நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. 2023 மே 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களுக்கு பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம், மாவட்டங்களிலும் கரையோரப்பிரதேசங்களில் காலை … Read more

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மேலதிக செலவீனத்தை சேமிக்க முடியும் என தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஓட்டுநர் உரிமம் வழங்கும் போது தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்பட்ட உடல் மற்றும் மனநிலை தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தேசிய போக்குவரத்து … Read more

மற்றொரு விமான நிலையம் அமைக்க தயாராகும் அரசாங்கம்

விமானப்படையால் நடத்தப்படும் ஹிகுரக்கொடட விமான ஓடுதளத்தை மேம்படுத்தி மற்றுமொரு சிவில் விமான நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (03.05.2023) துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது. தற்போதுள்ள ஓடுபாதையின் நீளம் 2287 மீட்டர். இதனை 2800 மீட்டராக நீட்டித்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கட்டுமானம் விமான தளம் … Read more

போராட்டக்காரர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட அரசியல்வாதி : ஊடகங்களின் வகிபாகம் தொடர்பில் அமைச்சர் பகிரங்க கேள்வி

கடந்த ஆண்டு அரகலய போராட்டத்தின் போது ஊடகங்கள் ஆற்றிய பங்கு குறித்து அரசாங்கம்  கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தாக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்ட போது ஊடகங்கள் ஆற்றிய பங்கு தொடர்பில் தனக்கு கேள்விகள் இருப்பதாக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (03.05.2023)  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் ஊடக சுதந்திரம் இலங்கையில் ஊடக … Read more

ஜனாதிபதியின் இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம்! ஜெ. ஸ்ரீ ரங்காவிற்கு பிணையில் செல்ல அனுமதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றச்சாட்டு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த வருடம் ஜீலை 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

இந்நாட்டிலுள்ள அப்பாவி மாணவர்களின் உயிரைப் பறிக்காது, தொழில்சார் போராட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மனித நேயத்துடன் செயற்படுங்கள் – அமைச்சர் பந்துல குணவர்தன

இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான அப்பாவி மாணவர்களின் உயிரைப் பறிக்காமல் தொழில்சார் போராட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மனித நேயத்துடன் செயற்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உயர்தர வினாத்தாள்கள் பரிசீலிக்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடன் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச ஊழியர்கள் உட்பட இலங்கை … Read more

நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா(வயது 69) சென்னையில் இன்று (03.05.2023) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இயக்குனர் மற்றும் நடிகர் இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். ஆகாய கங்கை, பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் உட்பட 24 படங்களை இயக்கியுள்ளார். இதேவேளை … Read more

அலங்கார மீன் வளர்ப்பில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டும் வழிகளில் அலங்கார மீன் தொழில்துறை மற்றும் நீர்த் தாவர தொழில்துறை முதன்மையானதாக கருதப்படுவதோடு இந்தத் தொழில்துறையில் ஈடுபாடு காட்டுகின்ற பண்ணையாளர்களை அதிகரிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை தற்போது திட்டங்களை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாதுக்க, ஹோமாகம பிரதேசங்களுக்கு கடந்த 30 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு இடங்களை பார்வையிட்ட பின்னர் பாதுக்க … Read more

வாழைப்பழ ஏற்றுமதி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் புதிய வழியாக மாற்றம் …

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு அம்பிலிபிட்டிய மற்றும் செவனகல பிரதேசங்களில் வாழைப்பழம் செய்கை அதிகரித்துள்ளதால் இரண்டு வாழைப்பழம் பதப்படுத்தும் வலயங்களை நிறுவ விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது விவசாய அமைச்சின் கீழ் விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தினால் ராஜாங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், செவனகல மற்றும் எம்பிலிபிட்டிய வாழை விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். … Read more

வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அலுவலகத்தினால் 07 செயலணிகள்

நாட்டில் “வர்த்தக நட்பு சூழலை” உருவாக்கும் நோக்குடன், ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது. முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும், அதற்குத் செலவிடப்படும் நேரத்தைக் குறைக்கவும், தேவையான தகவல்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, செயலணிகளுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படுவதோடு அதற்கான நிலையான முறைமைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகப் பிரவேசத்தை இலகுபடுத்துவதற்காக கம்பனி பதிவாளர் அலுவலக சட்ட கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவது … Read more