“கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்றவர்கள், உடனடியாக…" – ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று மறைமுக தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடந்தது. முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான வெற்றியைப் பெற்றிருக்கும் தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் இடங்களை ஒதுக்கியது. அதன்படி, வி.சி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை மறைமுகத் தேர்தலுக்கு முன்னிறுத்தியிருந்தன. திமுக-வின் கூட்டணிக் கட்சியினர் நகராட்சி, பேரூராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், … Read more

கோலிவுட் ஸ்பைடர்: கமல், உதயநிதியின் அரசியல் இன்னிங்ஸ் பிளான்; நடிகராகிறாரா ரகுவரனின் மகன்?!

* ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் நலன் குமாரசாமி. அவரது ‘காதலும் கடந்துபோகும்’ படத்திற்கு பின் ஒரு ஆந்தாலஜி படம் தவிர, மீண்டும் டைரக்‌ஷன் பக்கமே கவனம் செலுத்தாமல் இருந்தார். அதன் பின் மீண்டும் விஜய் சேதுபதியையே இயக்குவார் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்போது அடுத்த கதையை ரெடி செய்துவிட்டு, ஆர்யாவிடம் அதைச் சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட ஆர்யா, தேதி இல்லையென ஒதுங்கிவிட்டார். இப்போது அந்த கதையை ‘தரமணி’ … Read more

மறுமணம் செய்கிறார் டி.இமான்; மணப்பெண் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி,இமான். இவருக்கும் மோனிகா ரிச்சர்டு என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில், சில மாதங்களுக்கு முன்பு சட்ட ரீதியாகத் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் அறிவித்தார் இமான்.“வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை. … Read more

கடனை செலுத்தத் தவறிய Future Retail நிறுவனம்; இந்தியன் வங்கிக்கு ₹800 கோடி நஷ்டமா?

கிஷோர் பியானியின் தலைமையிலான ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்துக்குத் தந்த கடன் வாராக் கடனாக மாறியுள்ள சூழலில், இந்த நிதி ஆண்டின் காலாண்டில் ரூ.800 கோடி நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவதற்கு கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடந்து, அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் , ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீடு செய்திருந்தது. இந்த நிலையில், தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் ஃப்யூச்சர் ரீடெய்ல் … Read more

"`மாமன்னன்' டைட்டில் லுக் போஸ்டரில் என் பெயர் முதலில் இடம்பெற்றதைக் கெளரவமாக நினைக்கிறேன்!"- வடிவேலு

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ எனும் படத்தை இயக்கிறார். ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலுவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வடிவேலு இன்று இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதில் வடிவேலு பெயரை முதல் பெயராக எழுதி டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. வடிவேலுவைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் … Read more

உக்ரைனிலிருந்து திரும்பும் இந்திய மாணவர்களின் மருத்துவப் படிப்பு இனி..?!

உக்ரைனில் இந்திய மாணவர்கள்! பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைனில் படித்துவருகிறார்கள். குறிப்பாக அந்த நாட்டில் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவக் கல்வி தான் பயின்று வருகிறார்கள். மருத்துவக் கல்விக்கு அடுத்தபடியாக அங்கு பொறியியல் பயிலும் மாணவர்களும் அதிகம் இருக்கிறார்கள். இந்திய மாணவர்கள் தவிர உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் உக்ரைனில் கல்வி கற்றுவருகிறார்கள். உக்ரைனில் மாணவர்கள் மருத்துவம் பயில ஆர்வம் கட்டுவதற்கு, அங்குக் கல்விக் கட்டணம் குறைவு என்பதும், அங்கு மருத்துவம் பயின்றால் பல்வேறு நாடுகளில் மருத்துவராக … Read more

மீண்டும் இணையும் ஜெயம் ரவி – நயன்தாரா! இந்தப் புதிய படத்தில் என்ன ஸ்பெஷல்?

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம், ‘பூமி’. அதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பின், ‘பூலோகம்’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ‘அகிலன்’ என்ற ஆக்‌ஷன் படத்தையும் முடித்திருக்கிறார். ஜெயம் ரவி இதற்கிடையில் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் அகமத் இயக்கத்தில் டாப்ஸியுடன் ‘ஜன கண மன’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். படத்தின் இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்திருந்த நிலையில், கோவிட் காரணமாக மீதமுள்ள போர்ஷனை … Read more

நெல்லை: சுமுகமாக முடிந்த மேயர் தேர்தல்! – முடிவுக்கு வராத கவுன்சிலர்களின் டூர்

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 51 இடங்களை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க 4 வார்டுகளில் மட்டுமே வென்றது. தி.மு.க-வுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்ததால் மேயர், துணை மேயர் பொறுப்புகளுக்கு பலரும் ஆர்வம் காட்டினார்கள். அதனால் தி.மு.க கவுன்சிலர்கள் கேரளாவில் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மேயர் சரவணன் மேயர், துணை மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை அறிவித்ததால் இன்று நடத்த மேயர் தேர்தலில் பி.எம்.சரவணன் போட்டியின்றி தேர்வானார். அவருக்கு நெல்லை மத்திய மாவட்டச் … Read more

"எந்த சூழலிலும் கண்ணன் என்னை விட்டுக் கொடுக்கல!" – பர்சனல் பகிரும் தீபிகா

‘என் அம்மாவும், அப்பாவும் தான் என் பலமே… சில சமயம் ஏதாச்சும் சீரியல் வாய்ப்பு வந்துச்சான்னு கேட்பாங்க… இதுவரைக்கும் அவங்களுடைய கஷ்டத்தை என்கிட்ட காட்டினதில்ல. நானும் அவங்ககிட்ட என் கஷ்டத்தை காட்டினதில்ல. ரெண்டு பேரும் தூரமா இருக்கிறதனால முடிஞ்ச அளவுக்கு சோகத்தை வெளிக்காட்டிக்காம சந்தோஷத்தை பரிமாறிக் கொள்வோம்!’ என்றவாறு பேசத் தொடங்கினார் தீபிகா. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் அந்தத் தொடரில் இருந்து விலகியதை அடுத்து தற்போது எப்படி இருக்கிறார் … Read more

ரஷ்ய படைகளின் தாக்குதல்: ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ விபத்து! – உக்ரைன் தகவல்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9வது நாளாக போர் நீடித்து வருகிறது . இந்த நிலையில் தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷ்ய படைகள் நேரடியாக தாக்குதல் நடத்தின. அப்போது சபோரோஷியாவிலுள்ள அணுமின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதான் ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமாகும். 1986-ல் சோவியத் யூனியனில் இருந்த செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து உயிரிழப்பிலும், பொருளாதாரத்திலும் வரலாற்றில் இன்றுவரை மிகப்பெரிய பேரழிவாக … Read more