தலைமைத்துவ பொறுப்பு ஏற்க தயார் – நாமல் பகிரங்க அறிவிப்பு

எந்தவொரு அரசியல் பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்த பின்னரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சி முன்வைக்கும் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார் என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் கட்சியின் மறுசீரமைப்புக்காக பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். சிங்கள … Read more

இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப்படுகொலை

அம்பாந்தோட்டை, பழைய புந்தல வீதியில் இளைஞர் ஒருவரின் சடலம்மீட்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பாரிய வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நபருக்குச் சுமார் 30 வயது இருக்கலாம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். Source link

கச்சத்தீவில் மத கலவரத்தை உருவாக்க புத்தர் சிலை!திருமாவளவன் எடுத்துள்ள நடவடிக்கை(Photo)

கச்சத்தீவில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் புத்தர் சிலையை நிறுவியமைக்கு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,“சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போது வரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. ஓர் கிறித்தவ திருவிழா கிறித்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் … Read more

இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

விசா இல்லாத வெளிநாட்டவர்களையும் இந்த நாட்டில் குடியுரிமை இல்லாத இலங்கையர்களையும் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்தச் சுற்றிவளைப்பின் போது இந்த மாதம் சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை அவர்களில் சில வெளிநாட்டவர்கள் நாட்டின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளனர். வீசா காலாவதியான அனைத்து நபர்களையும் கைது செய்து நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. Source link

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, தியகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இன்று இடம்பெற்ற இந்த விபத்தில், வீரபிட்டிய, மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதிப் குமார அஸ்விஸ் (வயது – 30) என்பவரே  உயிரிழந்துள்ளார். குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துகொண்டிருந்த ‘கள்’ லொறியும், ஹட்டனில் இருந்து கினிகத்தேன நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.   மழையுடனான காலநிலை இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். … Read more

கொழும்பில் உள்ள மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பு மாவட்டத்தில் மாரடைப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இவ்வாறான உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர விபத்து மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.   கொழும்பு மாநகசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாத்திரம் சுமார் 90 சதவீதமான மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.  உயிரிழப்புகள் அதிகம் இந்த பகுதிகளில்  ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முப்பது முதல் … Read more

கைவிடப்பட்டது இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (28) நடைபெறயிருந்த நிலையில், மழையினால் இப்போட்டி கைவிடப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. எனினும் இத்தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையில் 31 ஆம் திகதி 6.30 மணிக்கு மூன்றாவது ஒருநாள் போட்டி … Read more

இப்போதே அவசியமில்லை! சரியான தருணத்திற்காக காத்திருக்கும் மகிந்த

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சரியான நேரத்தில் இணைந்து கொள்வார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் எழுப்பப்பட்ட பொதுஜன பெரமுனவின் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சரியான நேரத்தில் இணைவோம் மேலும், நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம். பொதுஜன பெரமுனவில் இருந்து சென்றவர்கள் … Read more

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் குறித்த தேசியக் கொள்கைக்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு UNFPA பாராட்டு

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலகப் பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை … Read more

22 இலட்சத்திற்கும் மேற்பட்ட நலன்புரி விண்ணப்பங்களின் தகவல்களைச் சரிபார்க்கும் செயல்முறை நிறைவு

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் சரியான தகவல்களை வழங்கி பலன்களை இழப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு விண்ணப்பதாரிகளிடம் கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட 22 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் 340 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து பெறப்பட்ட 37 … Read more