இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: “ரஹ்மான் வெளியூர் போனா சபேஷைத்தான் இசையமைக்க கூப்பிடுவாங்க" – பாக்யராஜ்

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் நேற்று (அக்டோபர் 23) காலமானார். இசையமைப்பாளரான இவர் தன் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சபேஷ், தேவா இவர்கள் இருவரும் இணைந்து ‘சமுத்திரம்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘பொக்கிஷம்’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கோரிப்பாளையம்’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். இவற்றை தவிர ஜோடி, ஆட்டோகிராஃப் உட்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி இசை … Read more

`கேம் விளையாடாதன்னு திட்டுனாங்க' கத்திரிகோலால் தாயைக் குத்திய மகன் – இரண்டு சிறுவர்கள் கைதான பின்னணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கீழக்குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் – பரமேஸ்வரி தம்பதிக்கு, 17 வயதில் ஒரு மகளும், 14 வயதில் சந்தோஷ் (சிறுவனின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற மகனும் இருக்கிறார்கள். சந்தோஷ் அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். அக்டோபர் 19-ம் தேதி குணசேகரனுக்கும் – பரமேஸ்வரிக்கும் புடவை வாங்கிய விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் கோபித்துக்கொண்டு சென்ற பரமேஸ்வரி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதில் பயந்துபோன … Read more

சபேஷ் மறைவு: “அப்பாவ பார்க்கவே முடியல, ரொம்ப ஒடஞ்சிட்டாரு" – ஶ்ரீகாந்த் தேவா

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனது சித்தப்பா உடலுக்கு அஞ்சலி செலுத்திய தேவாவின் மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். சபேஷ் உள்ளிட்ட தம்பிகளுடன் தேவா அப்போது தனது சித்தப்பா சபேஷின் மறைவு குறித்து பேசிய ஸ்ரீகாந்த் தேவா, “சபேஷ் சித்தப்பா என்னோட குரு. முதன்முதலா என் … Read more

”நெல் மூட்டை மழையில் நனைந்து முளைத்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுகிறார்” – உதயநிதி காட்டம்

நெல் கொள்முதல் பணிகள் விரைவாக நடக்காததால் கொள்முதல் நிலையங்களிலும், சாலையோரங்களில் நெல்லை கொட்டிவைத்து நாள்கணக்கில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பெய்த மழையால் பல இடங்களில் நனைந்து, முளைத்து வீணாயின. நெல் கொள்முதலில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் உள்ள காட்டூர் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுசெய்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டார். மேலும், திருவாரூர், நாகையிலும் ஆய்வுசெய்தவர் திமுக அரசு நெல் கொள்முதலில் … Read more

இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: "இனி எந்த ஜென்மத்துல அண்ணன் தம்பியா பொறக்க போறோம்" – தேவா வேதனை

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார். அவரின் உடலுக்கு சென்னையில் உள்ள அவரது வீட்டில் திரையுலகினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். தனது சகோதரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தேவா நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். தேவாவின் தம்பி சபேஷ் அப்போது தனது சகோதரர் சபேஷின் இழப்பு குறித்து பேசிய தேவா, “எங்க குடும்பத்துல இதை நாங்க எதிர்பார்க்கவே இல்ல. எனக்கு ரொம்ப பக்கபலம் சபேஷ் … Read more

கரூர் மரணங்கள்: ”விஜய்கோ, தவெக கட்சியினருக்கோ போதிய அரசியல் அனுபவம் இல்லை” – வைகோ

நண்பரின் மனைவி மறைவுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல் வந்திருந்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை நாங்கள் வரவேற்கிறோம். விஜய் கரூர் பிரசாரத்திற்கு 8 மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தினால் மக்கள் தண்ணீர் இன்றி சோர்வடைந்து 41 பேர் உயிரிழந்துள்ளனர். தவெகவினர்தான் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என யோசித்து இருக்க வேண்டும். கட்சியினருக்கு அரசியல் அனுபவம் இல்லை. கட்சி கட்டமைப்பை முதலில் ஒழுங்குபடுத்த வேண்டும். … Read more

Soori: "தம்பி, தவறான தகவலைப் பரப்புவது தீங்கையே தரும்" – பரவிய போலிச் செய்திக்கு நடிகர் சூரி பதிலடி

அரசியல் குறித்து நடிகர் சூரி பேசியது போல் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில், “தவறான தகவலைப் பரப்புவது எப்போதும் சமூகத்துக்குத் தீங்கையே தரும்” என்று விளக்கியுள்ளார் நடிகர் சூரி. நடிகர் சூரி சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்ச் செய்தியில், “பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும்! ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார். – நடிகர் சூரி” எனக் … Read more

Womens World Cup: மந்தனா, பிரதிகா அதிரடியில் வீழ்ந்த நியூசிலாந்து; அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில் அரையிறுதியில் மீதமிருக்கும் ஓர் இடத்துக்கு செல்லப்போவது நீயா இல்லை நானா என்ற முக்கியமான போட்டியில் நேற்று (அக்டோபர் 23) நியூசிலாந்தும், இந்தியாவும் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்கைத் தேர்வுசெய்யவே முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி முதல் 10 ஓவர்களில் மிக மிக மெதுவாக ஆடி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹர்மன்பிரீத் … Read more

“எங்கள் பண்டிகைகளில் பட்டாசு இல்லை!'’ – 'சத்தமில்லா' தீபாவளி கொண்டாடும் கிராமங்களின் பின்னணி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இந்தியாவின், முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. என்னதான் தமிழ்நாட்டில், வட இந்திய பண்டிகைகள் அதிகம் கொண்டாடப்படுவதில்லை என்றாலும், தீபாவளி நாளடைவில் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டது. பணக்கார குடும்பங்கள், நடுத்தர குடும்பங்கள், ஏழை, எளிய குடும்பங்கள் முதல் அனைவரும் … Read more

`கடவுளுக்கே விமர்சனம் இருக்கும்போது, திரைப்படத்திற்கு விமர்சனம் இல்லாமல் இருக்காது' -அமீர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் ‘பைசன்’. இந்நிலையில் ‘பைசன்’ குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமீர், ” கருத்து உடன்பாடு உள்ளதால்தான் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தேன். பைசன் சாதிய, மத மோதல்கள் நீங்க வேண்டும், மனிதர்களை சக மனிதர்கள் நேசிக்க வேண்டும், கடவுள் இருக்கிறது அல்லது இல்லை என்கிற மாபெரும் விவாதங்களை கடந்து அனைத்து மனிதர்களும் ஒரு … Read more