நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை….

சென்னை:  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆராஜனா  5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அவர்கள்  முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற  உத்தரவிட்டுள்ளது. நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் மூத்த ஐஏஎஸ் அதி​காரி​களான குமார் ஜெயந்த், எஸ்​.கே.பிர​பாகர், வி.​ராஜா​ராமன், பி.கு​மார​வேல் பாண்​டியன், டி.​பாஸ்கர பாண்​டியன்  ஆகிய 5 பேர் முதி​யோர் இல்​லங்​கள் அல்​லது ஆதர​வற்​றோர் விடுதிக்​குச் சென்று அங்​கிருப்​பவர்​களு​டன் தங்​களது நேரத்தை செல​வழிப்​பதுடன், தங்​களது சொந்த பணத்​தில் ஸ்பெஷல் … Read more

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது – குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் சென்ற சிறுமி அன்று சனிக்கிழமை என்பதனால் மதியமே பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். ரயில் நிலையம் அருகில் உள்ள மாந்தோப்பில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று, ரயில் நிலையை சுவர் அருகே செல்லும்போது பின்னால் மர்ம நபர் தொடர்ந்து வருவதால் … Read more

அன்புமணி ராமதாஸ் நடை பயணத்துக்கு தடையில்லை! சொல்கிறார் பாமக வழக்கறிஞர் பாலு…

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணத்துக்கு தடையில்லை என்று பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , ‘தமிழக மக்களின் உரிமையை மீட்போம்’ எனக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று  (ஜுலை 25) முதல் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்த  நடை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராமதாஸ், இந்த நடை பயணத்தை தடை செய்ய வேண்டும் … Read more

120 வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில்களுக்கு ஒப்பந்தம்- ரெயில்வே மந்திரி தகவல்

புதுடெல்லி, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், ‘தற்போதைய நிலையில் சென்னை ஐ.சி.எப். நிறுவனம் 10 வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில்களை தயாரித்து வருகிறது. மேலும் 50 வந்தே பாரத் படுக்கை வசதி பெட்டிகளும் அங்கே தயாரிக்கப்படுகின்றன’ என்றார். மேலும், ‘இதைத்தவிர தொழில்நுட்ப பங்குதாரர்களிடம் 200 வந்தே பாரத் படுக்கை வசதி … Read more

Ear Health: காதில் ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்.. – விளக்கும் ENT சிறப்பு மருத்துவர்

ஐம்புலன்களில் ஒன்றான காது, கேட்பதற்கு மட்டுமல்ல… நம் உடலைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காது குறித்த அக்கறையும் அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இந்த ஸ்மார்ட்போன் உலகத்தில் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய விஷயமே! இப்படி நம் செயல்பாடுகளாலோ, மரபியல் காரணங்களாலோ சாதாரணமாக காதுவலி என ஆரம்பித்து, காது கேளாமை வரையிலும் பிரச்னைகள் நீளும் அபாயம் இருக்கிறது எச்சரிக்கிற காது, மூக்கு மற்றும் தொண்டை சிகிச்சை நிபுணர் நீரஜ் ஜோஷி, காதுகளில் வரக்கூடிய … Read more

 பாலமுருகன் திருக்கோவில்,  எல்.ஐ.ஜி காலனி – முதல் தெரு,  புது வண்ணாரப்பேட்டை, சென்னை 

பாலமுருகன் திருக்கோவில்  எல்.ஐ.ஜி காலனி முதல் தெரு  புது வண்ணாரப்பேட்டை சென்னை தல மகிமை சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ள புது வண்ணாரப்பேட்டையில் இருக்கும் சிவன் நகர் எல்.ஐ.ஜி காலனி முதல் தெருவில் கேட்டதை தந்தருளும் சென்னை புது வண்ணாரப்பேட்டை சிவன் நகர் எல்.ஐ.ஜி காலனி பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 54 கிமீ தொலைவு அல்லது தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 1.5 … Read more

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, கடந்த 2022-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒற்றுமை யாத்திரையில் சாவர்க்கருக்கு குறித்து அவதூறாக பேசியதாக நிருபேந்திர பாண்டே என்பவர் லக்னோ போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி லக்னோ மாஜிஸ்திரேட் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். … Read more

அன்புமணியின் ‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ நடைபயணத்திற்கு தமிழக காவல்துறை தடை…

‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ என்ற கோஷத்தோடு அன்புமணி மேற்கொண்டு வரும் நடைப் பயணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த நடைப்பயணத்திற்கு அனுமதி மறுத்ததோடு இதனால் வடமாநிலங்களில் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறிய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25, நேற்று மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாளை அடுத்து திருப்போரூர் கந்தசாமி கோயிலில் வழிபட்டு அன்புமணி தனது 100 நாள் … Read more

திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம் – மேகாலயாவில் சட்டம் வருகிறது

ஷில்லாங், மேகாலயா மாநில சுகாதாரத்துறை மந்திரி அப்பரீன் லன்டோ நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம். எனவே திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்து வருகிறோம். கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாமும் ஏன் அதை சட்டமாக்கக் கூடாது. இது சமுதாயத்துக்கு பெரும் பயன்தரும். … Read more

 வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு

சென்னை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால் 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ளது. இனேஉ  இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது./ இவ்வாறு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 … Read more