புத்தாண்டு, பொங்கல் பரிசாக #TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம்! புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் பதிவு…

சென்னை: புத்தாண்டு, பொங்கல் பரிசாக #TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம், திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும் என புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து  முதல்வர் மு.க.ஸ்டாலின்  கூறி உள்ளார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், இது அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசு என கூறியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய … Read more

திமுக தேர்தல் அறிக்கை: மக்கள் கருத்தை பதிவு செய்ய சமூக வலைதள தொடர்புகளை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக,  மக்கள் கருத்தை பதிவு செய்ய சமூக வலைதள தொடர்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம்,  மக்கள் தங்களது  கருத்துகளை  பதிவு செய்யலாம். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (03.02.2026 சனிக்கிழமை)  நடைபெற்ற நிகழ்ச்சி திமுகழகத் தலைவர்  ஸ்டாலின்,   பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (portal) ஆகியவற்றை அறிமுகம் செய்து … Read more

மாநில அளவில் சிறந்த நெசவாளர், வடிவமைப்பாளர் விருதுகள் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அளவில் சிறந்த நெசவாளர், வடிவமைப்பாளர் விருதுகளை 13 பேருக்கு வழங்கினார். மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த வடிவமைப்பாளர் விருதுகள் மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்க 3.1.2026 அன்று  தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் 2024-2025-ஆம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் … Read more

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் : முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் நன்றி – போராட்டம் வாபஸ்

சென்னை: முதலமைச்சர்  ஸ்டாலின் அறிவித்துள்ள “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டதுக்கு கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ,முதலமைடச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, இனிப்பு  ஊட்டி  நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களது போராட்டத்தையும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – … Read more

திருச்சி: "தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது" – சீமான் காட்டம்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனக் கற்பித்தவர் திருமாவளவன்தான். தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ, பேசவோ, எழுதுவோ வராதவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் எனத் தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. இந்தி எதிர்ப்புக்காகப் போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுடச் சொன்னவர் ஈவெரா. தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம்தான். … Read more

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு 19 நாட்கள் மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம்..!

சென்னை:  அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு 19 நாட்கள் மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அதன்படி, ஜனவரி  7ந்தேதி முதல் 20ம் தேதி வரை மாநிலம் முழுவதும்    மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் செய்கிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, செம்மலை, சி.வி சண்முகம், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செலவன் … Read more

Parasakthi Audio Launch: "சுதாகிட்ட இருந்து ஒரு நடிகரும் தப்பிக்க முடியாது" – மணிரத்னம்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் … Read more

தமிழக மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும்   ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதுடன், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது வாடிக்கையாக உள்ளது. அதுபோல, இது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சருக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதுவதும் வாடிக்கையாகவே உள்ளது. இந்த விஷயத்தில் இறுதி  முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில், எப்போதும்போல … Read more

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கோர்ட் கஸ்டடியிலிருந்த ஆதாரம் அழிப்பு; கேரள முன்னாள் அமைச்சருக்கு சிறை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் அக்கட்சியின் துணைத் தலைவராகவும் உள்ளார். பினராயி விஜயன் கேரள மாநில முதல்வராக இரண்டாவது முறை பதவியேற்றபோது கூட்டணி ஒப்பந்தத்தின்படி முதல் இரண்டரை ஆண்டுகள் அமைச்சராக இருந்தார் ஆண்டனி ராஜூ. சாலைப் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். ஆண்டனி ராஜூ வழக்கறிஞராக இருந்த சமயத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கோர்ட் கஸ்டடியில் … Read more

மாநிலத்தின் அமைதியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்! காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை:  “மக்களுக்காக சேவையாற்ற வேண்டும்”, மாநிலத்தின் அமைதியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும், சட்டம் ஒழுங்கை சமரசமில்லாமல் நிலைநாட்ட வேண்டும் என காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  3.1.2026  சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள், என … Read more