கேக் கொள்வனவு செய்வதை தவிருங்கள்! இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்களை கொள்வனவு செய்யவேண்டாம் என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி கேக் தயாரிக்க வேண்டாம் என்று வெதுப்பக உரிமையாளர்களிடம் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த … Read more

காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டு விவகாரம்! வெளியான அறிக்கை

கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி தேசிய மக்கள் படையினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகள் காலாவதியாகவில்லை என பொலிஸ் பொது பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரினால்  கோட்டை நீதவான் திலின கமகேவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த 13ஆம் திகதி பொலிஸ் மக்கள் தொடர்பு முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளரிடம் கோட்டை நீதவான் திலின கமகே வழங்கிய உத்தரவுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அன்றைய தினம் போராட்டத்தின் மீது 26 … Read more

வரவிருக்கின்ற குரு பெயர்ச்சி!பண மழையில் நனைய போகும் இரு ராசிக்காரர்கள்-நாளைய ராசிபலன்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள குரு பெயர்ச்சி பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் குருவால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கபோகின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW     மேஷம் ரிஷபம் … Read more

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள காணியும் பறி போகிறது: ஆளுநர் நடவடிக்கை!

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள 65 ஏக்கர் வவுனியா விவசாய பண்ணை காணியையும் மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் வகையில் ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார். வவுனியா –  ஏ9 வீதி, தாண்டிக்குளத்தில் விவசாய கல்லூரிக்கு அண்மித்ததாக விவசாயபண்ணை காணப்படுகின்றது. குறித்த விவசாய பண்ணையானது 65 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளதுடன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஆளுகையின் கீழ் உள்ளது. இந்நிலையில், அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகக் குறித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் காணியை … Read more

அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இரு பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள்  குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும்  ஸ்ரீலங்கன் விமான சேவையில் டுபாயில் இருந்து இன்று காலை வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இலத்திரனியல் விசா இதன்போது அவர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கான ஆவணங்களை விமான நிலைய குடிவரவு அதிகாரியிடம் வழங்கியபோது, அவை போலியானவை என்பதை அந்த அதிகாரிகள் அவதானித்துள்ளனர். அத்துடன், குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவர்களது பயணப் … Read more

சிலை அரசியல் : அறிவும் செயலும்

Courtesy: நிலாந்தன் வடக்கில் கடந்த ஒரு கிழமைக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. நடராஜர் சிலை, வள்ளுவர் சிலை,சங்கிலியன் சிலை, என்பவற்றோடு திருநெல்வேலி சந்தையில் மணிக்கூட்டுத் தூபி ஒன்று. இச்சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலைக் கடந்த வாரக் கட்டுரையில் ஓரளவுக்குப் பார்த்தோம். இச் சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் மத அரசியலைத் தனியாகப் பார்க்கவேண்டும். இன்று இக்கட்டுரையானது இச்சிலைகளின் அழகியல் அம்சங்களைக் குறித்த விவாதக் குறிப்புகள் சிலவற்றை முன்வைக்கின்றது. பொதுவெளிச் சிற்பங்கள் அவற்றை நிறுவும் நிறுவனங்கள் அல்லது … Read more

பலரை சோகத்தில் ஆழ்த்திய கொழும்பு மாநகர சபையின் பணியாளர்கள் இருவரின் மரணம்!

கொட்டாஞ்சேனை – ஹெட்டியாவத்தை சுற்றுவட்டத்தில் உள்ள கழிவு நீர் வெளியேற்றும் குழியில் தவறி வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.   இச் சம்பவம் இன்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.  கழிவு நீர் வெளியேற்றும் குழியை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் பணியாளர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  இருவர் பரிதாபமாக பலி இச்சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பணியாளர்கள் இருவரில் ஒருவர் கழிவு நீர் வெளியேற்றும் குழியில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற மற்றைய நபரும் மலசலகூட குழியில் … Read more

உக்ரைன் போரைப் பார்த்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் திரும்பியுள்ள சுவிஸ் மக்கள்…

உக்ரைன் போர் சுவிஸ் மக்களுடைய எண்ணங்கள் மீது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன. பெருகும் ஆதரவு உக்ரைன் போர், ஐரோப்பிய ஒன்றியத்தைக் குறித்த சுவிஸ் மக்களின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவு தரும் சுவிஸ் மக்களுடைய எண்ணிக்கை பெருகியுள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன.  ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன? சுவிஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, ஐரோப்பிய ஒன்றியம் மீது பாஸிட்டிவ் எண்ணம் கொண்ட சுவிஸ் … Read more

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்!

 நாட்டைப்பற்றிச் சிந்தித்து புதிய அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார். பண்டாரகம தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன காரியாலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  ‘சிஸ்டம் சேன்ஞ்”அவசியம்தான், அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக உறுதியாக நிற்பவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில், நாம் அதைச் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  மேலும் தெரிவித்ததாவது, ஏப்ரல் மாதம் முதலே வீடுகளைத் … Read more

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைக்க அரசாங்கம் தயாரில்லை – சாகல ரத்நாயக்க

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்திற்கமைய சிவில் பாதுகாப்பு சேவை, (Depreciating service) காலாவதியாகும் சேவையாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம் நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன் பிரகாரம், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு 60 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு, 55 வருடங்களில் சேவைக்கால நீடிப்பைக் கோர … Read more