மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே கரையை கடந்தது ‘ரீமல்’ புயல்: கனமழையால் 16 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா/ தாக்கா: மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே ‘ரீமல்’ புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. அப்போது, அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கனமழை, வெள்ளத்தால் மேற்கு வங்கத்தில் 6 பேரும், வங்கதேசத்தில் 10 பேரும் உயிரிழந்தனர். வங்கக்கடலில் உருவான ‘ரீமல்’ புயல் நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 120 கி.மீ. … Read more

எவரெஸ்ட் சிகரத்தில் அலைமோதும் கூட்டம்

புதுடெல்லி: எவரெஸ்ட் சிகரத்தில் சாகசவீரர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் இமயமலையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாகச வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுகின்றனர். பொதுவாக நேபாள நாட்டில் உள்ள அடிவார முகாமில் இருந்து மலையேற்றம் தொடங்குகிறது. இந்த ஆண்டில் மே 21-ம் தேதி வரை நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுமார் 900 … Read more

அதானி முந்த்ரா துறைமுகம் வந்த மிகப்பெரிய சரக்கு கப்பல்

அகமதாபாத்: குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 400 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட சரக்கு கப்பல் நங்கூரமிட்டு உள்ளது. இது இந்தியாவுக்கு வந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் ஆகும். நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் மும்பை ஜேஎன்பிடி துறைமுகம் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டம், முந்த்ராவில் உள்ள துறைமுகம் 2-வதுஇடத்தில் இருக்கிறது. இந்த தனியார் துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் எம்வி எம்எஸ்சி ஹம்பர்க் என்ற சரக்கு கப்பல் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்தது. … Read more

முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது: உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத் பேச்சு

கோரக்பூர்(உத்தரப்பிரதேசம்): மத ரீதியில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது என்று தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் பேசிய அவர், “மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. பாபாசாகேப் அம்பேத்கர் இதை கடுமையாக எதிர்த்தார். ஆனால் காங்கிரஸும், இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க போட்டிபோடுகின்றன. மேற்கு வங்கத்தில், 2010-ல் … Read more

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

பெங்களூரு: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டிய பெண் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (மே 26) உயிரிழந்தார். “53 வயதான அந்தப் பெண், மூச்சுத் திணறல் காரணமாக நேற்று (மே 26) இரவு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது” என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் – செப்டம்பர் மாதங்களுக்கான தென்மேற்கு பருவமழையின் தொலைநோக்கு முன்னறிவிப்பு கண்ணோட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. 2024 ஜூன் மாதத்துக்கான மாதாந்திர மழை மற்றும் வெப்பநிலை முன்னறிவிப்பையும் டெல்லியில் மெய்நிகர் ஊடக உரையாடலில் வானிலை ஆய்வு மையத் தலைமை இயக்குநர் … Read more

சிறப்பு விசாரணைக் குழு முன் மே 31-ல் ஆஜராவேன்: பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ பதிவில் தகவல்

பெங்களூரு: பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, வரும் 31-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராக உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மே 31-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மீது … Read more

“ஜூன் 1 நடக்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்” – மம்தா பானர்ஜி திட்டவட்டம்

கொல்கத்தா: ஜூன் 1ஆம் தேதி நடக்க உள்ள இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் இறுதிகட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் பிறகு வரும் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஜூன் 1 அன்று ஆலோசனை நடத்த கூட்டணி கட்சியினருக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more

“இமாச்சலில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயன்றார் மோடி” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை பண பலத்தை பயன்படுத்தி கவிழ்க்க பிரதமர் நரேந்திர மோடி முழு முயற்சி எடுத்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசம், காங்ரா மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “மோடி இமாச்சல் மாநிலத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பண பலத்தை பயன்படுத்தி கவிழ்க்க முழு முயற்சிகளை மேற்கொண்டார். … Read more

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் பிபவ் குமாருக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: ஸ்வாதி மாலிவால் தாக்குதல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டுக்கு கடந்த 13ம் தேதி தான் சென்றபோது, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன் மீது தாக்குதல் நடத்தியதாக டெல்லி காவல்துறையில் ஸ்வாதி மாலிவால் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், டெல்லி காவல்துறையால் பிபவ் குமார் கைது செய்யப்பட்டு தற்போது … Read more