இஸ்லாமியர்களின் தலாக்-இ-ஹசன் விவாகரத்து முறை… உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து பெற, முத்தலாக் தவிர தலாக் – இ – ஹசன் என்ற மற்றொரு பழக்கமும் நடைமுறையில் உள்ளது. இதன்படி, மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத ஆண், மூன்று மாதத்தில், மாதத்துக்கு ஒரு முறை தலாக் கூற வேண்டும். 

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை… வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு..!

மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருவதால் ராணுவம் வரவழைக்கப்பட்டு வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க 10 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வரும் நிலையில், அங்குள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பழங்குடியினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்து, பல்வேறு மாவட்டங்களில் கலவரமாக உருவெடுத்தது. கடைகள், வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. சாலைகளில் … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கோவாவில் தொடங்கியது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியா வருகை

பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ நேற்று இந்தியாவின் கோவாவுக்கு வந்தார். கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. … Read more

சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை..!

கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் குயின் காங் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டுக்கு இடையே சந்தித்துக் கொண்ட இரு அமைச்சர்களும் ஜி20 SCO மற்றும் BRICS அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக இந்தியா சீனா இடையே நீடிக்கும் கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றி சீன அமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாகவும் ஜெய்சங்கர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதே போன்று … Read more

அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே 89.66 டிகிரி வெயில்..!!

இந்த ஆண்டு கோடை காலம் சற்று முன்னரே ஆரம்பித்து விட்டதாக சொல்லலாம். ஏனென்றால் மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. காற்றில் ஈரப்பதம் குறைந்திருந்ததால் வெயிலின் தாக்கத்தை அதிகம் உணர முடிந்தது. இத்தகைய சூழ்நிலையில் தமிழகம்- புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. புதுவையில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்து வந்தது. இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று  தொடங்கியது. … Read more

என்ன நடந்து இருந்தாலும் கல்லூரி விடுதி மாணவிகளை ஆடைகளை களைத்து சோதனை செய்வது சரியா..?

தலைநகர் டெல்லியில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் கீழ் அகில்யாபாய் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் மாணவிகள் தங்கி படித்துவருகின்றனர். இந்நிலையில், வார்டன் தனது பேக்கில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணம் காணாமல் போயிருப்பதை அறிந்தார். விடுதியில் தங்கியிருக்கும் குறிப்பிட்ட 2 மாணவிகள்தான் தனது பேக்கில் இருந்து பணத்தை திருடியிருக்க வேண்டும் என்று அவர் சந்தேகப்பட்டார். அதையடுத்து, மற்ற மாணவிகளின் உதவியுடன் அந்த 2 மாணவிகளையும் ஆடைகளை களைந்து அவர் சோதனை … Read more

‘தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: நாடு முழுவதும் இன்று திரையிடப்படுகிறது

புதுடெல்லி: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. இந்த திரைப்படம் நாடு முழுவதும் இன்று திரையிடப்படுகிறது. விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. அதில், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு … Read more

மணிப்பூரில் 144 தடை உத்தரவு.. இணைய சேவை முடக்கம்!!

மணிப்பூர் மாநிலத்தின் நிலப்பரப்பின் பெரும்பகுதியைக் கொண்ட மலை மாவட்டங்களில், பழங்குடியின மக்களான நாகாக்கள் மற்றும் குக்கிகள் வாழ்ந்து வருகின்றனர். அதே போன்று, மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 விழுக்காடு மெய்டேய் சமூகத்தினரும் உள்ளனர். இந்த நிலையில், பழங்குடியின பட்டியலில் மெய்டேய் சமூகத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு, பழங்குடியினர் மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணி நடத்தினர். இதை தொடர்ந்து மணிப்பூரின் எட்டு மாவட்டங்களில் … Read more

என்னையா பிரேக்-அப் பண்ற..!! பழிவாங்க நிர்வாண போட்டோவை வெளியிட்ட காதலன்..!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருத்தி அருகே உள்ள கொத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆதிரா (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண் வித்யாதர் (26). இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சுற்றி திரிந்தனர். அப்போது 2 பேரும் சேர்ந்து நெருக்கமாக பல போட்டோக்களையும் எடுத்து கொண்டனர். இந்த நிலையில், அருண் வித்யாதரின் நடவடிக்கை பிடிக்காமல், அவருடனான நட்பை ஆதிரா தவிர்த்துள்ளார். இதனால் அவரை தொலைபேசியில் தொடர்பு … Read more

உ.பி. உள்ளாட்சி தேர்தல் – வாக்களித்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

கோரக்பூர்: உத்தரபிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் 37 மாவட்டங்களில் 10 மாநகராட்சி மேயர்கள், 820 கவுன்சிலர்கள் உள்ளிட்ட 7,593 பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான முதல்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் உள்ள தனது வாக்குச்சாவடியில் காலை 7.01 மணிக்கு முதல் ஆளாக வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தலில் வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் பொறுப்பும் ஆகும். … Read more