எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் ஒலித்த ஜனாதிபதியின் குறியிசை பாடல்! (Video)

 இலங்கையில் தற்போது பிரதான பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் இரவு பகலாக நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றனர். இந்தநிலையில்,எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள் ஜனாதிபதியின் ”வெட கரண அபே விருவா” அதாவது ”வேலை செய்யும் எம் வீரர்” என்ற குறியிசை பாடலை பாடும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதே போல் குறித்த குறியிசை பாடலை வைத்து எரிபொருள் நிலையங்களின் தற்போதைய நிலைமையை … Read more

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை இந்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வாகன இறக்குமதி நடைபெறாது என நாட்டின் முன்னணி வாகன இறக்குமதியாளர்கள் இன்று வெளிப்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற 600 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்காது என்பதனை தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர்கள் … Read more

சற்றுமுன்னர் வெளியான சாதாரண தர பரீட்சையின் மற்றுமொரு பாட பெறுபேறு

2020 (2021) ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் மேலுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான பெறுபேறுகளே தற்போது வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பரீட்சை பெறுபேறுகளை  https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.  Source link

இலங்கையில் முழுமையாக முடங்கும் ஆபத்தில் பேருந்து போக்குவரத்து! கடுமையான எச்சரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் ஆபத்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. சிலர், தாம் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக அதிலும் குறிப்பாக டீசலை பெறுவதற்காக ஒரு சில மணித்தியாலங்கள் காத்திருப்பதாக தெரிவிக்கும் அதேவேளை இன்னும் சில சாரதிகள், தாம் 24 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் எரிபொருள் முறையாக … Read more

கொத்துக் கொத்தாக சரணடையும் இராணுவ வீரர்கள்: திகைக்க வைக்கும் உக்ரைன் – செய்திகளின் தொகுப்பு

உக்ரைன் – ரஷ்யப் போர் 7வது நாளை எட்டியுள்ள நிலையில், மனக்குழப்பமடைந்துள்ள ரஷ்யத் துருப்புகள் உக்ரைனில் கூட்டமாகச் சரணடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் மனக்குழப்பத்திலும் சோர்வடைந்தும் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ரஷ்ய இராணுவத்தினருக்கு தாங்கள் உக்ரைனில் போருக்கு அனுப்பப்பட்டுள்ளோமா என்பதும் தெரியவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி, உக்ரைனில் புகுந்துள்ள ரஷ்ய வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் எரிபொருளும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் … Read more

அதிகரிக்கும் போர் பதற்றம்! பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்கள் இலங்கைக்கு வர விரும்பினால் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான மோதலில், பெலாரஸ் ரஷ்யாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்பியதுடன், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றது. இதனால், உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகள் பெலாரஸூக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது குறித்த முழுமையான தகவல்களை அறிந்துக்கொள்ள … Read more

கச்சத்தீவு திருவிழாவில் 100 பக்தர்கள் மாத்திரமே பங்கேற்க அனுமதி (Photos)

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும், இந்தியாவிலிருந்து 50 பேரும் மாத்திரமே பங்கேற்க அனுமதிப்பது என்று இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் 11 ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்பவர்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவட் தலைமையில் நடைபெற்றிருந்தது.  இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி … Read more

நாட்டின் எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம்! தேரர் பகிரங்க அறிவிப்பு (Video)

நாட்டின் எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். “முழு நாட்டையும் சரியான பாதைக்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று கொழும்பில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்த சக்தியாக செயற்படுவோம். அமெரிக்க பிரஜையின் அதிகார செயற்பாட்டிற்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். … Read more

ரஷ்யாவுக்கு எதிர்ப்பு வெளியிடும் நாடுகளின் பட்டியலுக்குள் இணைந்த இலங்கை

உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முடிவு செய்ததையடுத்து, உலகின் பல நாடுகளின் தலைவர்கள் அந்த முடிவுக்கு எதிராக நிற்க முடிவு செய்தனர். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள், மருந்து மற்றும் பிற உதவிகளை வழங்க ஏற்கனவே முன்வந்துள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படையெடுப்பினால் இதுவரையில் உக்ரைனில் ஏறக்குறைய 2,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் உலகின் பல … Read more

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும்! – ஐநா நிபுணர்கள் கோரிக்கை

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்துவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு இணங்க சட்டத்தை கணிசமான முறையில் மதிப்பாய்வு செய்து திருத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். “தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படும் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு ஒரு பெரிய ஆபத்து உள்ளது. குறிப்பாக மத மற்றும் இன சிறுபான்மையினர், மேலும் சட்டத்தின் பயன்பாடு பயனுள்ள முறையான செயல்முறை … Read more