Judiciary: “நீதித்துறையில் பாலின சமத்துவம் வேண்டும்'' – இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் சொல்வதென்ன?

நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி (Vipul Manubhai Pancholi) குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக அக்டோபர் 1, 2014 அன்று பதவியேற்றார். பின்னர் ஜூலை 24, 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகஸ்ட் 27, 2025 அன்று உச்சநீதிமன்றக் கொலீஜியம் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. அதனை ஏற்று, ஆகஸ்ட் 29, 2025 அன்று அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். ஆனால், இவருக்கு முன்பு பதவி வழங்கப்பட வேண்டிய மூத்த பெண் நீதிபதிகள் இருந்தபோதும் ஏன் … Read more

Yolo: “அமீர்கிட்ட சாதரண ஆள் வேலை செய்ய முடியாது'' – அனுபவம் பகிர்ந்த சமுத்திரக்கனி

இன்று நடைபெற்ற யோலோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்வில், இயக்குநர் சாம், நடிகர் தேவ், நடிகை தேவிகா மற்றும் படக் குழுவினருடன் இயக்குநர்கள் ஏ.ஆர்.கே சரவணன், சதீஷ், சமுத்திரக்கனி, ஆர்.கே.செல்வமணி, அமீர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். YOLO ‘பருத்தி வீரன் ஷூட்டிங்கில் மூக்கிலிருந்து ரத்தம் வந்தது’ நிகழ்ச்சியில் சமுத்திரக்கனி பேசியதாவது, “நானும் யோலோ பட இயக்குநரும் (சாம்) பருத்தி வீரன்ல அமீர் அண்ணன் கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை பார்த்தோம். அவர் கிட்ட சாதாரண ஆட்கள் எல்லாம் வேலைபார்க்க … Read more

“நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நலன்களே நிரந்தரம்'' – ராஜ்நாத் சிங்

என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:“இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் தற்சார்பு (ஆத்மநிர்பர்தா) மிகவும் முக்கியமானது. நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நிரந்தர நலன்களே உள்ளன. உள்நாட்டிலேயே பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் ஐ.என்.எஸ். ஹிம்கிரி மற்றும் ஐ.என்.எஸ். உதய்கிரி … Read more

“அர்ஜுன் தாஸை ஒரு வளையத்தில் அடைத்து வைக்க பலர் நினைத்தனர், ஆனால்.!" – நடிகர் மணிகண்டன்

விஷால் வெங்கட் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், நாசர், அபிராமி, உள்ளிட்ட சிலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘Bomb’. இந்தப் படம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ‘Bomb’ movie இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மணிகண்டன், ” இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். அனைவரும் பிரமாதமாக செய்திருக்கிறார்கள். நான் பார்த்து வியக்க கூடியவர் … Read more

Onam Releases Review: ஓணம் டிரீட்டாக திரைக்கு வந்திருக்கும் மலையாளப் படங்கள் எப்படி இருக்கிறது?

மலையாள சினிமாவுக்கு இந்த வாரம் ரொம்பவே ஸ்பெஷல் எனச் சொல்லலாம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடித்திருக்கும் ‘லோகா – சாப்டர் 1: சந்திரா’, ஃபகத் ஃபாஸில், கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருக்கும் ‘ஓடும் குதிரை சாடும் குதிரை’, மோகன்லால், மாளவிகா மோகனன் நடித்திருக்கும் ‘ஹ்ருதயபூர்வம்’ போன்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று படைப்புகள் திரைக்கு வந்திருக்கின்றன. Hridayapoorvam இதில் இரண்டு படங்களில் கல்யாணி ப்ரியதர்ஷன் தான் கதாநாயகியாக இருக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களும் எப்படி … Read more

Bomb: 'நான் நடித்த படங்களிலேயே சுவாரஸ்ய அனுபவத்தை கொடுத்த படம் இதுதான்' – அர்ஜுன் தாஸ்

விஷால் வெங்கட் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், நாசர், அபிராமி, உள்ளிட்ட சிலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘Bomb’. இந்தப் படம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. ‘Bomb’ movie இதில் கலந்துகொண்டு பேசிய அர்ஜுன் தாஸ், “அநீதி என்ற படத்தில் நானும், காளி வெங்கட்டும் இணைந்து நடித்திருந்தோம். ஆனால், இரண்டு பேருக்குமான காட்சிகள் … Read more

Odum Kuthira Chaadum Kuthira Review: ஏமாற்றம் ஃபா ஃபா சேட்டா; சோதிக்கும் ஃபகத் பாசிலின் காமெடி படம்!

பர்னிச்சர் கடையில் பணிபுரியும் அபி (ஃபகத் ஃபாசில்) ஒரு நாள் தனது சகப் பணியாளருடன் பர்னிச்சர் பொருளை டெலிவர் செய்வதற்குக் கிளம்புகிறார். எதேச்சையாக அங்கு நிதியை (கல்யாணி ப்ரியதர்ஷன்) சந்திக்கிறார். அந்த சமயத்தில் நிதியின் காதல் வாழ்க்கையில் ஒரு பிரேக் ஏற்படுகிறது. பிறகு அபிக்கும் நிதிக்கும் காதல் மலர்கிறது. இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, ‘கல்யாண மாப்பிள்ளையாகக் குதிரையில் திருமண அரங்கிற்கு நீ வந்திறங்க வேண்டும்’ என்று … Read more

Yolo: 'இயக்குநர்கள் முதல் படத்திலேயே லாபம் என்ற நோக்கில் யோசிக்கக் கூடாது' – ஆர்.கே. செல்வமணி

சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சாம் இயக்கி இருக்கும் படம் ‘யோலோ’. பூர்ணேஷ், தேவிகா, ஆகாஷ், படவா கோபி, எம்.ஆர் மோஷன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றனர். சகிஷ்னா தேவி இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் ‘யோலோ’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது. ‘யோலோ’ இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.கே செல்வமணி, ” தற்போதைய சூழலில் படங்கள் எடுப்பதை காட்டிலும், படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பது தான் பெரிய கஷ்டமான விஷயமாக … Read more

மராத்தா போராட்டத்தால் ஸ்தம்பித்த மும்பை – `கடைசி யுத்தம்’ என கூறும் மனோஜ் ஜராங்கே!

மராத்தா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். அவர்களின் கோரிக்கையில் குறிப்பிட்ட பகுதியை மாநில அரசு ஏற்கனவே நிறைவேற்றி விட்டது. ஆனாலும் இவ்விவகாரத்தில் மராத்தா சமுதாயத்தினரை ஒ.பி.சி. பிரிவில் முழுமையாக சேர்க்கவேண்டும் என்று கோரி மனோஜ் ஜராங்கே தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். ஒ.பி.சி. பிரிவில் இருக்கும் கும்பி இனத்தவராக தங்களை அங்கீகரித்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீறாமல் … Read more