உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயிலில் தீ விபத்து: 13 பூசாரிகள் காயம்

உஜ்ஜைன்: உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயில் கருவறையில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 பூசாரிகள் காயமடைந்தனர். உஜ்ஜைன் ஆட்சியர் நீரஜ் குமார் சிங் இந்த தீ விபத்து சம்பவத்தை உறுதி செய்தார். மேலும் விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆட்சியர் நீரஜ் குமார் சிங் பேசும்போது, “கோயிலில் பஸ்ம ஆரத்தி காண்பிக்கப்பட்ட போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பூசாரிகள் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் … Read more

பகுஜன் சமாஜின் முதல்கட்ட பட்டியல்

உத்தர பிரதேசத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. 80 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் வென்றது. சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலேயே வென்றது. பாஜக 62 இடங்களில் வென்றது. இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து களமிறங்க பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக அங்கு வாக்குப் பதிவு … Read more

பாலிவுட் நடிகை நேகா சர்மாவை களமிறக்க காங்கிரஸ் திட்டம்

பிஹார் மக்களவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஓரணியாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிரணியாகவும் போட்டியிடுகின்றன. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், 12 தொகுதிகளை காங்கிரஸ் கோருகிறது. ஆனால் 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கூறி வருகிறது. இரு கட்சிகளிடையே விரைவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று … Read more

சிவராஜ்குமாரின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தல்

பெங்களூரு: மக்களவைத் தேர்தல் நிறைவடையும் வரை கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் படங்கள் திரையிடுவதற்கு திரையரங்கம், தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்ளுக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக கோரியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக பாஜகவின் ஓபிசி பிரிவு தலைவர் ராகுல் கவுட்டில்யா தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளார். அதில், ”கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சிவராஜ்குமார் அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளார். இதுமட்டுமல்லாமல் வேறு சில தொகுதிகளிலும் சிவராஜ்குமார் … Read more

மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பாஜக வேட்பாளர் அடங்கிய 5-வது பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக பாஜக இதுவரை 4 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 111 பேர் அடங்கிய 5-வது பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் சமீபத்தில் கொல்கத்தா … Read more

இலவச LPG சிலிண்டர்… ஹோலி பண்டிகையை ஒட்டி இந்த மாநில மக்களுக்கு கிடைத்துள்ள பரிசு!

பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் எதிர்பாராத வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்புச் சலுகையாக வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து, விலைவாசி உயர்வில் இருந்து ஏழை மக்களுக்கு சற்று நிவாரணம் அளித்துள்ளார். 

டெல்லியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறையில் இருந்து முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவு: நீர் வளத் துறை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரி வால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 6 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கைதான பிறகும் கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே அவர் ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இந்த சூழலில் டெல்லி நீர் வளத் துறை அமைச்சர் அதிஷி டெல்லியில் நேற்று கூறியதாவது: டெல்லி முதல்வர் … Read more

5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ம் தேதி முதல் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இவற்றில், … Read more

அமலாக்கத் துறையினர் கைது செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 7 நாளில் அமலாக்கத் துறை காவலில் அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அமலாக்கத் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தன்னை உடனடியாக விடுவிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அதில் தனது கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத் துறை … Read more

பேரவை தேர்தலில் 160 தொகுதியில் வெல்லும்: சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில், அக்கட்சியின் சட்டப்பேரவை, மக்களவை தொகுதி வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் ரவுடிகள் அதிகரித்து விட்டனர். அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. கூட்டணியால் 31 பேருக்கு ‘சீட்’வழங்க முடியாமல் போனது. இவர்களின் தியாகம் மிகப்பெரியது. இவர்களுக்கு மாநில அல்லது மத்திய அரசு சார்பில் கண்டிப்பாக நன்மை நடக்கும். நமது கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும். இதுவே … Read more