திட்ட விதிகளுக்கு உட்பட்டு, 2023 டிசம்பர் 15 வரை அனைத்து அரச நிறுவனங்களால் சான்றளிக்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளுக்கும் அவசியமான நிதியை விடுவிக்க திறைசேரி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ஒரு வருடத்திற்குள் குறித்த ஆண்டிற்கான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளும் வழங்கப்பட்ட ஒரே ஆண்டாக 2023 ஆம் ஆண்டு அமைகின்றது. 2022 டிசம்பர் மாதமாகும்போது, அதற்கு முந்தைய 18 மாதங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் ஒன்று … Read more

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 டிசம்பர் 29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 டிசம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அம்பாறை … Read more

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுப்பினர்களை நியமித்துள்ளார். அதன்படி, அதன் தலைவராக நீதிபதி டபிள்யூ. எம். என். பி. இத்தவல நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக சேத்திய குணசேகர மற்றும் பேர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41B மற்றும் 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 04 இன் படி 2024 ஜனவரி 01 முதல் அமுலுக்கு … Read more

ஒன்பது மற்றும் பதினைந்து மாதங்களுக்கிடைப்பட்ட பிள்ளைகளுக்கு அம்மைத் தடுப்பு மருந்து வழங்கும் விசேட நிகழ்ச்சி

உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய வலய மற்றும் ஜெனீவா அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்ட கலந்துரையாடல் தொடர்பாக துறை சார்ந்தவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, ஆறு, ஒன்பது மாதங்களுக்கு இடைப்பட்ட பிள்ளைகளுக்கு அம்மைத் தடுப்பு மருந்து வழங்கும் விசேட நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால தெரிவித்தார். டெங்கு மற்றும் அம்மை நோய்களை ஒழிக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்களுடனான விசேட சந்திப்பொன்று (27) சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே … Read more

பிரதேசங்கள் சிலவற்றிற்கு மண்சரிவு அபாயம் நீடிப்பு

தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் சில மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 2.30மணி முதல் மண்சரிவு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதற்கிணங்க பதுளை மாவட்டத்தில் பதுளை, ஹாலில் மற்றும் பண்டாரவளை பிரதேச செயலக பிரிவுகளுக்காக விழிப்புடன் இருக்குமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை, மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம, மொனராகலை மாவட்டத்தில் மெதகம மற்றும் நுவரெலிய மாவட்டத்தின்ஹங்குரங்கெத, வைப்பதை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி … Read more

VAT வரி திருத்தத்தின் மூலம் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்து வருகிறது – நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர்

வரி திருத்தத்தால் ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவு மேலும் 40,000 ரூபாய் அதிகரிக்கும் என்ற கருத்து தவறானது. பெறுமதி சேர் வரி (VAT) உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி உரிய வரி மாற்றங்களைச் செய்து VAT திருத்தத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார். “பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டம் மற்றும் அதன் … Read more

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும்

பராக்கிரம வாவியின்; வான் கதவுகள் இன்று (29) இரவு 10.00 மணியளவில் திறக்கப்படவுள்ளதால், மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும் என்று பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு செல்லும் பயணிகளின் வசதிக்காக கதுருவெல புகையிரத நிலையத்தில் இருந்து மனம்பிட்டி நோக்கி விசேட புகையிரத சேவையொன்று காலை 10.30 மணி முதல் இடம்பெறும் என கதுருவெல புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார். … Read more