வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (video)

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றம் இன்று (27.04.2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் எடுத்துச்செல்லப்பட்ட விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலாம் இணைப்பு வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பூஜை வழிபாடுகள் நேற்று (26.04.2023) ஆரம்பமாகி உள்ளன. வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன் ஏனைய விக்கிரகங்களும் … Read more

நைஜீரிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் இராணுவத் தளபதியை சந்திப்பு

நைஜீரியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 17 கல்விசார் உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு ஆறு நாள் சுற்றுப்பயணத்தை மேற் கொண்டுள்ளனர். எயார் கொமடோர் ஒசிசினகாசெது யூபிஎடிஐகேஈ அவர்கள் தலைமையிலான குழு ​செவ்வாய்கிழமை (25) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர். இராணுவத் தலைமையகத்தை வந்தடைந்த தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிகேஎஸ்கே தொலகே … Read more

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பௌதீகவியல், இரசாயனவியல், கணிதம், விவசாயம், உயிரியல், இணைந்த கணிதம், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கை, வணிகக் கற்கைகள், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.  அதன்படி, இதுவரை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்களும், 2022 … Read more

விமல் வீரவன்சவினால் தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் விளக்கம்

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தொடர்பில் பா. உ. விமல் வீரவன்ச அவர்களால் தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. தென் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நட்பு நாடுகளுக்கிடையே ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு மாநாடான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலை கூட்டம் 2022 ஜூலை 07ஆம் திகத அன்று இந்தியாவில் நடைபெற்றது. அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் … Read more

கடற்றொழில் அபிவிருத்திக்கு சவுதி அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற முயற்சி

கடற்றொழில் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கு சவுதி அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சிற்கு இன்று (27) வருகைதந்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் முன்னேற்றும் நோக்கில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய பல்வேறு திட்ட முன்வரைபுகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை சவுதி அரசாங்கத்திடம் … Read more

“ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தகக் கண்காட்சி” ஒக்டோபர் 20 முதல் 29 வரை

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தக கண்காட்சி” தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் ஜனாதிபதி அலுலகத்தில் நேற்று (26) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது. “ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தக மன்றம் மற்றும் வர்த்தக கண்காட்சி” (UAE – Sri Lanka Business Forum and Trade Fair) 2023 ஒக்டோபர் … Read more

கோழி இறைச்சி , முட்டைக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பது குறித்து அரசு கவனம்

கோழித் தீவன உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கோழி இறைச்சி மற்றும் முட்டைக் கைத்தொழிலை சீரான முறையில் முன்னெடுத்து, நாட்டின் கோழி மற்றும் முட்டைத் தேவையை தொடர்ச்சியாக பூர்த்தி செய்வது மற்றும் நியாயமான விலையில் நுகர்வோருக்கு வழங்குவது என்பன குறித்து … Read more

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடும் இலங்கை

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரண்ணாகொடவை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் இட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானம் குறித்து கடும் கரிசனை கொண்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். மிக நீண்ட கால இலங்கையின் நட்பு நாடான அமெரிக்கா தன்னிச்சையாகவும், உரிய நடைமுறைகளை … Read more

இரட்டை சதமடித்த நிஷான் மதுஷ்க….

சுற்றுலா அயர்லாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான நான்காவது நாள் போட்டியில் நிஷான் மதுஷ்க இரட்டை சதம் அடித்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்கு முன்னர், இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 489 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதன்போது நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.