திருவனந்தபுரம்: மேயரானார் பாஜக-வின் ராஜேஷ் – முன்னாள் பெண் டிஜிபி-க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் கேரளாவில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4-ல் காங்கிரஸ் கூட்டணியும், ஒன்றில் பா.ஜ.க-வும், மற்றொன்றில் சி.பி.எம் கட்சியும் வென்றன. தலைநகர் மாநகராட்சியான திருவனந்தபுரத்தில் மொத்தம் உள்ள 101 வார்டுகளில் 100 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் 50 வார்டுகளில் பா.ஜ.க வென்றது. சி.பி.எம் கூட்டணி 29 வார்டுகளிலும், காங்கிரஸ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் … Read more

முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! – தெரிந்துகொள்ளுங்கள்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் ‘வாரன் பஃபெட்’. இவர் 2001-ம் ஆண்டு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில், ’20 ஸ்லாட் பன்ச் கார்டு’ பற்றி பேசியது தற்போது செம்ம வைரல். அது என்ன ’20 ஸ்லாட் பன்ச் கார்டு’? இதை வாரன் பஃபெட்டின் தியரி என்றே கூறலாம். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் 500 வாய்ப்புகள் கிடைக்காது. குறைந்த வாய்ப்புகளே கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் ’20 ஸ்லாட் பன்ச் கார்டு’. Warren Buffett … Read more

AI உதவியால் Hydroponics கஞ்சா; Digital Currency ஆன ரூ.4.5 கோடி; MBA பட்டதாரிகள் கைதான பின்னணி என்ன?

புனே ஹின்சேவாடி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்க்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் ரெய்டு நடத்தி போதைப்பொருள் தயாரித்தவர்களைக் கைது செய்தனர். ஹைட்ரோபோனிக் கஞ்சா உற்பத்தி செய்த இரண்டு பேரும் எம்.பி.ஏ. பட்டதாரிகள் ஆவர். இரண்டு பேரும் படித்துவிட்டு வேலையில் இருந்தனர். ஆனால் அவர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்த்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி … Read more

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை? ஆஸ்திரேலியா போல் சட்டம் – மதுரை உயர்நீதிமன்றம் பரிந்துரை

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவைப் போன்று சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. குழந்தைகள் எளிதில் ஆபாச உள்ளடக்கங்களை அணுக முடிவது குறித்து மதுரையைச் சேர்ந்த எஸ். விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு இதைத் தெரிவித்துள்ளது. இணைய சேவை வழங்குநர்கள் (ISPs) பெற்றோர் கட்டுப்பாடு … Read more

கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய‌ காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் இறந்த சோகம்

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள ஒன்னட்டி பகுதியில் தனியார் காட்டேஜ் கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஃபா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்கள் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 அடி ஆழத்தில் கிணறு தோண்டும் பணியில் 5 தொழிலாளர்களை ஈடுபடுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் … Read more

சென்னையில் 10 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

சென்னையின் புறநகர்ப் பகுதியான துரைப்பாக்கத்தில், 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த 38 வயது மதிக்கத்தக்க ஒருவர், கிளினிக் நடத்தி மருத்துவம் செய்துவந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ‘விஜய் கிளினிக்’ என்ற பெயரில் கிளினிக் நடத்திவந்த விஜயகுமார் குறித்து சுகாதாரத் துறைக்கு பல புகார்கள் வந்ததையடுத்து, மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நடத்திய திடீர் ஆய்வைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, … Read more

6000 டன் எடை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்; 3,500 கி.மீ. பாயும் K-4 ஏவுகணை|சோதனை நடத்திய இந்தியா

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k – 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ‘ஐ.என்.எஸ். அரிகாட்’டில் (INS Arighat) இருந்து இந்தியா, இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருக்கிறது. இந்தச் சோதனை விசாகப்பட்டினம் கடற்கரையில் நேற்று (டிச. 25) நடைபெற்றது. K-4 Missile நீருக்கடியில் இருந்து அணு ஆயுத தாக்குதல்களை நடத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இந்திய கடற்படைகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்று … Read more

ராஜஸ்தானில் மதக்கலவரம் : ஜெய்ப்பூரில் இணைய சேவை முடக்கம்…

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சோமு நகரில் ஒரு மத வழிபாட்டுத் தலத்தில் இருந்து கற்களை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இரண்டு சமூகத்தினரிடையே மதக்கலவரமாக மாறியது. சோமுவில் உள்ள பேருந்து நிலையம் அருகே மசூதிக்கு வெளியே சாலையோரத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் கற்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற உள்ளூர் நிர்வாகம் முடிவெடுத்தது. இது தொடர்பாக இரண்டு மதத்தினரிடையே மோதல் எழுந்ததால், சம்பந்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பரஸ்பர ஒப்பந்தம் எட்டப்பட்ட … Read more

Modi: “அந்த அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தது பாஜகதான்" – பிரதமர் மோடி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீன் தயாள் உபாத்யாய் மற்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களைப் போற்றும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்’ என்ற அருங்காட்சியகம் ரூ.232 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ‘ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்’ அருங்காட்சியகம், பா.ஜ.க-வின் தேர்தல் சின்னமான தாமரை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், மூன்று தலைவர்களின் பிரம்மாண்ட வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத் … Read more

பாமகவில் இருந்து ஜி.கே மணி நீக்கம்; அன்புமணி தரப்பு அதிரடி

பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்கம் செய்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸ் அதரவாளரும், பாமக எம்எல்ஏ- வுமான ஜி.கே.மணியை பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கியிருக்கிறார். அன்புமணி, ராமதாஸ் இதுதொடர்பாக அன்புமணி தரப்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. … Read more