தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், சேலம், தருமபுரி, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தெலுங்கானா முதல்வர் மகளிடம் சி.பி.ஐ., ‛ சல்லடை

புதுடில்லி: புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடம், இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வரின் மகள் கவிதா, மேல்சபை உறுப்பினராக பதவி வகிக்கிறார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபான கொள்கையில் திருத்தம் … Read more

“சத்துணவு முட்டையில் ஊழலா? அண்ணாமலையின் பேச்சு அர்த்தமற்றது!" – அமைச்சர் கீதா ஜீவன்

மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதியின் எம்.எல்.ஏ மார்கண்டேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.செந்தில்ராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க-வின் பல்வேறு அணிகள் சார்பில் ‘மாற்றத்திற்கான மாநாடு’ நேற்று (10-ம் தேதி மாலையில்) … Read more

நாக்பூர் மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர் மோடி

நாக்பூர்: டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற பிரதமர் மோடி, நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில், 5 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வந்த சூழலில், 6 வது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிளாஸ்பூர் இடையே இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி நேரில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை தொடங்கி … Read more

கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல தடை: மீன்வளத்துறை அறிவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. கடந்த 6-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்திலையில் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இரவு 11 மணிக்குப் பிறகு சாலையில் நடந்து சென்ற தம்பதி; ரூ.1,000 அபராதம் விதித்த போலீஸ் -என்ன நடந்தது?

கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு, மாணவிகள் புர்கா அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வர தடைவிதித்திருக்கிறது. அடுத்து காதல் ஜிஹாத், பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்போவதாகவும் கூறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பெங்களூரு நகரில் கார்த்திக் என்பவர் தன் மனைவியுடன் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்குச் சென்றுவிட்டு இரவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் சாலையில் நடந்து சென்றபோது இரவு 12:30 மணியாகி இருந்தது. அப்போது அவர்களை போலீஸார் மடக்கி இரவு 11 மணிக்கு பிறகு சாலையில் நடந்து சென்றதற்காக … Read more

வாரணாசியில் பாரதியார் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியில் ஹனுமான் காட் பகுதியில் பாரதியார் வாழ்ந்த இடத்தில் பாரதியாரின் சிலையைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் மகாகவி பாரதியார். இவர் தனது பாடல்கள் மூலம் விடுதலை உணர்வை மக்களிடையே எடுத்துச் சென்றார். மகாகவி பாரதியாரின் 141ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே தமிழக அரசு சார்பில் காசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு … Read more

இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு

இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். சுக்விந்தர் சிங்குக்கு இமாச்சலபிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அண்மையில் நடந்த இமாச்சல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. 

”வீட்டை காலி பண்ணச் சொல்லிட்டாங்க; 4,000 கிளிகள் எங்க போகும்?” – பதறும் ‘பறவை மனிதர்’ சேகர்

சட்டமா? சென்டிமெண்டா? என  நீதித்துறை வட்டாரத்தில் உள்ளவர்களை யோசிக்க வைத்திருக்கிறது இப்படியொரு வழக்கு. சென்னை ராயப்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்துவருகிறவர் ’பேர்ட் மேன்’ என அழைக்கப்படும் சேகர். 22 வருடங்களுக்கும் மேலாக பறவைகளுக்கு உணவு அளிக்கும் பறவைகள் நேய செயலைச் செய்துவருகிறார். கிட்டத்தட்ட, ஒரு நாளைக்கு மட்டுமே 4,000 கிளிகள் இவரது வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு இளைப்பாறி செல்கின்றன. ஆனால்,  வீட்டின் உரிமையாளர்  இந்த வீட்டை விற்பனை செய்யப்போவதாகவும் அதனால், இந்த வீட்டை காலிசெய்யவேண்டும் என்று … Read more

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி மற்றும் தஞ்சை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.