முரண்களை யோகா மூலம் முறியடிக்க வேண்டும்: சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி அறிவுரை

நியூயார்க்: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாம் யோகா மூலம் முரண்களை முறியடிக்க வேண்டும், எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டும், தடுப்புகளை தகர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைமையகத்தில் இன்று (ஜூன் 21-ம் தேதி) நடைபெறும் யோக அமர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார். இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தியர்கள் எப்போதுமே புதிய சிந்தனைகளை வரவேற்றுப் பாதுகாத்துள்ளனர். தேசத்தின் … Read more

‘அப்படி எதுவும் நடக்கவில்லை' – பாடப்புத்தகங்களில் டார்வின் தியரி நீக்கம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

புனே: என்சிஆர்டி பாடப்புத்தகத்தில் இருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு நீக்கப்பட்டுள்ளது என்ற சர்ச்சைக்கு பதில் அளித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘அப்படி ஒன்றும் நடக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள பண்டார்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்-ல் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், “தற்போது ஒரு என்சிஆர்டி பாடப்புத்தகம் குறித்து ஒரு சர்ச்சை நிலவி வருகிறது. அதாவது அறிவியல் … Read more

செந்தில்பாலாஜி வழக்கு | உயர் நீதிமன்ற விசாரணையை ஏன் சந்தேகிக்க வேண்டும்? – அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: செந்தில்பாலாஜி வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற விசாரணையை ஏன் சந்தேகிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. பின்னர், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜியை காவிரி மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்தது. அப்போது, செந்தில்பாலாஜியை 16 நாள் காவலில் எடுத்து … Read more

யோகா, தியானம், ஆன்மிகத்தின் மையமாகும் ஜாகேஷ்வர் கோயில்

அல்மோரா: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் சிறப்பு முயற்சியால், இந்த முறை அல்மோராவில் உள்ள ஜாகேஷ்வர் கோயிலில் யோகா திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் முதல்வர் தாமி பேசும்போது, “யோகா, தியானம் மற்றும் ஆன்மிக உணர்வின் மையமாக ஜாகேஷ்வர் கோயில் மாற்றப்படும். மானஸ் மந்திர் மாலா மிஷன் திட்டம் ஜாகேஷ்வர் கோயிலிலிருந்து தொடங்கப்படுகிறது. இதன் மூலம் குமாவோன் பகுதியில் உள்ள பழமையான கோயில்களில் பல்வேறு வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது. யோகா என்பது அறிவின் வடிவிலான … Read more

அனைத்து மசூதிகளும் இடிக்கப்படும்.. கர்நாடகா முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு.. பதற்றம்

பெங்களூர்: இந்து கோயில்கள் மீது கட்டப்பட்டுள்ள அனைத்து மசூதிகளும் விரைவில் இடிக்கப்படும் என்று கர்நாடகா முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதோடு மட்டுமல்லாமல், மிக மோசமான தோல்வியையும் தழுவியது. பாஜக ஆட்சியில் காணப்பட்ட தீவிர இந்துத்துவா நடவடிக்கைகளும், ஊழல் முறைகேடுகளுமே அக்கட்சியின் படுதோல்விக்கு காரணம் எனக் … Read more

இஸ்லாமியர்கள் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருடைய நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள … Read more

மும்பை தாக்குதல் தீவிரவாதி சஜித் மிர்ரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் திட்டத்துக்கு சீனா முட்டுக்கட்டை

புதுடெல்லி: கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 175 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் போது, பாகிஸ்தானில் இருந்து, மும்பையில் உள்ள தீவிரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பித்த நபர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த சஜித் மிர். இதற்கான ஆடியோ ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன. இதனால் அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் திட்டத்தை ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்தது. ஆனால், இந்த திட்டத்துக்கு சீனா … Read more

போலி செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சித்தராமையா எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்கள் அதிகம் பரப்பப்படுகின்றன. போலி செய்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டேன். பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில் இதற்கென தனிப் பிரிவை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீஸாரில் இதற்காக தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு, அவர்கள் சமூக வலைதளங்களை கண்காணிப்பார்கள். இவ்வாறு முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். Source … Read more

பதிவு திருமணங்களின்போது மணமக்களின் மத விவரங்களை கேட்கக்கூடாது – பதிவாளர்களுக்கு கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: பதிவுத் திருமணங்களின்போது மணமக்களின் மத விவரங்களை கேட்கக்கூடாது என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பதிவாளர்களுக்கும் கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கேரள அரசின்கூடுதல் தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டு கொச்சியில் பதிவுத் திருமணம் செய்ய வந்த பி.ஆர். லாலன், ஆயிஷா ஆகியோரின் மதம் தொடர்பான விவரங்களை கொச்சி மாநகராட்சி செயலர் கேட்டுள்ளார். தம்பதிகள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த விவரங்களை அவர் கேட்டுள்ளார். பதிவு செய்ய மறுப்பு: … Read more

6 இஸ்லாமிய நாடுகளில் குண்டுபோட்டவர் ஒபாமா… அவரை நம்ப முடியுமா – நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman: இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் 6 நாடுகளில் சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுகளை போட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் குற்றச்சாட்டுகளை எப்படி ஏற்க முடியும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.