‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அந்த நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு லைசென்சை அதிரடியாக ரத்து செய்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதைத்தொடர்ந்து, தமிழகம் உள்பட பல்வேறு … Read more

பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் முதல் முறையாக போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் ஜன் சூரஜ் என்ற கட்சியை தொடங்கி தேர்தலுக்கான வேலையில் ஈடுபட்டு வந்தார். ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போது பிரசாந்த் கிஷோர் திடீரென தனது கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறார். முதல் கட்டமாக 51 பேர் கொண்ட பட்டியலை அறிவித்திருக்கும் பிரசாந்த் கிஷோர் தனது பெயரை … Read more

2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் கனவு என முதல்வர் உரை

கோவை: 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு அரசு செயலாற்றி வருவதாகவும்,  உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் மாபெரும் கனவு என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “உலக புத்தொழில் மாநாடு – 2025″ (GLOBAL STARTUP SUMMIT – 2025) தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். அப்போது,   உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் மாபெரும் கனவு என முதலமைச்சர் … Read more

கரூர் மரணங்கள்: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் குழுக்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ. 9.5 கோடி மதிப்புள்ள கஞ்சா சாக்லெட் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 9.5 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சாக்லெட்டுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதை சுங்கத்துறை அதிகாரி கள்  பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் தீவிரமாக உள்ள நிலையில், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கஞ்சா, கோகைன் போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  “தாய்லாந்து நாட்டிலிருந்து, சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட, ரூ.9.5 கோடி மதிப்புடைய, 9.5 கிலோ, ஹைட்ரோபோனிக், உயர் … Read more

கோவை சிட்டி டு விமான நிலையம் இனி 10 நிமிடங்கள் தான்! – திறக்கப்பட்டது அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்தார். அவிநாசி சாலை மேம்பாலம் மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இதுதான் தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம். … Read more

ஜெய்ஷ்-இ-முகமது JeM தீவிரவாத அமைப்பு மகளிர் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), “ஜமாத்-உல்-மோமினாத்” என்று பெயரிடப்பட்ட அதன் முதல் மகளிர் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. ‘ஜமாத்-உல்-மோமினாத்’ என்ற மகளிர் படையணியை உருவாக்க ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இந்த பிரிவின் தலைவராக அவரது சகோதரியை நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதி என்று ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டுள்ள மௌலானா மசூத் அசார் பெயரில் வெளியிடப்பட்ட கடிதம் மூலம் இது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. கடிதத்தின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட இந்தப் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் அக்டோபர் … Read more

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது | Automobile Tamilan

இந்தியாவில் ஜேஎஸ்டபி்யூ எம்ஜி மோட்டாரின் வின்ட்சர் இவி அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டினை நிறைவு செய்துள்ள நிலையில் அமோக வரவேற்பினை பெற்று 40,000க்கு கூடுதலான மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ள நிலையில் இன்ஸ்பையர் லிமிடெட் எடிசனை டிசைன் மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. BAAS திட்டத்தின் கீழ் ரூ.9.99 லட்சத்தில் கிடைக்கின்ற சிறப்பு எடிசன் கிமீ பயணத்துக்கு ரூ.3.90 காசுகளாக வசூலிக்கப்படும், ஆனால் முழுமையாக கட்டணத்தை செலுத்த விரும்பினால் விலை ரூ.16,64,800 ஆகும். இந்த வின்ட்சர் இன்ஸ்பையர் எடிசன் மொத்தமாக 300 … Read more

"ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன அடுத்து எனக்குப் பிடித்த ஆல்பம்" – ஜி.வி கொடுத்த செல்வா பட அப்டேட்

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் இயக்குநராகத் தனி இடம் பிடித்திருப்பவர் செல்வராகவன். இருப்பினும், கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த என்.ஜி.கே, நானே வருவேன் ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. அதன்பின்னர், நடிகர் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு டிராக்கை மாற்றிய செல்வராகவன், தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிப்பில் அவரை ஹீரோவாக வைத்து `மெண்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் … Read more

ஹம்பாந்தோட்டா விமான நிலைய ஓடுபாதையில் யானைகள்! அத்துமீறலை தடுக்க வனவிலங்கு அலுவலகம் திறப்பு

காட்டு யானைகள் மற்றும் பிற விலங்குகள் விமான நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வருவதை அடுத்து அதை சமாளிக்க, ஹம்பாந்தோட்டாவில் உள்ள மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் (MRIA) ஒரு சிறப்பு வனவிலங்கு துறை அலுவலகத்தை நிறுவ இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விமான நிலையப் பகுதியிலும் அதன் அணுகல் சாலைகளிலும் காட்டு யானைகள் மற்றும் பிற விலங்கினங்கள் அடிக்கடி நடமாடுவது ஒரு கடுமையான கவலையாக மாறியுள்ளது, இது பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் … Read more