“DMK is an emotion; இது நான் சேர வேண்டிய இடம்தான்; உதயம் வரும்" – உதயநிதி விழாவில் கமல்

தமிழக அரசியலில் அ.தி.மு.க, தி.மு.க என இரு பிரதான கட்சிகளையும் எதிர்த்து 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தனது முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஒப்பந்தம் போட்டு தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அந்த ஒப்பந்தத்தின்படி தற்போது மாநிலங்களவையில் எம்.பி-யாக இருக்கிறார் கமல். … Read more

ரோட்டில் குறுக்கிட்ட பாம்பு; நிலைதடுமாறி ஓடையில் பாய்ந்த ஆட்டோ – இரண்டு குழந்தைகள் பலியான சோகம்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டம் மாவட்டம், கோனி-யை அடுத்த தேக்குதோடு தும்பைக்குளம் பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆட்டோவில் கருமான்தோடு ஸ்ரீ நாராயணா பள்ளி மாணவ மாணவியர்களான 6 குழந்தைகள் பயணித்தனர். இந்த நிலையில் சாலையில் ஒரு பாம்பு குறுக்கிட்டது. அந்த பாம்பின் மீது ஆட்டோ ஏறிவிடக் கூடாது என்பதற்காக டிரைவர் ராஜேஷ் திடீரென ஆட்டோவை பக்கவாட்டில் திருப்பினார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ, சாலை ஓரத்தில் சுமார் நூறு அடி ஆழத்தில் … Read more

"வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்கிறேன்"- காசியில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்த தனுஷ்

பாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படம் நாளை (நவ.28) வெளியாக இருக்கிறது. கிருத்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை ‘ராஞ்சனா’, ‘அத்ராங்கி ரே’ படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருக்கின்றனர். ஆனந்த் எல் ராய், கிருத்தி சனோன் தனுஷ் இதனிடையே வாரணாசியில் உள்ள கங்கை கறைக்கு தனுஷ், கிருத்தி சனோன், ஆனந்த் எல்.ராய் ஆகியோர் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. … Read more

“சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' – நான்கு தலைமுறையாக திண்டாடும் மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சியில், திருஞானசம்பந்தம் வள்ளுவர் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட வள்ளுவ சமுதாய குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாமல், வயல்வெளி வழியே எடுத்துச் செல்லும் அவலநிலை நான்கு தலைமுறைகளாக இன்று வரை தொடர்கிறது. மயிலாடுதுறையில் சமீபத்தில் கனமழை பெய்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று வள்ளுவ தெருவைச் சேர்ந்த கனகராஜ் (80) வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தார். இவரின் உடலை நல்லடக்கம் செய்ய … Read more

Rajinikanth: "ஆசிரியர்கள் தண்ணீர் போன்றவர்கள்" – வைஜெயந்திமாலாவுக்கு ரஜினி கௌரவம்!

மறைந்த கல்வியாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், அவரது மகனும் பிரபல நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ், லதா ரஜினிகாந்த் உடன் ரஜினிகாந்தும் கலந்துகொண்டுள்ளார். Vyjayanthimala Rajinikanth என்ன பேசினார்? இந்த விழாவில் இந்தியாவின் நடிப்புக்கலை வரலாற்றில் முக்கிய ஐகானாக விளங்கும் வைஜெயந்தி மாலாவுக்கு ‘கலாசார விருது (Cultural Award)’ வழங்கப்பட்டது. … Read more

ஶ்ரீவில்லிபுத்தூர்: வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை; தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வழி விடு முருகன் கோயில் உள்ளது. அந்தக் கோயில் பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 வயதில் கிருத்வீகா முத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர். சுரேஷ்குமாரின் மனைவி பக்கத்து தெருவில் பால் வாங்க குழந்தையை வீட்டில் தனியாக விட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து … Read more

புதுச்சேரி: ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட தவெக; எதிர்ப்புகளை மீறி நண்பருக்கு கைகொடுப்பாரா ரங்கசாமி?

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். அதனடிப்படையில் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்திருக்கின்றனர். அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், … Read more

Keerthy Suresh: `சிரஞ்சீவியைவிட விஜய் நல்ல டான்சரா?' – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி

நடிகை கீர்த்தி சுரேஷ் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள `ரிவால்வர் ரீட்டா’ படத்தின் புரொமோஷன் பணிகளில் பரபரப்பாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த நடனக் கலைஞர்” எனக் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். கீர்த்தியின் கருத்து சிரஞ்சீவியின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷிடம் விஜய்யை ஏன் சிறந்த டான்ஸராகக் கருதுகிறீர்கள் என்றும், இது நடிகர்களின் தோற்றத்தைப் பற்றிய உங்கள் கருத்தா என்றும் … Read more