நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்துகொள்ளும் பெண் – அடடே லவ் ஸ்டோரி

சீனாவில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 2008ஆம் ஆண்டு சீனாவின் வென்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது 22 வயதான லியோங் என்பவர் அவசர மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சம்பவம் நடந்த இடத்தில் பத்து வயதான லியூ என்ற பெண் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். லியோங் மற்றும் அவரது மீட்பு குழுவினர்கள் … Read more

"மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள்; பொறுப்புடன் நடந்துகொள்வோம்"- ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். ‛குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் நாடுகளைத் தொடர்ந்து தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார். அஜித் இதனிடையே நேற்று முன்தினம் (டிச.6) 12 மணி நேர கார் ரேஸில் கலந்துகொண்ட அஜித் தன்னைப் பார்க்க வந்த 500க்கும் … Read more

GRT: வியப்பூட்டும் சலுகைகள்; 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'- அறிமுகப்படுத்திய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

வியப்பூட்டும் சலுகைகளுடன் பிரம்மாண்டமான ‘தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்’ -ஐ ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. ஜி.ஆர்.டி ஜூவல்லரஸ், 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. துல்லியமான கைவினைத் திறன் அற்புதமான வடிவமைப்புத் திறன் மற்றும் நீடித்த மதிப்புகள் ஆகியவற்றிற்காக பிரசித்திபெற்ற இந்த நிறுவனம் தங்கம் வைரம் பிளாட்டினம். வெள்ளி, மற்றும் நவரத்தினங்களில், நேர்த்தியான தொகுப்புகளை உருவாக்குவதின் மூலம் இந்நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தென் இந்தியா முழுவதும் 65 ஷோரூம்கள் … Read more

Manjummel Boys: 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் அடுத்த படைப்பு; 'பாலன்' அப்டேட்ஸ்

மலையாளத்தில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸ் வசூலைக் குவித்த படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கொடைக்கானல் குணா குகையில் சிக்கியவரை மீட்கும் நண்பர்களின் உண்மைக் கதையைத் திரைப்படமாக எடுத்து பாலிவுட்வரை திரும்பிப்பார்க்க வைத்திருந்தார் படத்தின் இயக்குநரான சிதம்பரம். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை அடுத்து இப்போது ‘பாலன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சிதம்பரம். பாலன் திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் உருவாகி தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது. … Read more

`நாம் தமிழர் கட்சி தலைவனே தற்குறிங்க; நான் 100% சுயமரியாதைக்காரன்!’ – நாஞ்சில் சம்பத் பேட்டி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாய் இணைந்து, புதிய ட்ரெண்டிங்காக அரசியல் களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத். அவரை தொடர்பு கொண்டு, பேட்டி கண்டோம்… “தவெக-வில் இணைந்து, புதிதாய் பிறந்தது போல் ஒரு உணர்வு அப்படின்னு சொல்லிருக்கீங்க. அதை பத்தி சொல்லுங்க?” “ஒரு ஆறாண்டு காலத்துக்கு மேலாக எந்த கட்சியிலும் என்னை இணைத்து கொள்ளாமல், திராவிட இயக்க சொற்பொழிவாளர் என்ற அடையாளத்தோடு, ஒரு மனிதனாகவும் ஒரு இயக்கமாகவும் நானே இயங்கினேன். இன்றைக்கு லட்சக்கணக்கான வாலிபர்களின் … Read more

"நிறைய கடன் இருக்கு, படம் எடுக்க முடியல, ஆனா.!"- புத்தக விழாவில் பேசிய சேரன்

சேலத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சேரன் பேசியது இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், ” எப்படி சார் நிறைய பேர் உங்களை நேசிக்கிறார்கள் என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். நான் யாரையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை. சேரன் நான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். என்னுடைய படத்தில் வில்லனே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் வில்லன்களை விரும்புவதில்லை. நான் வில்லனாகவும் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய வாழ்க்கை … Read more

Mohan lal:“எங்கள் அன்பான லாலுவுக்கு" – வாழ்த்து தெரிவித்த மம்மூட்டி | வைரலாகும் வீடியோ

71-வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு, இந்திய சினிமாவில் அவரது பங்களிப்பைப் பாராட்டி, மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வழங்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்டபோதே திரைப்பிரபலங்கள் பலரும் நடிகர் மோகன் லாலுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். இதற்கிடையில், சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மம்முட்டியும், நடிகர் மோகன்லாலும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, தர்ஷனா … Read more

Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் – என்ன நடந்தது?

கோவாவின் ஆர்போராவில் உள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேனில்’ நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், நடனக் கலைஞரின் பின்னால் உள்ள கன்சோலில் தீ எரிவது பதிவாகியிருந்தது. கிளப்பின் ஊழியர்கள் சிலர் கன்சோலை நோக்கி விரைந்து சென்று தீ பரவும் இடத்திலிருந்து கம்ப்யூட்டர்களை எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் யாரும் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. गोवा के … Read more

“எனக்கு சரியான வீடு கூட இல்லை'' – கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா நெகிழ்ச்சி பேட்டி

மாலத்தீவில் 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம் பெற்றனர். இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் உலக கேரம் சாம்பியன்ஸ் பட்டத்தையும் பெற்றார். கேரம் … Read more

கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சதீஷ் (வயது: 36). இவரது தாயார் வீரம்மாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இது தொடர்பாக, தனது தாய் இறந்த நிலையில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலக சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இது குறித்து, மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு (வயது: 46) என்பவரிடம் சதீஷ் பலமுறை கேட்டும், அவர் இழுத்தடித்து … Read more