கருணாநிதியின் உருவப்படத்துக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் அஞ்சலி @ புதுடெல்லி

புதுடெல்லி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஃபரூக் அப்துல்லா, டி. ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் … Read more

“2 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் தயாரிக்கப்பட்ட கருத்துக் கணிப்பு” – மம்தா கருத்து

கொல்கத்தா: கடந்த சனிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளில் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் அதனை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். “ஊடக நிறுவனங்கள் தங்களது ஆதாயத்துக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே சிலரை கொண்டு தயாரித்தது தான் தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள். அதற்கு எவ்வித மதிப்பும் இல்லை. 2016, 2021 மாநில சட்டப்பேரவை … Read more

EVM வாக்கு எண்ணிக்கை… அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்..!!

Lok Sabha Elections 2024: 18வது மக்களவை பொதுத்தேர்தலில் ப்திவான வாக்குகள் நாளை, ஜூன் 4ம் தேதி எண்ணப்படும். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியர்களை அமித் ஷா மிரட்டியதாக சர்ச்சை: ஜெய்ராம் ரமேஷிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பாக 150 மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த குற்றச் சாட்டு தொடர்பான விரிவான தகவல் மற்றும் ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு ஜெய்ராம் ரமேஷிடம் இந்திய தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணை யம் கூறியுள்ளதாவது: மாவட்ட ஆட்சியர்கள்தான் தேர்தலின்போது அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் … Read more

நாளை வருகிறது நாடே காத்திருக்கும் தேர்தல் முடிவுகள்: ECI இணையதளத்தில் காண்பது எப்படி?

Lok Sabha Election 2024 Results: 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில சட்டப் பேரவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மே.வங்கத்தில் 2 பூத்களில் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கத்தின் பராசத், மதுராபூர் தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று (ஜூன் 3) காலை தொடங்கி மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் … Read more

NDA vs INDIA: பிரதமரை தீர்மானிக்கும் 'இந்த 6 மாநிலங்கள்' – நாளைக்கு இதுதான் ரொம்ப முக்கியம்

Lok Sabha Election 2024 Majority: 2024 மக்களவை தேர்தலில் மெஜாரிட்டியை பெற வேண்டும் என்றால் இந்த 6 மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றியே ஆக வேண்டும். இந்த தேர்தல் கணக்கு என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

மத்திய பிரதேசத்தில் டிராக்டர் – ட்ராலி கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி

இந்தூர்: மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஞாயிறு இரவு டிராக்டர் – ட்ராலி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ராஜஸ்தானின் மோதிபுரா கிராமத்தில் இருந்து மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டம் குலாம்பூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்களாவர். விபத்து நடந்த உடனேயே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து ராஜ்கர் ஆட்சியர் ஹர்ஷ் தீக்‌ஷித் … Read more

வட மாநிலங்களில் வெப்ப அலை; உ.பி.யில் 33 தேர்தல் பணியாளர்கள் உயிரிழப்பு: ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 பேர் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதில், ஊர்க் காவல் படையினர், துப்புரவு பணியாளர்களும் அடங்குவர் என்று அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார். வாக்காளர் உயிரிழப்பு: பலியா மக்களவை தொகுதியின் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ளஒரு வாக்குச்சாவடியில் ஓட்டளிப்பதற்காக வரிசையில் நின்ற ராம்பதன் சவுகான் என்பவர் … Read more

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்: ‘சட்டா பஜாரில்' ரூ.6 லட்சம் கோடிக்கு பந்தயம்

புதுடெல்லி: ராஜஸ்தானின் பலோடி நகரில் கடந்த 1952-ம் ஆண்டில் ‘சட்டா பஜார்’ என்ற சூதாட்ட அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் சூதாட்ட அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலின் போது’சட்டா பஜார்’ சூதாட்ட அமைப்புகள் கருத்துக் கணிப்புகளை நடத்துகின்றன. இதன்படி தற்போதைய மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானின் பலோடி, மகாராஷ்டிராவின் மும்பை, குஜராத்தின் பாலன்பூர், சூரத், கர்னால், மேற்குவங்கத்தின் கொல்கத்தா, மத்திய பிரதேசத்தின் இந்தூர், கர்நாடகாவின் பெலகாவிஉள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த ‘சட்டா … Read more