எந்த ஒரு உடன்படிக்கையின் போதும் உழைக்கும் மக்களின் உரிமைகளை நாம் புறக்கணித்துவிட மாட்டோம் – பிரதமர்
உழைக்கும் மக்களின் இரத்தத்தினாலும் வியர்வையினாலும் போசிக்கப்பட்ட பழம்பெரும் வரலாற்றைக் கொண்ட தாய்நாட்டில் 137வது சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியின் மத்தியிலேயே இன்று நாம் அதைக் கொண்டாடுகிறோம். இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்ட உலகின் பல நாடுகள் உழைக்கும் மக்களின் பலத்தினாலேயே மீண்டெழுந்தன. அது எமது பாரம்பரியமும் கூட. பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு விவசாயிகள் ஒரு ஆரம்பத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். முதலில் நாட்டை உணவில் தன்னிறைவு அடையச் செய்வதில் விவசாயிகள் முன்னிலை வகித்தனர். … Read more