பாராளுமன்றத்திலும் அவசியமற்ற மின்குமிழ்களை அணைக்க உத்தரவு

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவசியமற்ற மின்குமிழ்களை அணைத்து ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் சபாநாயகர் அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற வளாகத்தின் அன்றாட நடவடிக்கைகளிலும் குறிப்பாக உணவகங்களிலும் சில குறைபாடுகள் ஏற்படக் கூடும் என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறான சிரமங்களை பொறுத்துக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் … Read more

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 09ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : … Read more

திருப்பதியில் நேற்று 58ஆயிரத்து 561 பக்தர்கள் தரிசனம்

திருப்பதியில் நேற்று 58,561 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25இ401 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.01 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.. இந்தியாவின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கட்டண சேவைகளான ஆர்ஜித சேவைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கொரோனா குறைந்ததை அடுத்து இணைய தளம் மூலமான  தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்று … Read more

புலமைச்சொத்து சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

புலமைச்சொத்து  சட்டமூலம் நேற்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ உரையாற்றினார். உலக சுகாதார அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசி வேலைத்திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திகளை கூடுதலாக ஏற்றுமதி செய்வதன் மூலம் டொலர் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள முடியும் என விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். நாட்டின் தேயிலை, மரமுந்திரிகை, வள்ளப்பட்டை மற்றும் உள்நாட்டு உணவு … Read more

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது – அமைச்சரவை பேச்சாளர அமைச்சர் டலஸ் அழகப்பெரும

தற்போது நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் எரிபொருள், சமையல் எரிவாயு பிரச்சினை பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. நீண்டகால பொருளாதார கொள்கை வகுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையே இதற்கான காரணம் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் மீதான … Read more

கௌரவ பிரதமரின் தலைமையில் 08 பெண்கள் பாடசாலைகளும் 02 கலவன் பாடசாலைகளும் தேசிய பாடசாலை அமைப்பில் இணைப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் 08 பெண்கள் பாடசாலைகளும் 02 கலவன் பாடசாலைகளும் தேசிய பாடசாலை அமைப்பில் இணைக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று (08) இடம்பெற்றது. நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக கல்வி அமைச்சின் அனுசரணையில் ‘ஆயிரம் தேசிய பாடசாலைகள், வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த பத்து பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அறிவிப்பதற்கான பெயர்ப் பலகைகள் கௌரவ பிரதமரினால் அலரி மாளிகையிலிருந்து … Read more

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஆரையம்பதியில் விழிப்புணர்வு நடைபவனி

சர்வதேச மகளிர் தினத்தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானத்தி தலைமையில் விழிப்புணர்வு நடைபவனி இன்று (08) திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. “நிலைபேறான நாளைக்காக இன்றைய பால்நிலை சமத்துவம்” எனும் இவ்வாண்டிற்கான தொனிப்பொருளிற்கு அமைய காலை 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பு ஆயுள்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி “பெண்களின் தலைமைத்துவத்தின் ஊடாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நஞ்சற்ற உணவினை உற்பத்திசெய்வோம்” எனும் தொனிப்பொருளிற்கு அமைய … Read more

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் அவர்களினால் இன்று (08) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் அழைக்கப்பட்ட மற்றும் அதன் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 12 அரசாங்க நிறுவனங்கள் குறித்தே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு, இலங்கை பெற்றோலிய … Read more

பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு பாராளுமன்றத்தில் அங்குரார்ப்பணம்

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (08) பாராளுமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு, பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் உட்பட பல புத்தகங்கள் மற்றும் பெண்கள் ஆய்வுகள் பற்றிய ஆவணங்களையும் கொண்டுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவை நம் நாட்டில் நீண்டகாலமாக உணரப்பட்டுவரும் விடயங்கள் விடயங்கள் என்றும், … Read more