அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கம்: 80 லட்சம் பேர் தொடரும் சமாஜ்வாதியின் முக்கிய ஊடகம்!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 80 லட்சம் பேர் தொடரும் இந்தப் பக்கம் கட்சியின் முக்கிய ஊடகம். முகநூலின் இந்த முடக்க நடவடிக்கையால் உ.பி.யின் கன்னோஜ் தொகுதி எம்.பியான அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தை முடக்கியதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தம் தலைவரது பக்கத்தை மீண்டும் நிறுவுமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் சமாஜ்வாதி கட்சி கோரியுள்ளது. அதேசமயம், பேஸ்புக்கின் இந்த நடவடிக்கையை சமாஜ்வாதி கட்சியினர் … Read more

சீனாவைச் சேர்ந்தவர் வீட்டில் சோதனை

திருப்​பதி: சீன நாட்டை சேர்ந்​தவர் ட்யூ யாங்​கன். விசா நிபந்​தனை​களை மீறியது, போலி ஆவணங்​கள் தயாரித்​தது, நிபந்​தனை​களை மீறி இந்​தி​யா​வில் தங்​கியது தொடர்​பாக 2021-ம் ஆண்டு யாங்​கன் மீது புகார் எழுந்​தது. இதையடுத்து திருப்​பதி அருகே உள்ள ரேணி​குண்டா போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்​தனர். இவ்​வழக்கு திருப்​பதி நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. இதனைத் தொடர்ந்​து, அவர், பல பகு​தி​களில் தொழிற்​சாலைகளில் பணி​யாற்​றும் சீன நாட்​டைச் சேர்ந்​தவர்​களுக்​காகவே ரேணி​குண்​டா​வில் ‘பிக் கிச்​சன்’ என்ற சீன … Read more

தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி: ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது. அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது தீப உற்​சவம் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை உ.பி. அரசு சார்​பில் அயோத்​தி​யின் ராம் மனோகர் லோகியா அவத் பல்​கலைக்கழகம் நடத்​துகிறது. இதில், 29 லட்​சம் அகல் விளக்​கு​கள் ஏற்ற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன்​முலம் கடந்த ஆண்​டின் … Read more

தொழிலாளர் வரைவு கொள்கை வெளியீடு: பெண்கள், சமூகப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்

புதுடெல்லி: பெண்​கள் மற்​றும் சமூகப் பாது​காப்​பில் அதிக கவனம் செலுத்​தும் வகையி​லான தொழிலா​ளர் வரைவு கொள்கையை மத்​திய அரசு வெளி​யிட்​டுள்​ளது. வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் பெண்​களின் பங்​களிப்பை 35 சதவீத​மாக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அதேபோன்​று, இளைஞர்​களுக்​கான தொழில்​முனைவு மற்​றும் அதற்​கான வழி​காட்​டு​தல் முயற்​சிகளை விரி​வாக்​கம் செய்​வதை​யும் முக்​கிய நோக்​க​மாக கொண்டு அரசு இந்த வரைவு கொள்கையை தயாரித்​துள்​ளது. பல தளங்​களை தேடிச் சென்று பார்​வை​யிடு​வதற்கு பதிலாக, தொழிலா​ளர்​கள் தங்​கள் நன்​மை​களை ஒரே தொகுப்​பின் கீழ் பார்த்து … Read more

சபரிமலை தங்க முலாம் விவகாரம்: கேரள ஐகோர்ட் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு ஆறு வாரங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை தொடர்பான எந்தத் தகவலும் கசியக்கூடாது என்றும், சிறப்பு புலனாய்வுக் குழு சீல் வைக்கப்பட்ட கவரை நேரடியாக நீதிமன்றத்திற்கு … Read more

சோதனையின் போது ரூ.1.45 கோடி ஹவாலா பணத்தை சுருட்டிய 9 ம.பி. காவலர்கள் சஸ்பெண்ட்

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்​பகு​தி​யில் கடந்த புதன்​கிழமை இரவு நடந்த வாகன சோதனை​யின்​போது பந்​தோல் காவல் நிலையை பொறுப்​பாளர் மற்​றும் காவலர்​கள் ஒரு நான்கு சக்கர வாக​னத்தை வழிமறித்​துள்​ளனர். அப்​போது அதில், மத்​தி​யப் பிரதேசத்​தில் உள்ள கட்​னி​யில் இருந்து மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள ஜல்​னா​விற்கு ஒரு பெரிய அளவி​லான தொகை கொண்டு செல்​லப்​பட்​டது தெரிய​வந்​தது. ஹவாலா பணம் என சந்​தேகப்​பட்ட போலீ​ஸார் அதனை பறி​முதல் செய்​வதற்​குப் பதிலாக, ஓட்​டுநரை அடித்து விரட்டி விட்டு அந்​தப் பணத்தை … Read more

முந்திரி, பாதாம், பிஸ்தா தின்று வளர்ந்த எருமை மாட்டின் விலை ரூ.8 கோடி

புதுடெல்லி: உத்​தரபிரதேச மாநிலம் மீரட்​டில் சர்​தார் வல்​லப​பாய் பட்​டேல் வேளாண் பல்​கலைக்கழக. வளாகத்​தில் விவ​சாயிகளுக்கான சிறப்பு சந்தை நடை​பெறுகிறது. இதில் வட மாநிலங்களின் விவ​சா​யிகள் பலர் பங்கேற்​கின்​றனர். ஹரி​யா​னா​வின் விவ​சா​யி​யான நரேந்​திரசிங்​கும் தனது எரு​மையை இங்கு காட்​சிக்கு வைத்​துள்​ளார். மீரட் சந்​தை​யில் இந்த ஹரி​யானா மாநில எரு​மைக்கு ரூ.8 கோடி விலை வைக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், அதன் உரிமை​யாளர் நரேந்​திரசிங் தன் எரு​மையை விற்​பனை செய்ய விருப்​பம் இல்லை எனத் தெரி​வித்​துள்​ளார். அந்த எரு​மைக்கு ‘எம்​எல்ஏ’ என அதன் … Read more

சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரம்: 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு 

திருவனந்தபுரம்: சபரிமலை கோயி​லில் தங்​கம் திருடப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக 6 வாரங்​களில் விசா​ரணை அறிக்​கையை சிறப்பு விசா​ரணைக் குழு​வினர் (எஸ்​ஐடி) தாக்​கல் செய்​ய​வேண்​டும் என்று கேரள உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளுக்​கும் 1999-ல் தங்க முலாம் பூசப்​பட்​டது. இந்த சூழலில் துவார பால​கர் சிலைகளின் பீடங்​களை காண​வில்லை என புகார் எழுந்​தது. இது தொடர்​பாக கடந்த செப்​டம்​பர் 17-ம் தேதி கேரள உயர் நீதி​மன்​றம் … Read more

ஆப்கன் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் பெண் நிருபர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!

6 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தலிபான் அரசு சார்பில் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதி இந்தியா வருவது இதுவே முதல் முறை. பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமிர் கான் முட்டாகி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதிலளித்தனர். ஆனால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற புதிய சர்ச்சை … Read more

வயநாடு மறுசீரமைப்புக்காக ரூ.2,221 கோடியை விடுவிக்க மோடியிடம் பினராயி விஜயன் கோரிக்கை

புதுடெல்லி: கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்ட மறுசீரமைப்புக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2,221 கோடியை விரைவாக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து … Read more