திருச்செந்தூர் அருகே குலசையில் விண்வெளிப் பூங்கா! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

குலசேகரப்பட்டினம்:  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டிணத்தில், ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதனருகே  விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்தியா விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய விண்வெளி துறையில் அடுத்த முயற்சிகளும் திட்டங்களும் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால், ராக்கெட்டுகள் ஏவ உகந்த இடமாக … Read more

மகளிர் தினத்தையொட்டி மதுரையில் பெண் காவலர்களுக்கு ஒருநாள் அனுமதி விடுமுறை

மதுரை: மகளிர் தினத்தையொட்டி மதுரையில் பெண் காவலர்களுக்கு ஒருநாள் அனுமதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அனுமதியுடன் கூடிய விடுமுறை அளித்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.

ஹோலி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து| Holi Festival: Greetings from Leaders

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, கவர்னர் ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை : ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் பொழியட்டும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். கவர்னர் ரவி ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தீமையை நன்மை வென்றதை குறிக்கும் … Read more

கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்… கண்காணிப்பு தீவிரம்

கோவை  கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்தாண்டு தீபாவளிக்கு முந்தைய தினம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார்.  அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மிகப்பெரிய அளவிலான வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கோவை கார் வெடிப்பு கோவை: துப்பாக்கியால் சுட்ட ரெளடி; போலீஸார் பதில் துப்பாக்கிச்சூடு – நூலிழையில் தப்பிய ஆய்வாளர்! இந்த வழக்கு தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமேசா … Read more

தமிழ்நாடு முழுவதும் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்! அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், தற்போதைய நிலவரப்படி, சுமார்  6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக  தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பணிகளில் வடமாநிலத்தவர்களே பணியாற்றி வரும் நிலையில், வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தி, வட மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால், தொழில்தறை முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழநாடு அரசு வடமாநிலத் தொழிலாளர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறத. … Read more

சட்டவிரோத புலம்பெயர் விவகாரம்… முறியடிப்போம்: பிரதமர் ரிஷி சுனக் சூளுரை

பிரித்தானியா எதிர்கொள்ளும் சிறு படகுகள் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ‘தேவையான அனைத்தையும் செய்ய இருப்பதாக’ பிரதமர் ரிஷி சுனக் சபதம் செய்துள்ளார். ரிஷி சுனக் சபதம் பிரித்தானிய அரசு முன்னெடுக்கும் புதிய சட்டவிரோத புலம்பெயர் பிரேரணைக்கு எதிராக ஆதரவாளர்கள் அமைப்புகள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நாம் வெல்வோம் என பிரதமர் ரிஷி சுனக் உறுதிபட தெரிவித்துள்ளார். சட்டவிரோத புலம்பெயர் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தேவையான அனைத்தையும் செய்வதாகவும் அவர் சபதம் செய்தார். இதற்காக பிரித்தானியா … Read more

ம.இளம்பிறைக்கு பெண் குழந்தை விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பிரிவில் திருவள்ளூருக்கு முதல் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்று வருகிறது. ம.இளம்பிறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் குழந்தை விருது வழங்கினார். மகளிருக்காக சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

தி.மு.க.,வினர் சிலரை பஸ் முதலாளிகளாக்கி அழகு பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்களோ?| Speech, interview, report

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: மக்களுக்கு குறைந்த செலவில், பொது போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து, அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கத்தக்கதல்ல; இந்த முடிவை, அரசு கைவிட வேண்டும். போக்குவரத்து துறையில் புரையோடி இருக்கும் முறைகேடுகளை களையெடுத்து, லாப நோக்கில் போக்குவரத்து துறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அரசு உடனடி யாக எடுக்க வேண்டும். தி.மு.க.,வினர் சிலரை பஸ் முதலாளிகளாக்கி அழகு பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்களோ? காங்கிரசை சேர்ந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் … Read more

'மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு' – தொடரும் சோகம்; என்ன தான் தீர்வு?!

கோவை, தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் வனப்பகுதிகளை ஒட்டி ஏராளமான விவசாய நிலையங்கள் அமைத்திருக்கிறது. இங்கு அவ்வப்போது யானைகள் வருவதும், அதை விவசாயிகள் விரட்டுவதும் தொடர்கதையாக இருக்கிறது. சில நேரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்கம்பிகளில் சிக்கி அவை உயிரிழந்தும் வருகிறது. யானை அந்தவகையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் சமீபகாலமாக விவசாய பகுதிகளுக்கு யானைகள் வருவது அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாரண்டஹள்ளி அருகில் இருக்கும் காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (50) சட்டவிரோதமாக மின் வேலி அமைத்திருக்கிறார். இவர் … Read more

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றாக இணைக்கப்படும் என்ற தகவல் தவறு! அமைச்சர் விளக்கம்…

சென்னை: ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றாகை இணைக்கப்படும் என்று வெளியான தகவல்  தவறானது.  இதுதொடர்பாக அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதன்முலம் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும்,   மின் நுகர்வோர் குறித்து உரிய டேட்டாக்கள் இல்லை, அதை சேகரிக்கவே இந்த நடைமுறை என்று விளக்கம் அளித்தது. இதனால் வாடகைக்கு குடியிருப்போர் … Read more