மும்பை மாநகராட்சி: ராஜ் தாக்கரே கறார், தீவிரம் காட்டும் உத்தவ் – ஆளும் கூட்டணியிலும் பஞ்சாயத்து?

மகாராஷ்டிராவில் வரும் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை தொடர்ந்து ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு கட்சிகளின் தலைவர்களும் நேரடியாகவே சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை … Read more

தமிழ்நாட்டை நோக்கி நகரும் `Ditwah' புயல்; எப்போது வருகிறது? 2 நாள்கள் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ‘இது தொடரும்’ என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். சிவகங்கை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். மழை வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை … Read more

நெல்லை: பிரமாண்டமாக உருவான `பொருநை' அருங்காட்சியகம் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்! | Photo album

நெல்லை: பிரமாண்டமாக உருவான ‘பொருநை’ அருங்காட்சியகம் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்.! Source link

IFFI: "தியேட்டரிலேயே இந்தப் படம் ஜெயிக்க வேண்டியது!" – கோவா திரைப்பட விழாவில் அப்புக்குட்டியின் படம்

அப்புக்குட்டிக்கு மற்றுமொரு தேசிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆம், அவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. கோவாவில் நடைபெற்று வரும் இந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழிலிருந்து அப்புக்குட்டியின் இந்தத் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படமும்தான் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருந்தன. கோவா திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்த பலரும் அப்புக்குட்டிக்கு பெரும் பாராட்டுகளைக் கொடுத்து வருகிறார்கள். Piranthanaal Vaazthukkal Team at IFFI வாழ்த்துகள் தெரிவித்து … Read more

“DMK is an emotion; இது நான் சேர வேண்டிய இடம்தான்; உதயம் வரும்" – உதயநிதி விழாவில் கமல்

தமிழக அரசியலில் அ.தி.மு.க, தி.மு.க என இரு பிரதான கட்சிகளையும் எதிர்த்து 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தனது முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஒப்பந்தம் போட்டு தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அந்த ஒப்பந்தத்தின்படி தற்போது மாநிலங்களவையில் எம்.பி-யாக இருக்கிறார் கமல். … Read more

ரோட்டில் குறுக்கிட்ட பாம்பு; நிலைதடுமாறி ஓடையில் பாய்ந்த ஆட்டோ – இரண்டு குழந்தைகள் பலியான சோகம்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டம் மாவட்டம், கோனி-யை அடுத்த தேக்குதோடு தும்பைக்குளம் பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆட்டோவில் கருமான்தோடு ஸ்ரீ நாராயணா பள்ளி மாணவ மாணவியர்களான 6 குழந்தைகள் பயணித்தனர். இந்த நிலையில் சாலையில் ஒரு பாம்பு குறுக்கிட்டது. அந்த பாம்பின் மீது ஆட்டோ ஏறிவிடக் கூடாது என்பதற்காக டிரைவர் ராஜேஷ் திடீரென ஆட்டோவை பக்கவாட்டில் திருப்பினார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ, சாலை ஓரத்தில் சுமார் நூறு அடி ஆழத்தில் … Read more

"வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்கிறேன்"- காசியில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்த தனுஷ்

பாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படம் நாளை (நவ.28) வெளியாக இருக்கிறது. கிருத்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை ‘ராஞ்சனா’, ‘அத்ராங்கி ரே’ படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருக்கின்றனர். ஆனந்த் எல் ராய், கிருத்தி சனோன் தனுஷ் இதனிடையே வாரணாசியில் உள்ள கங்கை கறைக்கு தனுஷ், கிருத்தி சனோன், ஆனந்த் எல்.ராய் ஆகியோர் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. … Read more

“சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' – நான்கு தலைமுறையாக திண்டாடும் மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சியில், திருஞானசம்பந்தம் வள்ளுவர் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட வள்ளுவ சமுதாய குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாமல், வயல்வெளி வழியே எடுத்துச் செல்லும் அவலநிலை நான்கு தலைமுறைகளாக இன்று வரை தொடர்கிறது. மயிலாடுதுறையில் சமீபத்தில் கனமழை பெய்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று வள்ளுவ தெருவைச் சேர்ந்த கனகராஜ் (80) வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தார். இவரின் உடலை நல்லடக்கம் செய்ய … Read more