காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்!

 நாட்டைப்பற்றிச் சிந்தித்து புதிய அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார். பண்டாரகம தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன காரியாலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  ‘சிஸ்டம் சேன்ஞ்”அவசியம்தான், அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக உறுதியாக நிற்பவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில், நாம் அதைச் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  மேலும் தெரிவித்ததாவது, ஏப்ரல் மாதம் முதலே வீடுகளைத் … Read more

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைக்க அரசாங்கம் தயாரில்லை – சாகல ரத்நாயக்க

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்திற்கமைய சிவில் பாதுகாப்பு சேவை, (Depreciating service) காலாவதியாகும் சேவையாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம் நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன் பிரகாரம், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு 60 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு, 55 வருடங்களில் சேவைக்கால நீடிப்பைக் கோர … Read more

ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியக்குறைப்பு! முடிவை அறிவித்த அமைச்சர்

பணிக்கு வராத மற்றும் கடந்த வாரம் புதன்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக் குறைப்பை விதிக்க தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த விடயத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் எதிராக தேவையான சட்ட நடவடிக்கையும் அமைச்சினால் மேற்கொள்ளப்படும். … Read more

பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதிற்குற்பட்ட கிரிக்கெட் அணி அங்கே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் பங்கேற்கும் முக்கோண இளையோர் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை நேற்று (26) அபுதாபியின் டோலேரன்ஸ் ஓவல் மைதானத்தில் வைத்து எதிர் கொண்டது. இப் போட்டியில் … Read more

கிராமப்புற வீதிகளில் பொதுப் போக்குவரத்தை கட்டியெழுப்ப 500 புதிய பஸ்கள்

கிராமிய வீதிகளில் பொதுப் போக்குவரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள டிப்போக்களுக்கு பேருந்துகளை விநியோகிக்கும் நிகழ்வு நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (27) இடம்பெற்றுள்ளது. இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த பேருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த … Read more

சீரியல் நடிகர் தீபக்கிற்கு இவ்ளோ பெரிய மகனா .. எப்படி இருக்காருன்னு பாருங்க!

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தீபக். இவர் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சேலஞ்ச் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இவர் தென்றல், அண்ணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” என்ற சீரியலில் நடித்து வருகிறார். குடும்ப புகைப்படம்  தீபக் 2008 -ம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்னித் மகன் உள்ளார். இந்நிலையில் தீபக் … Read more

விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் திட்டமிடல்களை வகுப்பதற்காக நிபுணர் குழு ஜனாதிபதி பணிப்புரை

அனைத்து விளையாட்டுத் துறைகளும் உள்ளடங்கும் வகையில் திறமையான 100 வீர வீராங்கனைகளை தெரிவு செய்து அவர்களுக்கான வசதிகள் மற்றும் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை. தியகம மஹிந்த ராஜபக்‌ஷ விளையாட்டுத் தொகுதியை விளையாட்டுத்துறைக்கான பல்கலைக்கழகமாக அபிவிருத்திச் செய்வது குறித்து ஜனாதிபதியின் அவதானம்.பேஸ் போல் விளையாட்டினை 100 பாடசாலைகளில் பிரபல்யப்படுத்த திட்டம்.இந்நாட்டு விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை … Read more

இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை (28) நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்தின் ஒக்லாந்து நகரின் ஈடன் பார்க் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49.3 … Read more

வாகன சாரதிகளுக்கு கடுமையாகும் சட்டம்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் பிணை வழங்காமல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையக கட்டளை அதிகாரிகள், பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த பிறகு, அவர்கள் இரண்டு முறைகளில் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதன் பின்னர், … Read more

அரசாங்கத்தின் 25 வருட மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் – ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டை மேம்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூகத்தினருக்கு அழைப்பு. இலங்கை எந்நேரத்திலும் அரசியல் ஸ்திரத் தன்மையை தக்கவைத்துக்கொள்ளும் அதேநேரம் மிகப்பெரிய பொருளாதார குழுவொன்றுடன் முன்னோக்கி பயணிக்க எதிர்பார்க்கிறது.இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச் செல்லும் … Read more