ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா… `பாகுபலி' பிரபாஸா இது?

காதலும் காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் உலகில், ஜோசியத்தால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும்; நோயினால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும் காதலிக்கிறார்கள். என்ன நடந்திருக்கும் என நீங்கள் யூகிப்பததுதான் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ஒன்லைன். 1970-களில் பதவி வகித்த அந்த இந்தியப் பெண் பிரதமரிடம் சென்று, அவரின் கை ரேகையை பார்த்து ‘நீங்கள் எமர்ஜென்சி அறிவிக்கப்போகிறீர்கள்’ என்று முன்கூட்டியே கணித்துச் சொல்லும் அளவுக்கு செல்வாக்குப் பெற்ற கை ரேகை ஜோஷியர் விக்ரமாதித்யா என்கிற ஆதித்யா. … Read more

மதுரை சிறுமி மர்ம மரணம்; காதலன் குடும்பம் கைது! – தொக்கி நிற்கும் கேள்விகள்… நடந்தது என்ன?

”குற்றவாளிகள் கைது செஞ்சுட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா, விவரம் தெரியாத புள்ளைய கூட்டிட்டு போய் என்ன பண்ணானுங்கிற கேள்விக்கு பதில் இல்லை. அவ குடும்பத்தோட ஏழ்மையை பயன்படுத்தி அரசாங்கமும், போலிஸும் கேஸை முடிசுட்டாங்க” என்று ஆதங்கப்படுகிறார்கள் மேலூர் வட்டாரத்தை சேர்ந்தவர்கள். சிறுமி மரணம் மதுரை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ஹனிபா கடத்தி சென்றதாக மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மார்ச் 2-ம் … Read more

ஆசிரியர் பணியில் ஆரம்பம்; ஆளுயர சிலையால் அரசியல் அஸ்தமனம்! – ஏன் மாயமானமார் மாயாவதி!

“எனக்குப் பின்னும் எனது லட்சியம் தொடரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான என் லட்சியப் பணிகளை எனக்குப் பின்னால் தொடரும் பணியை மாயாவதியிடம் ஒப்படைக்கிறேன்” – 2001-ம் ஆண்டு அரசியலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்தபோது கன்ஷி ராம் சொன்ன வார்த்தைகள். அதே கன்ஷி ராம் இன்றிருந்தால் “என்னோடு என் லட்சியமும் புதைந்துவிடும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று சொல்லியிருப்பார். மாயாவதியின் மௌன அரசியலே அதற்குக் காரணமாக இப்போது இருந்திருக்கும். கணிக்க முடியாத அரசியல்வாதி என்று … Read more

`5 ஆண்டுகளில் தெலங்கானாவில் சிறுநீரக நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும்!'- ஆய்வு சொல்லும் காரணமென்ன?

தெலங்கானாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்படையும் என ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவில் ஒவ்வொரு மாதமும் 20 முதல் 40 வயதுக்கு உள்பட்ட 15 முதல் 20 பேர் தீவிர சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக தெலங்கானாவின் சிறுநீரக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Patient (File Pic) `அப்பாவுக்குக் கொரோனா + சிறுநீரக அறுவை சிகிச்சை; ஆனாலும் நம்பிக்கையோடு மீண்டோம்!’ #SpreadPositivity சிறுநீரக … Read more

விபத்தில் கையை இழந்த பெண்; செயற்கை கை பொருத்தி உதவிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராகிணி (32). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இயந்திர வேலை பார்த்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை துண்டாகியது. உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்துவிட்டனர். கை இல்லாமல் சிரமப்பட்ட பெண் கைவிரித்த தனியார் மருத்துவமனை; 525 கிராம் எடை கொண்ட குழந்தையைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்! ஆனாலும், வலது கையை இழந்து 20 ஆண்டுகளாகச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ராகிணிக்கு, புதுக்கோட்டை … Read more

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா | விருந்தோம்பல் #MyVikatan

இந்நாள் குழந்தைகளிடம் தங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால் நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, குல்ச்சா என்று ஒரு பெரிய பட்டியலே அடுக்குவார்கள். ஆனால், 80ஸ் கிட்ஸ் & 90ஸ் கிட்ஸிடம் பிடித்தமான உணவு பற்றிக் கேட்டால் முதலில் சொல்வது சப்பாத்தியும் வெஜ் குருமாவும்தான். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் நம் பலரது வீடுகளிலும் அம்மாக்கள் ஒரு காரணத்தோடு இந்த வெஜ் குருமா + சப்பாத்தி செய்வார்கள். பலவித காய்கறிகள் சேர்ப்பதால் சத்தும் சுவையும் மிகுமே… அதுதான். சில நேரங்களில் சின்ன துண்டு … Read more

ஆரணி: கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.2.39 கோடி மோசடி! – அதிமுக பிரமுகர் உட்பட 4 பேர் சிறையிலடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகர கூட்டுறவு வங்கி இயங்குகிறது. வங்கி மேலாளராக ஆரணியைச் சேர்ந்த லிங்கப்பா, நகை மதிப்பீட்டாளராக மோகன் என 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பல்வேறு நிலைகளில் பணிபுரிகிறார்கள். இந்த கூட்டுறவு வங்கியின் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த அசோக்குமார் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டிருந்தார். அசோக்குமார் ஆரணி நகரச் செயலாளராக அ.தி.மு.க-வில் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். இவரின் தந்தை அர்ஜுனன் 1977-ல் ஆரணி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருந்தவர். கூட்டுறவு வங்கியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அசோக்குமார், சுமார் … Read more

Elon Musk: கிரேஸி ஐடியாக்கள்; கொஞ்சம் மனஉறுதி; – அவரின் வெற்றிப் பயணம் சாத்தியமானது எப்படி?

எலான் மாஸ்க்கின் சொத்து மதிப்பு 22,110 கோடி டாலர் என கூகுள் சொல்கிறது. பிரபஞ்சத்தின் அதிக சொத்துடைய தனிநபர் பட்டியலில் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் எலானின் வாழ்க்கை எப்போதுமே மலர்ப்படுக்கையிலேயே நகர்ந்தது இல்லை. யாரை விடவும் அதிகமான விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளானவர் தன்னை நோக்கி வீசப்பட்ட சொற்களுக்கு எல்லாம் செயலில் பதில் சொன்னார், சொல்லிக் கொண்டும் இருக்கிறார். ‘பெரிதினும் பெரிது கேள்’ எனப் பாரதி பாடியதைப் போல, பெரிதினும் பெரிதாக யோசித்து அதனைச் செயல்படுத்தியும் காட்டியவர். Elon … Read more

பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த ஏவுகணை… இந்தியப் பாதுகாப்புத்துறை விளக்கம்!

உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் ஏவுகணை ஒன்று திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணையின் பாகங்களைப் பறிமுதல் செய்து பாகிஸ்தான் சோதனை செய்தது. முன்கூட்டியே சரியான தகவல் எதுவும் கொடுக்காமல் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைக்கு இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஏவுகணை சோதனை இந்த நிலையில், இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் … Read more