மாண்புமிகு பறை: “ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தேவா, … Read more

ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் – இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங்கட்

சென்னையில் உள்ள அண்ணா சாலையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு காலத்தில் செயல்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த், முதல் சிரஞ்சீவி வரை பலரும் ஆக்ட்டிங் கோர்ஸை பயின்றிருக்கிறார்கள். அங்கே நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்த கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி, நேற்று காலமானார். மறைந்த கோபாலி, இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தவர். 92 வயதான அவரது மறைவு குறித்தும், கோபாலி தன்னை உருவாக்கிய விதம் குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், உருக்கமான பதிவு … Read more

மாண்புமிகு பறை: "பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன்"- பாக்யராஜ் ஷேரிங்ஸ்

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்த இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தன்னுடைய … Read more

Keerthy Suresh: "அந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு…" – ஏ.ஐ எடிட்கள் குறித்து கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் இம்மாத ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இப்போது கீர்த்தி சுரேஷ் களமிறங்கிவிட்டார். இன்று அப்படத்திற்காக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் எடிட்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். ரிவால்வர் ரீட்டா படத்தில்… கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இப்போ பெரிய பிரச்னை ஏ.ஐதான். அது நமக்கு வரமாகவும் இருக்கும். சில சமயங்களில் அழிவை உண்டாக்கும் விஷயமாகவும் இருக்கு. தொழில்நுட்பங்கள் மனிதர்கள் கண்டுபிடித்த … Read more

"தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை" – நடிகை மான்யா விளக்கம்!

நடிகை மான்யா ஆனந்த், நடிகர் தனுஷ் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து மான்யா ஆனந்த் தற்போது இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வரும் மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் வேறு விதமாகப் பரவத் … Read more

"என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள்" – தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்!

சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், “நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு நடிகர் தனுஷின் பெயரைப் பயன்படுத்தி ‘அட்ஜஸ்ட்மன்ட்’ கேட்டார்” என்ற சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்ப, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, “சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் … Read more

“20 வயதில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்" – ஶ்ரீதர் வேம்பு பேச்சும், கிளம்பிய விவாதங்களும்!

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் சிக்கலுக்குரியதாக மாறி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில் 20 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டிருக்கிறார். அப்போலோ மருத்துவமனை நிறுவனத்தின் துணை தலைவரும் நடிகர் ராம்சரணின் மனைவியுமான உபாசனா அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். ஶ்ரீதர் வேம்பு அதில் “அண்மையில் நான் IIT ஹைதராபாத் கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அப்போது … Read more

Roja: "பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது" – ரோஜா பேட்டி

ஆந்திர அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்தார் நடிகை ரோஜா. சினிமாவிலிருந்து விலகிய அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது கங்கை அமரனுடன் ‘லெனின் பாண்டியன்’ படத்தில் நடித்திருக்கிறார். Lenin Pandiyan அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். சினிமாவைத் தாண்டி விஜய் அரசியல் வருகை குறித்தும், பவன் கல்யாணின் செயல்பாடுகள் குறித்தும் அவர் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். விஜய் பற்றிய கேள்விக்கு பதில் தந்த நடிகை ரோஜா, “நடிகர்களாக இருந்து அரசியலுக்கு … Read more