Bihar Exit Polls 2025: தேஜஸ்வி Vs நிதிஷ் ரேஸில் முந்துவது யார்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்

ஜே பீகார் மாநிலத்தில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்றைய நாளில் மொத்தமாக 67.14 சதவிகித வாக்குகள் பதிவாகின. ஏற்கெனவே, நவம்பர் 6-ம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் பீகார் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 64.66 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், முதற்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை விட இரண்டரை சதவிகித வாக்குகள் அதிகமாக 67.14 சதவிகித … Read more

ஆட்டோகிராஃப் ரிரிலீஸ்: "லத்திகா கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஃபேவரைட்'' – நடிகை கோபிகா ஷேரிங்

சேரன் இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. 21 வருடங்களுக்குப் பிறகு இந்த வாரம் அத்திரைப்படம் ரீ-ரிலீஸாகிறது. முதல் ரிலீஸிலேயே பெரியளவில் கவனம் ஈர்த்த இத்திரைப்படம் காதல் திரைப்படங்களுக்கு இன்று வரை ஒரு பெஞ்ச்மார்க் என்றே சொல்லலாம். Cheran அத்திரைப்படத்தில் நடித்திருந்த கோபிகா தற்போது ரீ-ரிலீஸ் குறித்து பேசிய காணொளியை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இயக்குநர் சேரன் பகிர்ந்திருக்கிறார். ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம்தான் நடிகை கோபிகாவின் முதல் தமிழ் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை கோபிகா … Read more

சிவகாசி: முடிவுக்கு வந்த 30 ஆண்டுக்கால ஏக்கம்; சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் திறப்பு!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது சிவகாசி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது. ரயில்வே மேம்பாலம் இல்லாமல் பள்ளி கல்லூரி, மாணவ மாணவியர் மற்றும் பட்டாசு, அச்சக தொழிலாளர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு 2024, ஜூலை மாதம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு தற்போது 100 … Read more

ஹீரோவாக அறிமுகமாகும் சிவாஜியின் பேரன்; ரஜினியைச் சந்தித்து வாழ்த்து பெற்ற தர்ஷன் கணேசன்

ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘லெனின் பாண்டியன்’ படத்தில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் தர்ஷன். சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகன்தான் தர்ஷன். ராம்குமாரின் மூத்த மகனான துஷ்யந்த் சில படங்களில் நடித்திருக்கிறார். Lenin Pandiyan அதுமட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இயங்கியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து தற்போது தர்ஷன் ராம்குமாரும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். தர்ஷனுக்கு கடந்த ஜூன் மாதம் சென்னையில் திருமணம் நடைபெற்றிருந்தது. இந்த ‘லெனின் பாண்டியன்’ படத்தை அறிமுக … Read more

26 நாள் தேடுதல்; 300 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு; கடத்தப்பட்ட குழந்தை மீட்பு-தம்பதி கைது

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சேலம்-கொச்சி நெடுஞ்சாலையில் கோணவாய்க்கால் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட வெங்கடேஷ் – கீர்த்தனா தம்பதி வசித்து வந்தனர். அவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை வந்தனா கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி, இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது, கொசு வலையை அறுத்து அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டார். குழந்தை கடத்தல் தொடர்பாக தொடக்கத்தில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர், மேலும் 4 தனிப்படைகள் என மொத்தம் 7 … Read more

Arasan Update: ஆக்ஷன் வேட்டை; துபாயில் பயிற்சி; இணையும் நடிகர்கள்… 'அரசன்' அப்டேட்

வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதன் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருந்தது. சமீபத்தில் நடந்த ‘மாஸ்க்’ பட விழாவில் ”வரும் 24ம் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குகிறது” என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துவிட்டதில் சிம்புவின் வட்டாரம் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘அரசன்’ படத்தின் புரொமோ வீடியோ வெளியானது. அதில். இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு … Read more

மேற்கு ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களில் இருவர் தமிழர்கள் – மீட்க குடும்பத்தினர் கோரிக்கை

மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து பல்வேறு தீவிரவாத குழுக்கள் அல்காய்தா, ஐ.எஸ். அமைப்புகளின் உதவியோடு செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிரவாத குழுக்கள் வெளிநாட்டினரை கடத்துவதும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பதும் வழக்கமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோப்ரி பகுதியில் செயல்படும் மின்சார நிறுவனத்தில் ஐந்து இந்தியர்கள் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். இதன்பிறகு, மற்ற பணியாளர்கள் பாமோகோ என்ற நகருக்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். West … Read more

மாணவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல்; போக்சோவில் கைது செய்யப்பட்ட காவலர் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த +2 படிக்கும் மாணவர் சந்தோஷ்குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கயல்விழியும் (இருவரது பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது) ஒருவரையொருவர் காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் 5-ம் தேதி வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற இருவரும், மாலை வீடு திரும்பாமல் மாயமானார்கள். பதறிப்போன மாணவியின் பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பாலியல் துன்புறுத்தல் அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாயமான சிறுமி … Read more

SIR : 'இன்னும் எங்களுக்கே SIR விண்ணப்பம் வரலை..' – திமுக ஆர்ப்பாட்டத்தில் கலகல!

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னை சிவானந்தா சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவாக, விசிக போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டவை. திமுக ஆர்ப்பாட்டம் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் பேசுகையில், ”தேர்தலுக்கு முன்பாக Summary Intensive Revision என வைப்பார்கள். இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்காக … Read more

புனே புதிய விமான நிலையம்: ஏக்கருக்கு ரூ.1 கோடி இழப்பீடு, சலுகை அறிவித்த அரசு – விவசாயிகள் மறுப்பு

புனேயில் சர்வதேச விமான நிலையம் புனேயில் உள்ள புரந்தர் என்ற இடத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வருகிறது.. இதற்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான திட்டத்தை அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்கு புனே அருகில் உள்ள புரந்தரை சுற்றி 7 கிராமங்களில் இருக்கும் 1285 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. … Read more