ராமர் கோயில் விவகாரத்துக்கு பிறகு பொது சிவில் சட்டத்தை இயற்ற தீவிரம் காட்டும் பாஜக: 2024 மக்களவை தேர்தலிலும் முன்னிறுத்த திட்டம்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை தொடர்ந்து பொது சிவில் சட்டம் மீது பாஜக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தை வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக முன்னிறுத்தும் வாய்ப்புகள் தெரிகின்றன. பாஜகவின் பழைய பெயரான ஜனசங்கம் காலம் முதல் மூன்று முக்கிய விவகாரங்கள் அதன் கொள்கைகளாக முன்னிறுத்தப்படுகின்றன. அயோத்தி ராமர் கோயில், காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்குதல், பொது சிவில் சட்டம் ஆகியவை அந்த விவகாரங்கள் ஆகும். தற்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதுடன், … Read more

பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி சவால்.. திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா?

Owaisi Challenges For PM Modi: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, முடிந்தால், அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா? என பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.

பில்கிஸ் பானு வழக்கு.. 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது குறித்த கோப்புகளை தாக்கல் செய்ய ஒப்புதல்!

பில்கிஸ் பானு பலாத்காரம் வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்டது தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்ய மத்திய அரசும் குஜராத் அரசும் உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இவ்வழக்கில் இது திடீர் திருப்பமாகக் கருதப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று, பில்கிஸ் பானு என்ற இளம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அத்துடன், அவரது குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரையும் … Read more

பஜ்ரங் தள அமைப்பினரை சிறையில் அடைக்க முயற்சி: காங். மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளம் போன்ற வெறுப்பை விதைக்கும் அமைப்புகளுக்கு தடை விதிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஹொசப்பேட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது: ஹொசப்பேட்டை கூட்டத்துக்கு வருவதற்கு முன்பு இங்குள்ள ஹனுமான் கோயிலுக்கு சென்று அவரது காலடியில் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்தேன். அப்போது, கர்நாடகாவின் கலாச்சாரம், கவுரவம் ஆகியவற்றை அழிக்க முயற்சிப்பவர்களை … Read more

விலையுயர்ந்த மாம்பழங்களின் காவலுக்கு ஜெர்மன் செஃபர்டு, சிசிடிவி கேமரா, 4 பாதுகாப்புக்காவலர்களை நியமித்த விவசாயி..!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 24 வகையான விலையுயர்ந்த மாம்பழங்களை தனது தோட்டத்தில் வளர்த்துவரும் விவசாயி ஒருவர், மாம்பழங்களின் காவலுக்கு ஜெர்மன் செஃபர்டு நாய்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் நான்கு பாதுகாப்புக்காவலர்களை நியமித்துள்ளார். ஹுனாஉதா கிராமத்தை சேர்ந்த சங்கல்ப்சிங் பரிஹார் என்பவரின் தோட்டத்தில், 8 சர்வதேச மாம்பழ வகைகளுடன், 20-க்கும் மேற்பட்ட இந்திய மாம்பழ வகைகளையும் நட்டுள்ளார். இதில், ஜப்பானின் மியாசாகி மாம்பழம் உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழமாக அறியப்படுகிறது. ஒரு கிலோ மாம்பழம் இந்திய … Read more

இலவச, மானிய விலை மின்சார பயன்பாட்டை துல்லியமாக கணக்கிட்டு மானியம் வழங்கவேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

சென்னை: இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்தின் பயன்பாட்டை துல்லியமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப மின்வாரியங்களுக்கு மானியம் வழங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வீடுகளுக்கு 100 யூனிட் இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரத்தை மின்வாரியம் வழங்கி வருகிறது. இவை தவிர, குடிசை வீடுகள் மற்றும் விவசாயத்துக்கு முழுவதும் இலவசமாகவும், கைத்தறிக்கு 300 யூனிட்டும், விசைத்தறிக்கு 1000 யூனிட்டும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக … Read more

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வரும் 22 முதல் 24ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஜி20 சுற்றுலாத்துறை மாநாடு!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வரும் 22 முதல் 24ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஜி 20 சுற்றுலாத் துறை மாநாடு நடக்கப் உள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு குழுக்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. ஜி 20 மாநாட்டுக்கு வரும் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் குல்மார்க் பனிச்சறுக்கு மையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதனை முன்னிட்டு அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா … Read more

சிறுமி என கூட பாராமல் ஆடைகளை கழட்ட சொன்ன பாஜக ஐடி பிரிவு நிர்வாகி கைது..!!

மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் நவ்ரோஜாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சிறுமியின் தந்தை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அவரது மகளை பாஜகவை சேர்ந்த ராகுல் சித்லானி (25) என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் பாஜகவின் ஐ.டி. பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராகுல் சித்ரானியை கட்சி நியமித்தது. அவரை தற்போது அந்த பதவியில் இருந்து அக்கட்சி நீக்கியுள்ளது. இதுகுறித்து எப்.ஐ.ஆர். புகாரில், … Read more

இன்று முதல் சேவையை நிறுத்தும் பிரபல விமான நிறுவனம்…!

பட்ஜெட் விலையில் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் கோ பர்ஸ்ட் நிறுவனம் அண்மைக்காலமாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கு இரு காரணம், எண்ணெய் நிறுவனங்களுக்கு கோ பர்ஸ்ட் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை.இதுமட்டுமல்லாமல், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பிராட் & விட்னி (PRatt & Whitney) நிறுவனம் விமான எஞ்சின்களை வழங்காமல் தாமதித்து வருகிறது. இதனால் கோ பர்ஸ்ட் நிறுவனத்தி 28 விமானங்கள் இயக்கப்படாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த … Read more

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பிரபல பட்டு ஜவுளிக்கடையில் வருமான வரி சோதனை: வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடவடிக்கை

ஹைதராபாத்: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என 4 மாநிலங்களில் சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்தின் பட்டு ஜவுளி கடைகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரி செலுத்துவதில் முறைகேடுகள் நடப்பதாக சந்தேகம் எழுந்ததால், நேற்று ஒரே நாளில், சாய் சில்க்ஸ் கலா மந்திர் குழுமத்தின் பட்டுப் புடவை கடைகளான கலாமந்திர், மந்திர், காஞ்சிபுரம் வர மஹாலட்சுமி ஆகிய கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, காஞ்சிபுரம், ஹைதராபாத், … Read more