ரீமல் புயல் பாதிப்பு: வடகிழக்கில் கனமழை, நிலச்சரிவில் 31 பேர் உயிரிழப்பு

ஐஸ்வால்: மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரீமல் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரீமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் இன்று (மே 28) காலை பாறைகள் சரிந்து … Read more

“தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா?” – அமித் ஷா

ஜாஜ்பூர்(ஒடிசா): ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா என அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் பொக்கிஷ அறையின் சாவி குறித்த விசாரணை அறிக்கையை நாங்கள் பகிரங்கப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார், ஒடிசாவின் ஜாஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, … Read more

50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு இண்டியா கூட்டணி அரசு முடிவு கட்டும்: ராகுல் காந்தி

ருத்ராபூர் (உ.பி): கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு இண்டியா கூட்டணி அரசு முடிவு கட்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் ருத்ராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர். ஒரு பக்கம் இண்டியா கூட்டணியும் அரசியல் சாசனமும் இருக்கிறது. மற்றொரு பக்கத்தில் அரசியல் சாசனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் சாசனத்தை ஒழிப்போம் என்று பாஜக … Read more

மிசோரம் கனமழை: கல்குவாரி பாறைகள் சரிந்து பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

ஐஸ்வால்: மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரீமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்நிலையில், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் … Read more

கேரள கனமழை: கொச்சியில் மேகவெடிப்பு – ஒன்றரை மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் முன்னதாக மே 31=ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், 2024-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து … Read more

மேலாளர் கொலை வழக்கு: குர்மீத் ராம் ரஹீம் சிங்கை விடுவித்தது ஹரியாணா உயர் நீதிமன்றம்

ஹரியாணா: ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கொலை குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்தது பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம். முன்னதாக, 2021ம் ஆண்டில், இந்த கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உட்பட 5 பேரை குற்றவாளிகள் என … Read more

“ஒடிசாவின் எதிர்காலம் முக்கியம்” – நவீன் பட்நாயக் உடனான உறவு குறித்து பிரதமர் மோடி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் அதன் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜுன் 4) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், மீண்டும் பாஜக ஆட்சி மத்தியில் அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்திலும் தங்கள் கட்சி தான் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்து கொண்டது குறித்து பார்ப்போம். இதில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் குறித்தும் பேசியுள்ளார். ஓடிசாவில் மக்களவை … Read more

தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை அளித்து வருகிறது: சல்மான் குர்ஷித்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை அளித்து வருகிறது என்றும், இது இரு தரப்புக்கும் நெருக்கமான போட்டி என்பதில் சந்தேகம் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சல்மான் குர்ஷித், “400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று அமித் ஷா தொடர்ந்து கூறி வருகிறார். தற்போதைய சூழலில் அவரால் அப்படித்தான் கூற முடியும். அவர்கள் முதலில் குறிப்பிட்ட ஒரு எண்ணைவிட(400+) குறைத்து … Read more

மிசோரம்: கனமழையால் கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழப்பு

ஐஸ்வால்: மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரீமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்று இடிந்து விழுந்தது. … Read more

டெல்லி – வாராணசி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்து வாராணசி செல்ல இருந்த இண்டிகோ விமானத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையடுத்து அதில் இருந்த பயணிகள் அவசரகால கதவு வழியாக வெளியேறினர். விமானத்தில் சோதனை மேற்கொள்ள ஏதுவாக தனிமைப்படுத்தப்பட்டது. இந்த விமானம் காலை 5.35 மணிக்கு புறப்பட இருந்தது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். அவசரகால கதவு வழியாக பயணிகள் வெளியேறும் வீடியோ சமூக … Read more