'வந்தே பாரத் ரயிலுக்கு டிக்கெட் வாங்கினேன்; பயணித்ததோ தேஜஸ் ரயிலில்' – பயணி ட்வீட்

புதுடெல்லி: ரயில் பயணி ஒருவர் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் வகையில் டிக்கெட் வாங்கியுள்ளார். ஆனால், அந்த ரயிலுக்கு பதிலாக வேறொரு ரயில் வந்ததாகவும். அதில் தான் பயணித்து இருந்ததாகவும் அந்த பயணி அதிர்ச்சி தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதோடு அந்த ரயிலில் கழிவறை மற்றும் மோசமான சேவையை ரயில்வே வழங்கியதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் டேக் செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றுள்ளது. … Read more

இந்திய உளவு அமைப்பின் அடுத்த தலைவராக ரவி சின்ஹா நியமனம்

புதுடெல்லி: இந்திய உளவு அமைப்பான ரா-வின் அடுத்த தலைவராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ராவின் தற்போதைய தலைவரான சமந்த் கோயலின் பதவிக் காலம் இம்மாதம் 30-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதன் காரணமாக, அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், ராவின் அடுத்த தலைவராக ரவி சின்ஹாவை தேர்வு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஜூலை 1-ம் தேதி ராவின் புதிய தலைவராக ரவி சின்ஹா பதவியேற்க இருக்கிறார். 1988-ம் ஆண்டு சத்தீஸ்கர் … Read more

அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் தயார்! சிவ யாத்திரை ஜூலை 1 முதல் தொடங்கும்

Amarnath Yatra 2023: அமர்நாத் யாத்திரையின் பாதுகாப்பு குறித்த பெரிய அப்டேட், பாதுகாப்பு குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்

எதிர்ப்பை மீறி காதலைத் தொடர்ந்ததால், மகள் – காதலனை கொலை செய்து முதலைகள் நிரம்பிய ஆற்றில் வீசிய தந்தை…!

மத்திய பிரதேசத்தில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலைத் தொடர்ந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை பெண்ணின் குடும்பத்தினர் சுட்டுக்கொன்று கயிற்றில் கட்டி முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரேனா பகுதியை சேர்ந்த 18 வயதான ஷிவானி என்ற பெண் பலபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் என்ற இளைஞரை காதலித்து வந்தார். இதற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும் இருவரும் தங்களது காதலை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் … Read more

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை கப்பலை வியட்நாமுக்கு பரிசளிக்கிறது இந்தியா

புதுடெல்லி: ஏவுகணையை ஏந்திச் செல்லும் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் கிர்பான்-ஐ, வியட்நாமுக்கு இந்தியா பரிசாக வழங்க உள்ளது. இரண்டு நாள் பயணமாக நேற்று புதுடெல்லி வந்த வியட்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் பான் வான் கியாங், ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் வந்தபோது, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு … Read more

ரூபாய் 2000 நோட்டு வாபஸ் எதிரொலி: கோவில் நன்கொடைகளும் ஆடம்பர செலவும் அதிகரிக்கும்

2000 Rupees Notes Ban VS GDP: 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவு, நுகர்வை ஊக்குவிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்

கீதை பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது: காங்கிரஸ் – பாஜக இடையே வெடித்த வார்த்தைப் போர்!

புதுடெல்லி: மத்திய அரசின் காந்தி அமைதி விருதுக்கு கோரக்பூர் கீதா (Gita) பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்துக்காக காந்திய வழிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு கடந்த 1995-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் காந்தி அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசியம், இனம், … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாத கட்டண சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு…

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை நிறைவடைந்த பிறகும் மக்கள் கூட்டம் குறையவில்லை. கடந்த வாரம் கடும் வெயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தற்போது திருப்பதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 86 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். … Read more

ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு… சர்சைக்குரிய வசனங்களை கண்டித்து திரையரங்கினருடன் வாக்குவாதம்…!

ஆதிபுருஷ் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் ஆதிபுருஷ் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குக்கு சென்ற இந்து அமைப்பினர், படத்தை நிறுத்துமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஆதிபுருஷ் படம் ஓடிய திரையரங்கு முன்பு திரண்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் மும்பை போலீஸ் அவருக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே, ஆதிபுருஷ் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி … Read more

‘3-வது முறையாக ஐமுகூ ஆட்சி அமைக்க வாய்ப்பு’ – கபில் சிபல் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினை

புதுடெல்லி: சித்தாந்த ரீதியாக ஒன்றிணைந்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கபில் சிபல் தெரிவித்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணீஷ் திவாரி, பிரமோத் திவாரி ஆகியோர் பதிலளித்துள்ளனர். கபில் சிபல் கருத்து: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பின்னர் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலானது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதாக … Read more