“Exit polls போலி; ஜூன் 4ம் தேதி பாஜக வெற்றி பெறாது” – சரணடைவதற்கு முன்பு கேஜ்ரிவால் பேச்சு

புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று தெரிவித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை, ஜூன் 4ம் தேதி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் வழங்கிய 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் நிறைவடைந்த நிலையில் கேஜ்ரிவால் திஹார் சிறையில் இன்று சரணடைந்தார். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், … Read more

தேர்தல் முறைகேட்டை நியாயப்படுத்தும் முயற்சியே ‘எக்ஸிட் போல்ஸ்’: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவை தேர்தல் முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், “அரசாங்கத்தின் அடுத்த 100 நாட்களுக்கான வேலைத் திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்துவதற்கு காரணம் இருக்கிறது. இவை அனைத்தும், நான் திரும்பி வருகிறேன், நான் மீண்டும் பிரதமராகப் போகிறேன் எனக்கூறும் ஒரு வகையான உளவியல் … Read more

பேரவைத் தேர்தல் | சிக்கிம்மில் எஸ்கேஎம் இமாலய வெற்றி; அருணாச்சலில் பாஜகவுக்கு அருதிப்பெரும்பான்மை

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அருதிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியமைக்கிறது. சிக்கிம்மில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி இமாலய வெற்றியை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அருணாச்சலப்பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம்மில் எஸ்கேஎம் கட்சியும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்த வரை பாஜக போட்டியின்றி … Read more

பேரவைத் தேர்தல் | அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி; சிக்கிம்மில் ஆட்சியை தக்கவைத்தது எஸ்கேஎம்

புதுடெல்லி: சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அருணாச்சல் பிரதேசத்தில் அருதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதேபோல், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் எஸ்கேஎம் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. அருணாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள்: அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் பத்து பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைகளில் 50 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நண்பகல் … Read more

வெப்ப அலை முதல் ரீமல் புயல் வரை: தொடர் கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ரீமல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வெப்ப அலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஏழு முக்கிய கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ரீமல் புயலுக்கு பிந்தைய நிலையை ஆய்வு செய்வதற்கான முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேற்குவங்க கடற்கரை வழியாக கடந்து சென்ற ரீமல் புயல் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் … Read more

பவன் கல்யாண் வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு முழங்காலில் படியேறி ரசிகை நேர்த்தி கடன்

நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும், ஜனசேனா கட்சியின் தலைவரும். நடிகருமான பவன்கல்யாண், இம்முறை தெலுங்கு தேசம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளார். கடந்த முறை இவர் தனியாக போட்டியிட்டதின் விளைவாக, தெலுங்கு தேசம் கட்சியின் 6 சதவீத வாக்குகள் சிதறின. இதனால், ஜெகன்மோகன் ரெட்டி அதே 6 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைத்தார். இதனால், இம்முறை சந்திரபாபு நாயுடு, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பவன் கல்யாணை தன்னுடன் வைத்து கொண்டார். தொகுதி பங்கீட்டில் பவன் … Read more

மணிப்பூர், அசாமில் கனமழை: மேலும் 8 பேர் உயிரிழப்பு

இம்பால் / குவாஹாட்டி: கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ரீமல் எனப் பெயரிடப்பட்டது. இது வங்கதேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே கடந்த மாதம் 26-ம் தேதி நள்ளிரவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேம்பாலங்கள் உடைந்தன. … Read more

விஜயவாடாவில் கலப்பட குடிநீர் குடித்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு

விஜயவாடா: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் முகல்ராஜ புரம், பயாகாபுரம், அஜித்சிங் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீரில், கால்வாய் நீர் கலந்ததால், அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இதில் இதுவரை முகல்ராஜபுரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். நேற்று இதே பகுதியை சேர்ந்த கோட்டேஸ்வர ராவ் (60) என்பவர் உயிரிழந்தார். மேலும், பயாகாபுரம் மற்றும் அஜித்சிங் நகர் ஆகிய பகுதிகளில் 2 … Read more

ஜாமீன் நீட்டிப்புக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு: கேஜ்ரிவால் இன்று திகார் சிறையில் சரண்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. கடைசிகட்ட தேர்தல் முடிந்த மறுநாள், திகார் சிறையில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தனது உடல் எடை மிகவும் குறைந்து விட்டதாகவும், இதற்காக மருத்துவ பரிசோதனைகள் செய்ய இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் … Read more

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் … Read more