தலைப்பு செய்திகள்
பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
“பொங்கலோ பொங்கல்!”, “தை பிறந்தது வழி பிறந்தது!”, “தித்திக்கும் தமிழ்போல் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் பொங்கட்டும். உழவர்களின் உழைப்பையும், பூமியின் பசுமையையும் கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை உங்களின் குடும்பத்தில் ஒளியுடனும் மகிழ்ச்சியுடனும் மலரட்டும்! இந்த பொங்கல் பண்டிகை உங்களின் உறவுகளுக்கு உறுதியான அன்பையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும். இந்நாள் உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஒரு இனிய நாளாக அமையட்டும். தாய்மண்ணின் வளமையும், தெய்வத்தின் ஆசிகளும் இணைந்து உங்கள் வாழ்வில் வெற்றிகளை உண்டாக்கட்டும். பத்திரிக்கை.காம் (www.patrikai.com) செய்தி … Read more
2025ம் ஆண்டுக்கான சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆளுநர் விருது அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டுக்கான சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி ஆகியவைக்கான ஆளுநர் விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருதுகளை குடியரசு தினமான ஜன.26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குகிறார். சமூகசேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணிக்காக 2025-ம் ஆண்டுக்கான தமிழக ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, லோக் பவன், சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களைக் கௌரவிக்கும் நான்காவது ஆண்டாக, ஆளுநர் விருதுகள்–2025-ஐ அறிவிக்கிறது. விருது … Read more
சென்னைக்கு சீரான குடிநீர் வழங்க ரூ.3,108 கோடியில் புதிய திட்டம்! முதல்வர் உத்தரவு
சென்னை: சென்னையில் சீரான குடிநீருக்காக ரூ.3,108 கோடியில் புதிய திட்டம் தொடங்க கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் 85 குடிநீர் விநியோக அமைப்புகள் வாயிலாக சென்னையில் உள்ள 85.7 லட்சம் மக்களுக்கு தினமும் 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கி வருகிறது. ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் குடிநீர் விநியோகம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பிரதான குழாய்கள் மூலம் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டான காலங்களில் ஒரு … Read more
45 சவரன் தங்க நகைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண்; நேர்மையை போற்றிய லலிதா ஜுவல்லரி உரிமையாளர்
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரான திருமதி பத்மா, சென்னை தி.நகர் சாலையில் யாரும் கவனிக்காமல் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்ததற்காக, லலிதா ஜுவல்லரி உரிமையாளர் டாக்டர் எம்.கிரண் குமார், அவரை வீட்டிற்கு அழைத்து கௌரவித்தார். நேர்மையை போற்றிய லலிதா ஜிவல்லரி அதிபர் “இத்தகைய மனிதர்களே நமது சமுதாயத்தின் முன்மாதிரிகள். அவர்களை கௌரவித்து கொண்டாடுவது நமது கடமை,” என்று கூறிய அவர், தனது பாராட்டின் அடையாளமாக ஒரு வெள்ளித் தட்டை பரிசாகவும் … Read more
யாருடன் கூட்டணி? “இம்மாத இறுதிக்குள் கூட்டணியை அறிவிப்போம்” என்கிறார் பிரேமலதா….
சென்னை: கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறினார். ஏற்கனவே கடலூர் கட்சி மாநாட்டில் அறிவிப்பேன் என்றவர், அதை செய்யாமல் பின்வாங்கிய நிலையில், தற்போது இந்த மாத இறுதிக்குள் கூட்டணி அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் … Read more
'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' – சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!
தனித்து வாழ்பவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘Are you dead?’ என்ற செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 20 கோடியாக அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியாக வாழ்ந்து வரும் இளைஞர்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த ‘Are you dead?’ என்ற செயலி பயன்படுத்தப்படுகிறது. சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி சீன மொழியில் Sileme (நீங்கள் … Read more
ஜனவரி 20ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: ஜனவரி.20ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, வரும் ஜன.20ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் … Read more