ஆந்திராவில் சர்வதேச கல்வி திட்டம் – முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ‘ஜகனண்ணா ஆனிமுத்தியாலு’ எனும் அரசு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முக்கிய விருந்தினராக பங்கேற்றார். நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் இண்டர்மீடியட் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி மாணவ, மாணவியருக்கு அவர் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ஆந்திர மாணவர்கள் சர்வதேச அளவில் போட்டியிட்டு வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காண வேண்டும். இதற்காக பள்ளி … Read more

போதை மருந்து கடத்தலுக்கு எதிராக டெல்லியில் போலீஸார் சோதனை

புதுடெல்லி: “ஆபரேஷன் கவாச்’’ நடவடிக்கையின் கீழ் டெல்லியில் போதை மருந்து கடத்தலுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி காவல் துறை குற்றப்பிரிவினர் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். போதைப் பொருள் பழக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த”ஆபரேஷன் கவாச்” நடவடிக்கை டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போதை மருந்து கடத்தல்காரர்களுக்கு எதிராக குற்றப்பிரிவு காவல் துறை கடும் நடவடிக்கையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு … Read more

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலையிட்டு, மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாநில முன்னாள் முதல்வர், சட்டப்பேரவை முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் 10 பேர் வலியுறுத்தியுள்ளனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து பேச, மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஜக்கிய ஜனதாதளம், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு, பிரதமர் அலுவலகத்தில் கடந்த 10-ம் … Read more

அமெரிக்காவில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு…. பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் சந்திப்பு…!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்காவுக்கு 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடியை, நியூயார்க் ஜான் எப். கென்னடி விமான நிலையத்தில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகளும், இந்தியத் தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர். விமானநிலையத்தின் வெளியே காத்திருந்த ஏராளமான இந்தியர்கள் பிரதமருக்கு மூவர்ணக் கொடிகளுடன் வரவேற்புத் தெரிவித்தனர். சிலர் ஆடிப்பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். திரண்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை சந்தித்து கைகுலுக்கிய … Read more

அனல் காற்று | உ.பி, பிஹார் மாநிலங்களுக்கு சுகாதார நிபுணர்கள் அனுப்பி வைக்கப்படுவர் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: அனல் காற்று வாட்டி வதைத்து வரும் உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் சுகாதார நிபுணர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகிறது. இந்த 2 மாநிலங்களில் சுமார் 100 பேர் அனல் காற்றின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அதிக வெயில், அனல் … Read more

சத்தீஸ்கர் கேடர் ஐபிஎஸ் அதிகாரி – உளவு அமைப்பு தலைவராக ரவி சின்ஹா நியமனம்

புதுடெல்லி: ரவி சின்ஹாஇந்தியாவின் வெளி உளவு அமைப்பான ரா-வின் (RAW) அடுத்த தலைவராக சத்தீஸ்கர் கேடர் ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ரா அமைப்பின் தற்போதைய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சமந்த் குமார் கோயல் பதவி வகிக்கிறார். அவரது பதவிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ‘ரா’ அமைப்பின் அடுத்த தலைவராக 1988-ம் ஆண்டு பேட்ச், சத்தீஸ்கர் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ரவி சின்ஹா தற்போது அமைச்சரவை … Read more

ரூ.8.49 கோடியை கொள்ளையடித்துவிட்டு தப்பிய தம்பதி – குருத்வாராவில் இலவச பழச்சாறு வாங்கிய போது சிக்கினர்

டேராடூன்: பஞ்சாப் மாநிலம் லூதியாணா மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனத்துக்குள் கடந்த 10-ம் தேதி பட்டப்பகலிலேயே துப்பாக்கிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி ரூ.8.49 கோடி பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய போலீஸார் தனிப்படை அமைத்தனர்.தீவிர விசாரணைக்குப் பின்னர் கொள்ளையில் தொடர்புடைய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மந்தீப்கவுர் என்ற பெண்ணும் அவரது கணவர் ஜஸ்வீந்தர் சிங்கும் முக்கிய குற்றவாளிகள் என … Read more

எல்லை கிராமங்களின் 2,000 ஆண்டு வரலாறு சேகரிப்பு – அமைச்சர் அமித் ஷா உத்தரவு

புதுடெல்லி: மத்திய ஆயுத காவல் படையினர், அவர்கள் பணியில் இருக்கும் கிராமத்தின் 2 ஆயிரம் ஆண்டு கால வரலாற்று விவரங்களைச் சேகரிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் கடந்த 12-ம் தேதி, மத்திய ஆயுத காவல் படையில் (சிஏபிஎஃப்) பொறுப்புவகிக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் அமித் ஷா கலந்தாலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் எல்லை கிராமங்களை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “எல்லை கிராமங்களில் பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய … Read more

எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்த காங்கிரஸ் முயற்சி

புதுடெல்லி: மோடி அலை காரணமாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக தொடர்கிறது. இன்னும் சரியாக ஒரு வருடத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக மீண்டும் வென்று வரலாறு படைக்கும் சூழல் நிலவுகிறது. இதை தடுக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தளம் தலைவரான பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இறங்கியுள்ளார். இவரது முயற்சியால் எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் ஜுன் 23-ல் பிஹாரின் பாட்னாவில் கூடுகின்றனர். இக்கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது பற்றி ஆராய எதிர்க்கட்சிகள் … Read more

அசாமில் கனமழை – வெள்ளத்தில் சிக்கிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 31,000 பேர்

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள மழைவெள்ளத்தால் 10 மாவட்டங்களில் சுமார் 31,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: “சிராங், தர்ராங், திமாஜ், துப்ரி, திப்ருகார், கோக்ரஜ்கர், லக்கிம்பூர், நல்பரி, சோனிட்புர் மற்றும் உடல்குரி உள்ளிட்ட மாவட்டங்களில் 30,700 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 22,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். திப்ருகர் மாவட்டத்தில் 3,800-க்கும் அதிகமானோரும், கோக்ரஜ்கர் மாவட்டத்தில் 1,800-க்கும் அதிகமானோரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு … Read more