5 நட்சத்திர ஓட்டலில் 2 ஆண்டுகள் தங்கிய நபர்: ரூ.58 லட்சம் மோசடி செய்ததாக போலீஸில் புகார்

புதுடெல்லி: டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதன் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து வாடிக்கையாளர் ஒருவர் பணம் எதுவும் செலுத்தாமல் சுமார் 2 ஆண்டுகள் தங்கியுள்ளார். இதனால் ரூ.58 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ‘ரோஸேட் ஹவுஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டல் தரப்பில், இது தொடர்பாக விமான நிலைய காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அங்குஷ் தத்தா என்பவர் ஓட்டலில் 603 … Read more

மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதிலும் 70 தொகுதிகளில் முஸ்லிம்களை நிறுத்த பாஜக திட்டம்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் சிறுபான்மையினர் வாக்குகளை பாஜக குறி வைக்கிறது. முதன்முறையாக தேசிய அளவில் சுமார் 70 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க அக்கட்சி திட்டமிட்டு உள்ளது. மாறிவரும் அரசியல் சூழலில் அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் அமைக்கும் வியூகத்தை பொறுத்து வெற்றி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய, பிஹாரின் பாட்னாவில் 27 கட்சிகளின் தலைவர்கள் நாளை கூட உள்ளனர். அதேசமயம் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் … Read more

அசாம் மாநிலத்தில் 19 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மொத்தம் உள்ள 31-ல் 19 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஉள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டில் இதுவரை 523 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 5,842 ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கி உள்ளது. குவாஹாட்டி, சில்சார் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளது. இன்றும் கனமழை பெய்யும் என … Read more

மணிப்பூர் வன்முறை | மாநில அரசுக்கு எதிராக 9 பாஜக எம்எல்ஏக்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

இம்பால்: மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த 9 பாஜக எம்எல்ஏக்கள் பிரதமர் மோடிக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 9 பாஜக எம்எல்ஏக்கள் 5 விஷயங்களை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், மாநில அரசு மீதும் அதன் நிர்வாகத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதனை மீட்டெடுக்க சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றி சில சிறப்பான … Read more

அருணாச்சலை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு

வாஷிங்டன்: அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு செய்துள்ளது. மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை இன்று (ஜூன் 21) பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு செய்துள்ளது. இந்திய – சீன எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியை மாற்ற சீனா, ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது, ஆத்திரமூட்டும் … Read more

'எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம்; கட்சி பதவி கொடுங்கள்' – அஜித் பவார் திடீர் போர்க்கொடி

மும்பை: எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ஆர்வம் இல்லை; அதனால் என்னை அதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அதன் மூத்த தலைவர் அஜித் பவார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், “மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். மாறாக, கட்சியில் எதாவது பொறுப்பில் என்னை நியமிக்க வேண்டுகிறேன். எதிர்க்கட்சித் தலைவராக நான் சரியாக செயல்படவில்லை என்று சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எனக்கு … Read more

மகளின் லெஸ்பியன் 'பார்ட்னர்'.. மயக்கி கொலை செய்த தாய்.. உ.பி.யில் அதிர வைக்கும் சம்பவம்

லக்னோ: மகளின் லெஸ்பியன் உறவு குறித்து அறிந்த தாயார், அவருடன் தொடர்பில் இருந்த இளம்பெண்ணை தந்திரமாக மயக்கி கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயது ஆகிறது. இவரும் இவரது கல்லூரித் தோழியான ப்ரீத்தி சாகர் (26) என்பவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர். ஒருகட்டத்தில், இவர்களுக்கு இடையேயான அதீத அன்பு எல்லை மீறி லெஸ்பியன் உறவாக மாறியது. தோழிகள் இருவரும் அடிக்கடி தனிமையில் … Read more

“யோகா… காப்புரிமை, ராயல்டி ஏதுமற்ற இலவசமானது” – ஐ.நா. யோகா நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு

ஐநா சபை: பதிப்புரிமை, காப்புரிமை, ராயல்டி ஆகியவை இன்றி யோகா இலவசமானது என ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. ஐநா உயரதிகாரிகள், 180-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: “உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன். வருகை தந்த … Read more

“குழந்தைகள் எதிர்காலத்துக்காக அமைதியை நோக்கி…” – மணிப்பூர் மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி: அமைதியை நோக்கிய நமது தெரிவு என்பது குழந்தைகளின் மரபுரிமையான எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்றும், மணிப்பூரில் அமைதியும் நல்லிணக்கமும் வேண்டும் என்றும் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சின் நாடாளுமன்றத் தலைவருமான சோனியா காந்தி மணிப்பூர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பது: “மணிப்பூர் மாநில சகோதர சகோதரிகளே… சுமார் 50 நாட்களாக மணிப்பூரில் நடந்துவரும் … Read more

காஷ்மீர் முதல் குமரி வரை.. எட்டுத்திக்கும் களைகட்டியது 9-வது சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. தலைவர்கள், ராணுவ வீரர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். 9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் யோகா செய்தார் நாட்டின் முதல் குடிமகளான திரவுபதி முர்மு. மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள யோகா தின வாழ்த்து செய்தியில், உடலுக்கும் மனதுக்கும் இடையே யோகா ஒரு சமநிலையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் … Read more