கேரளா மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனை..ரூ.10,000 கோடி ஹவாலா பணம்!

ஹவாலா பணம்… இந்த பெயரை கேட்டாலே சட்ட விரோதமாக ஏதோ நடந்திருக்கிறது எனச் சொல்லி விடலாம். ஹவாலா பணிப் பரிவர்த்தனையை பல்வேறு திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். அமெரிக்காவில் ஒரு ஏஜெண்டிடம் கொடுத்தால் இந்தியாவில் பக்காவாக வந்து சேர்ந்துவிடும். சின்னதாய் கமிஷன் மட்டும் கொடுத்தால் போதும். பணப் பரிமாற்றத்திற்கு ஒரு பாஸ்வேர்டு அவசியம். சட்டவிரோத பணப் பரிமாற்றம் இத்தகைய பரிமாற்றம் பல்வேறு நாடுகளுக்கு இடையில் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையிலும் நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு விஷயம் … Read more

ஒடிசா | ஒரு கிலோ ரூ. 2.5 லட்சத்துக்கு விற்பனையாகும் விலை உயர்ந்த மாம்பழங்கள் திருடுபோயின

நுவாபாடா: ஒரு கிலோ ரூ. 2.5 லட்சத்துக்கு விற்பனையாகும் விலை உயர்ந்த மாம்பழங்கள் ஒடிசா மாநிலத்தில் திருடுபோயுள்ளன. ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர், தனது விவசாய தோட்டத்தில் சுமார் 38 வகையிலான மாம்பழ ரகங்களை சாகுபடி செய்துள்ளார். அவற்றின் மதிப்பு குறித்து நன்கு அறிந்த அவர், அது குறித்த தகவலையும், மாம்பழங்களின் புகைப்படங்களையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டார். இதில் விலை உயர்ந்த மாம்பழ ரகமும் அடங்கும். Source link

அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் ஜேக்கப்பின் சிறப்பு அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். அமெரிக்கா புறப்படும் முன்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அமெரிக்காவுக்குப் புறப்படுகிறேன். நியூயார்க் நகரம் மற்றும் வாஷிங்டன் டிசியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். இதில், ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டங்கள், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் … Read more

ஒடிஷா ரயில் விபத்து… ‘காணாமல் போன’ ஜூனியர் இன்ஜினியர் வீட்டுக்கு சீல் வைத்த CBI..!

கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி மிக கோரமான விபத்தில் சிக்கியதில் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டது. 

கேதார்நாத்தில் சிவலிங்கம் மீது ரூபாய் நோட்டுகளை தூவிய பெண்: கோயில் நிர்வாகம் போலீஸில் புகார்

கேதார்நாத்: கேதார்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் ஏப்ரல் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த வகையில் இப்போது கோயில் திறந்திருப்பதால் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோயிலில் புகைப்படம், வீடியோ … Read more

ஆதிபுருஷ் சர்ச்சை : அனைத்து இந்திப் படங்களுக்கும் தடை விதித்தது நேபாள அரசு

ஆதிபுருஷ் படத்தில் ஜானகி இந்தியாவின் மகள் என்று கூறும் வசனத்துக்கு நேபாள அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திப்படங்களை வெளியிட நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றதாகக் கூறி பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் வரை எந்தஇந்திப்படத்தையும் திரையிட மாட்டோம் என்று காத்மாண்டு மேயர் பாலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.     Source link

ஸ்ரீவாணி அறக்கட்டளை குறித்து அவதூறு பேசினால் நடவடிக்கை – திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுத்த தீர்மானங்கள் குறித்து ஒய்.வி. சுப்பாரெட்டி கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வாணி அறக்கட்டளை குறித்து பல அரசியல் கட்சியினர் தவறாக பேசி வருகின்றனர். இந்த அறக்கட்டளை மூலம், 2,445 கோயில்கள் கட்ட தேவஸ்தானம் தீர்மானித்து, அதில் பல கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டன. மீனவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் அதிகம் … Read more

4,000 தற்காலிக வீடுகள் உடனடியாக கட்டித் தரப்படும் – மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உறுதி

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலின் சிங்மாங் கிராம பகுதியில் அடையாளம் தெரியாத வன்முறையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சம்பவம் நடைபெற்ற பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில்(எஸ்டி) இடம்பெறுவது தொடர்பாக அந்த சமூகத்தினருக்கும் அவர்களுக்கு எதிரான குகி மற்றும் நாகா சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி கடும் மோதல் … Read more

தமிழக பரத நாட்டிய கலைஞருக்கு பிரதமர் புகழாரம்

புதுடெல்லி: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது: மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில் கதை சொல்லுதல் குறித்து விவாதித்திருந்தோம். அந்த நிகழ்ச்சியால் உத்வேகம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் ஆனந்தாசங்கர் ஜெயந்த், குழந்தைகளுக்காக பல்வேறு கதைகளை தொகுத்துள்ளார். இதன்மூலம் நமதுநாட்டின் கலாச்சாரம் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படும். கதைகளின் சில சுவாரசியமான காணொலிகளையும் அவர் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்திருக்கிறார். தனது திறமையால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் ஆனந்தா சங்கர் … Read more

இந்தியா-வியட்நாம் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கமும் அளவும் மேம்பட்டுள்ளது: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: இந்தியா-வியட்நாம் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கமும் அளவும் மேம்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள வியட்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் பான் வான் கியாங், ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் வந்தபோது, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தளவாட ஆதரவு … Read more