மத்தியபிரதேசம்: "5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்"- குடிநீரில் கலந்த கழிவுநீர்; 9 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாக்கடை நீர் கலந்த குடிநீரைக் குடித்து 7 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். விசாரணையில் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கழிவறை இணைப்பு ஒன்று தவறுதலாக குடிநீர்க் குழாயுடன் கலந்திருந்தது தெரிய வந்தது. இந்தச் சாக்கடை தண்ணீரைக் குடித்து 5 மாத குழந்தை கூட உயிரிழந்த … Read more

திருப்பதி: இன்று முதல் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு டோக்கன்கள் தேவையில்லை

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அதில், குலுக்கல் முறையில் 1 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தேர்வானவர்கள் டோக்கன்கள் மூலம் … Read more

டெலிவரி ஊழியர்கள்: "சுகாதாரக் காப்பீடு டு ஓய்வூதியம் வரை" – சமூகப் பாதுகாப்புச் சட்ட வரைவு வெளியீடு

Zomato (சோமேட்டோ), Swiggy (ஸ்விக்கி) உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள், குறைவான ஊதியம், அதிக வேலைப்பளு, பாதுகாப்பு இல்லாமை மற்றும் மரியாதையின்மை போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக டிசம்பர் 31, 2025 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு, கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் ஊழியர்களுக்குப் புதிய சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் சில திட்டங்களை அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஸ்விக்கி, ஜொமாட்டோ, உபர், ஓலா போன்ற தளங்களில் கிக் வேலை செய்பவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13.5 கோடி லட்டுகள் விற்று புதிய சாதனை

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் ‘லட்டு’ உலக பிரசித்தி பெற்றதாகும். லட்டு பிரசாத விற்பனையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கோவிலில் 2024-ம் ஆண்டு 12 கோடியே 15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2025-ம் ஆண்டு 1 கோடியே 37 லட்சம் லட்டுகள் … Read more

"ஜீ தமிழின் பதிலைப் பொறுத்தே அடுத்த மூவ்" – தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்புக் கோரும் டிவி நடிகர் சங்கம்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டி ஜீ தமிழ் சேனலுக்குக் கடிதம் தந்துள்ளது சின்னத்திரை நடிகர் சங்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் 100 சதவிகித வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்த பரத் தலைமையிலான அணி தேர்தலின்போதே இது தொடர்பான ஒரு வாக்குறுதியைத் தந்திருந்தது. தற்போது ஜீ தமிழ் சேனலுக்குச் சங்கத்தின் சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பி, இது தொடர்பாகப் பேச நேரம் … Read more

குவியும் பக்தர்கள்: சபரிமலையில் 3 நாட்களில் 2.25 லட்சம் பேர் சாமி தரிசனம்

சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை முடிந்தது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏற்கனவே வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சபரிமலையில் திரளான பக்தர்கள் குவிந்தனர். … Read more

நட்சத்திரப் பலன்கள் : ஜனவரி 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

புதுடெல்லி, மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா தலைமை நீதிபதியாக ரேவதி பிரசாந்த் மோகித் டேரே மற்றும் பாட்னா தலைமை நீதிபதியாக சங்கம் குமார் சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். மேகலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரேவதி பிரசாந்த் மோகித் டேரோ மும்பை ஐகோர்ட்டில் நீதிபதியாக உள்ளார். அதேபோல, சங்கம் குமார் சாஹூ ஒடிசா நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். மேகாலயா தலைமை நீதிபதியாக … Read more

தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் மதுபான விற்பனை மூலம் ரூ.5,102 கோடி வசூல்

ஐதராபாத், தெலுங்கானாவில் மதுபான விற்பனை 2025 டிசம்பரில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் அங்கு மதுபான விற்பனை மூலம் ரூ.5,102 கோடி வசூலாகியுள்ளது. இது வழக்கமான மாதாந்திர சராசரியை விட மிக அதிகமாகும். ஆண்டு இறுதி மற்றும் பண்டிகைக் கால விடுமுறையையொட்டி மதுபான விற்பனை அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று, மதுபான விற்பனை ரூ.352 கோடியைத் தொட்டது. டிசம்பர் 30 அன்று பதிவான ரூ.375 கோடியுடன் சேர்த்து, … Read more