சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் சுங்கப் பிரிவினரால் மீட்பு

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட தொலைக்காட்சிகள், குளிரூட்டிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். ஐக்கிய அரபு நாடுகளில்  (UAE) இருந்து பயன்படுத்தப்பட்ட  இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் பொருட்களில் 68 தொலைக்காட்சிகள், 77 குளிரூட்டிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட டயர்கள் அடங்குவதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.  Source link

சர்வதேச நாடுகளில் இலங்கை மரக்கறி – மீன்களின் விலைகளில் திடீர் அதிகரிப்பு ஏற்படலாம் (Video)

வெளிநாடுகளில், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பணவீக்கம் 60 தொடக்கம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையில் விலைமட்டங்கள் வெளிநாடுகளில் அதிகரித்தது என்பது உண்மை. ஒருபக்கம் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து குறைவடைந்துகொண்டு போகும் நிலைமை இருந்தாலும் … Read more

மாந்தை மணல் அகழ்வு விவகாரம்: பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை!

மன்னார் – மாந்தை மேற்கில் சட்டவிரோதமாக இடம் பெறும் செயற்பாடுகளுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயல்படுகிறார். எனவே அவர் எந்த வகையிலும் எமது பிரதேசத்திற்குப் பொருத்தமானவர் இல்லை. அவரை இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என ஆத்திமோட்டை கமக்கார அமைப்பின் செயலாளர் ஐ.கணேசபதி தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(03.03.2023) சட்ட விரோதமான முறையில் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தலைமையில் மணல் … Read more

மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை தனக்கு கடன்வழங்கிய இந்தியா சீனா உட்பட அனைத்து முக்கிய நாடுகளிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களை இதுவரை பெற்றுள்ளது. இதன் காரணமாக சர்வதேச நாணயநிதியம் ஏப்பிரல் 20ம் திகதி இலங்கைக்கான நான்குவருட நிதிஉதவி திட்டத்திற்கு அனுமதி வழங்கவுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  சர்வதேச ஊடகமான ரொய்ட்டருக்கு வழங்கிய செய்தியியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில், சர்வதேச நாணயநிதியம் ஆறுமாத்திற்கான முழுமையான பிணையெடுக்கும் பொதி குறித்து … Read more

சொகுசு வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கான தகவல்! விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  வாகன கொள்வனவு இதேவேளை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே கூறுகையில், வட்டி வீதங்களின் அதிகரிப்பால் வாகன கொள்வனவும் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.  இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால், அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என இலங்கை தேசிய … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புலனாய்வு அதிகாரிகளினால் 24 பேர் கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில், கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளினால் சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக, குற்றவாளிகளை தராதரம் பாராது கடுமையான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் … Read more

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்திற்கான நிவாரண நடவடிக்கையாக ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதன்படி, 01 கிலோ பேரீச்சம்பழத்திற்கு 200 ரூபா வீதம் விதிக்கப்பட்டிருந்த வரி , 01 கிலோவுக்கு 01 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி செலவிடப்படாத வகையில், புத்தசாசன, சமய மற்றும் … Read more

பேரதிஷ்டத்தை அடையவுள்ள இரு ராசிக்காரர்கள்! அதிலும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு – இன்றைய ராசிபலன்

பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றத்தின் படி கணிக்கப்படும். இவ்வாறு கணிக்கப்படும் ராசிக்கான பலன்களினால் ஒரு நபரின் எதிர்காலம் எவ்வாறு இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது. மேலும் பிரச்சினைகளின்றி சுபம் நிறைந்த வாழ்க்கை வாழவும் இந்த ராசிக்கான பலன்கள் வழிவகுக்கிறது. சிலருக்கு ராசிப்பலன் அன்றைய நாளை மங்களகரமாக ஆரம்பிக்க இறைவன் கூறும் தெய்வ வாக்கு எனவும் கருதப்படுகிறது. எனவே மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை காணலாம்.   உங்களது … Read more

உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை முன்னிலையில் இருக்க வேண்டும்.இலங்கை நெருக்கடியை எதிர்கொண்ட போது அதிலிருந்து விடுபட ஆதரவளித்த நபர்களிடையே உலக அளவில் மூன்று பெண்கள் உள்ளனர்.-சர்வதேச மகளிர் தின தேசிய விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை … Read more

அவுஸ்திரேலிய – இந்திய பிரதமர்களுக்கு முன்னிலையில் நாணய சுழற்சி

சுற்றுலா அவுஸ்திரேலிய அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதியும் நான்காவதுமான போட்டி தற்போது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் இன்று (09) ஆரம்பமானது. இந்த போட்டித்தொடரில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் இரு டெஸ் போட்டிகளிலும் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 4ஆவது மற்றும் கடைசி … Read more