பிரித்தானியாவைவிட்டு வெளியேறி கடற்கரை நகரம் ஒன்றில் குடியேறும் மக்கள்: பிரமிக்க வைக்கும் எண்ணிக்கை

பிரித்தானியாவில் இருந்து 50,000 பேர்களுக்கும் மேல் வெளிநாட்டில் கடற்கரை நகரம் ஒன்றில் குடியேற பதிவு செய்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், போதிய ஊதியமின்மை காரணமாக அவதிப்பட்டு வந்த பிரித்தானியர்களுக்கு அதிரவைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரம். @getty இங்குள்ள பணியிடங்களை நிரப்பும் நோக்கில் சுமார் 31,000 பிரித்தானியர்களுக்கு மூன்று மடங்கு ஊதியம் அளிப்பதாக கூறி விளம்பரம் செய்திருந்தது பெர்த் நகர நிர்வாகம். மட்டுமின்றி, இந்த … Read more

சென்னை திருவேற்காடு ஸ்ரீதேவி நகரில் தனியார் நிறுவன ஊழியர் அரிவாள் வெட்டு: போலிஸ் விசாரணை

சென்னை: சென்னை திருவேற்காடு ஸ்ரீதேவி நகரில் தனியார் நிறுவன ஊழியர் ஆரோக்கியசாமிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். ஆரோக்கியசாமியை மர்ம நபர்கள் வெட்டியபோது தடுக்க வந்த அவரது பாட்டி லட்சுமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மனைவிக்கு பாடம் புகட்டுவதற்காக வழிப்பறி நாடகமாடிய கணவர் கைது| Arrested husband who acted as a thief to teach his wife a lesson

மும்பை : மஹாராஷ்டிராவில், பணத்தை தண்ணீராகச் செலவழிக்கும் மனைவிக்கு பாடம் புகட்டுவதற்காக, 44 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்த நபரின் நாடகம் அம்பலமானதால், தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணுகிறார். விசாரணை இங்கு, அந்தேரி பகுதி யைச் சேர்ந்தவர் அமித் முகம்மது வோரா, 30, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். சமீபத்தில், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற அவர் ஒரு புகார் அளித்தார். அதில், ‘துபாயில் உள்ள என் மாமியார் 44 … Read more

Doctor Vikatan: பக்கவாதம் ஏற்படக் காரணமாகுமா ஸ்ட்ரெஸ்?

Doctor Vikatan: என்னுடைய நண்பர் எப்போதும் வேலை, வேலை என ஓடிக்கொண்டே இருப்பார். 24 மணி நேரமும் ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பதாகச் சொல்வார். திடீரென அவருக்கு பக்கவாதம் பாதித்து, பெரும் போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார். அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததற்கு ஸ்ட்ரெஸ்தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? உண்மையிலேயே ஸ்ட்ரெஸ்ஸுக்கும் ஸ்ட்ரோக்குக்கும் தொடர்புண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம். நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் ஸ்ட்ரெஸ் என்பது எப்படிப் பல பிரச்னைகளுக்கும் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 238 வாக்குச்சாவடிகளிலும் இறுதி கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆன்மிக ஹெலிகாப்டர் சேவை: புதுச்சேரி அரசு அதிரடி திட்டம்| Spiritual Helicopter Service: Puducherry Government Action Plan

புதுச்சேரி: புதுச்சேரியில், ஆன்மிக ஹெலிகாப்டர் சேவை விரைவில் துவக்கப்பட உள்ளது.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில், 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கெங்கவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவில், காசியைவிட புகழ்பெற்றதாக போற்றப்படுகிறது. இந்நிலையில், புனிதமான சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 15ம் தேதியன்று துவங்கும் புஷ்கரணி திருவிழா, தொடர்ந்து 15 நாட்களுக்கு நடக்கிறது. இதில், புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் … Read more

Doubt of Common Man: பத்ம விருதுகள் யாருக்கு வழங்கப்படுகின்றன? அதற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விகடனின் Doubt of Common man பக்கத்தில் பத்ம விருதுகள் யாருக்கு வழங்கப்படுகின்றன? அதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இதுகுறித்து கல்வியாளர் தேனி மு.சுப்பிரமணி விளக்கமளித்திருக்கிறார். இந்தியாவின் உயரிய குடியியல் விருதுகளாக பத்ம விருதுகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளை முன்னிட்டு, இந்திய அரசால் அறிவிக்கப்படும் இவ்விருதுகள் பத்ம விபூசன், பத்ம பூசன், பத்மஸ்ரீ என்று மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் இந்திய அரசு 1954 ஆம் ஆண்டில் பாரத … Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் காலை 6.25 முதல் 6.27 வரையும், இரவு 8.38 முதல் 8.40 வரை 2 நிமிடங்கள் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுக எம்.பி.க்களின் தொடர் அழுத்தத்தால் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது என கொடியசைத்து தொடக்கி வைத்தபின் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு

பைசாபாத்: ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 02.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.