காரைக்குடி : காருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்; நகைகள் திருட்டு; சிக்கிய டிரைவர்!

காருக்குள் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் காரைக்குடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Murder (Representational Image) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த பாண்டிகுமார் மனைவி மகேஸ்வரி. கடந்த 6 ஆம் தேதி காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை தைலமரக் காட்டுப்பகுதியில் காருக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இத்தகவல் தெரிந்து குன்றக்குடி இன்ஸ்பெக்டர சுந்தரி தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி உடலை … Read more

Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்; 'தேச பக்தி' – புகழும் ரயில்வே – வலுக்கும் கண்டனம்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத், லக்னோ-சஹரன்பூர் வந்தே பாரத், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ஆகிய நான்கு வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பயணத்தின் போது, ​​பள்ளி மாணவர்கள் குழு ஒன்று ரயிலில் பயணிக்க வைக்கப்பட்டது. Vande Bharat அந்தப் பள்ளி மாணவர்கள் … Read more

பீகார் தேர்தல்: `சாலையில் கிடந்த VVPAT ஆவணம்' – தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம் என்ன?

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) மூலம் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் இத்தேர்தல், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், பீகாரின் சமஸ்திபூர் மாவட்ட சராய்ரஞ்சன் சட்டமன்றத் தொகுதியின் கல்லூரி அருகே, சாலையோரத்தில் VVPAT பேப்பர்கள் கண்டெடுக்கப்பட்டது. Gyanesh Kumar – தலைமை தேர்தல் ஆணையர் VVPAT … Read more

வெள்ளகுதிர: “கலைஞர் ஆட்சியில் அந்த சட்டம் இருந்துச்சி" – மேடையில் பாக்கியராஜ் வைத்த கோரிக்கை!

கூத்துப்பட்டறை கலைஞரான ஹரிஷ் ஓரி தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ‘வெள்ளகுதிர’. காக்கா முட்ட படத்தின் இயக்குநரும் நடிகருமான மணிகண்டனின் உதவி இயக்குநராக இருந்த சரண் ராஜ் செந்தில்குமார் இயக்கியுள்ளார். பரத் அகசிவகன் இசையமைத்துள்ளார். மலைவாழ் மக்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ’டிரைலர் வெளியீட்டு விழா’ சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே செல்வமணி, நடிகர் பாக்கியராஜ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். வெள்ளகுதிர … Read more

கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் பலே மோசடி

கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் அருகே ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகப்பெரிய குடோனும், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருள்களை, அவர்களின் முகவரிக்கு அனுப்பும் பணியும் அங்கு நடந்து வருகிறது. ஃபிளிப்கார்ட் இந்நிலையில் அங்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பிய 7 கிலோ வாஷிங் பவுடர் திருப்பி அனுப்பியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கவே நிறுவனத்தினர் சந்தேகமடைந்து பார்சல் செய்த பொருள்களை எல்லாம் ஆய்வு செய்துள்ளனர். … Read more

சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த ‘சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி’யில் ‘சென்னைஸ் அமிர்தா’ மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள். SICA எனப்படும் ‘தென்னிந்திய சமையல் கலை வல்லுனர்கள் சங்கம்’ சென்னையில் நடத்திய இந்த போட்டியில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 3200-க்கும் மேற்பட்ட பிரபலமான சமையல் கலை வல்லுனர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். அவர்களோடு போட்டியிட்டு, வென்று, தங்கப்பதக்கங்களை அள்ளி … Read more

Jananayagan: 'பறக்கட்டும் நம்ம கொடி'- ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் தளபதி கச்சேரி பாடல் வெளியானது

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. இதுதான் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரிலீஸுக்கு ரசிகர்களும் ஆவலாகக் காத்திருக்கிறார்கள். அ.வினோத் இயக்கும் இப்படத்தை கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. Thalapathy Kacheri – Jananayagan 6-வது முறையாக விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, மமிதா பைஜு எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். பொங்கல் ரிலீஸுக்காக படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் பரபரப்பாக … Read more

The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' – எப்படி இருக்கிறாள் இந்த `தி கேர்ள்ப்ரண்ட்'?

முதுகலைப் பட்டப்படிப்பிற்காக வெளியூருக்கு வருகிறார் பூமா தேவி (ராஷ்மிகா). பிறக்கும்போதே தாயை இழந்த பூமா தேவி, தந்தையினால் வளர்க்கப்பட்டவர். கல்லூரியில் கணிதவியல் துறையைச் சேர்ந்த விக்ரம் (தீக்‌ஷித் ஷெட்டி) என்பவருடன் பூமாவுக்குக் காதல் மலர்கிறது. பூமாவின் ஆசைகள் அத்தனையையும் ஆணாதிக்க எண்ணம் கொண்டு தடுக்கிறார் விக்ரம். The Girlfriend Review விக்ரமின் இந்த செயல்கள், பூமாவை ஒரு கட்டத்திற்கு மேல் டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் சிக்கி விட்டோமோ, நம்முடைய எதிர்காலம் என்னவாகும் எனச் சிந்திக்க வைக்கிறது. காதல் வாழ்க்கையிலிருந்து … Read more

கிலோ ரூ.12,500: நோயை எதிர்த்து போராடும், அதிக விலையுள்ள அரிசி ஜப்பானில் அறிமுகம்!

ஆசியாவில் உள்ள நாடுகளில் பல்வேறு வகையான கலாச்சாரம், மொழி இருந்தாலும் சாப்பாட்டில் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பது அரிசி மட்டுமே. அதுவும் தெற்கு ஆசியாவில் சாப்பாட்டிற்கு அரிசி மட்டுமே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த அரிசி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக விளைவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான ரக அரிசிகளை விளைவிக்கிறது. அதோடு ஒவ்வொரு நாட்டிலும் அரிசியை சமைக்கும் விதமும் மாறுபடுகிறது. இந்த அரிசியை மட்டும்தான் மக்களால் மலிவு விலையில் வாங்கி சாப்பிட முடிகிறது. ஆனால் இப்போது … Read more

தங்கம் விலை உயர்வு: திருமணத்தில் தங்க நகைகள் அணிய பெண்களுக்குக் கட்டுப்பாடு; உத்தரகாண்டில் நூதனம்

தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பதால் உத்தரகாண்டில் இரண்டு கிராம மக்கள் தங்க ஆபரணங்களை பெண்கள் பயன்படுத்துவதற்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். இதே போன்று திருமணத்தில் மதுவுக்கும் சில கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெக்ராடூன் மாவட்டத்தில் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள காந்தார் மற்றும் இந்திரானி ஆகிய இரண்டு பஞ்சாயத்தும் சேர்ந்து திருமணத்தில் தங்க நகைகள் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றன. அதன்படி திருமணத்தில் பெண்கள் மூக்குத்தி, கம்மல், தாலிச்செயின் ஆகிய மூன்று நகைகளை மட்டுமே அணிய … Read more