திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த எட்டு வயது சிறுமி பலி… தம்பியை காப்பாற்ற முயன்ற போது நேர்ந்த துயரம்..!

திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் தவறி விழுந்த எட்டு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். செகந்திராபாத்தில் இன்று காலை கனமழை பெய்த நிலையில், கலாசிகுடா பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பால் பாக்கெட் வாங்குவதற்காக் தனது தம்பியை அழைத்துச் சென்றார். அப்போது, அவரது தம்பி தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. தனது தம்பியை காப்பாற்ற முயன்றபோது சிறுமி  அருகில் மூடி திறந்திருந்து கிடந்த பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்க … Read more

கர்நாடக தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடக்கும்: நிதிஷ் குமார் தகவல்

பாட்னா: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் அதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதில் ஆலோசிக்கப்படும். ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கம் பிஹாரில் தொடங்கியதை சுட்டிக்காட்டி, … Read more

டெல்லி பல்கலை. நூற்றாண்டு விழா: திருவள்ளுவர் படத்துடன் கூடிய நாட்காட்டி வெளியீடு

புதுடெல்லி: டெல்லி பல்கலைகழக நூற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட நாட்காட்டியில் திருவள்ளுவர் பற்றியும் ஒருபக்கம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், திருக்குறள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. உலகின் பெருமைமிகு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக டெல்லிப் பல்கலைக்கழகம் விளங்குகிறது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில், பட்டம் பயின்ற மாணவர்கள் பன்முகத்திறன் கொண்டவர்களாக உருவாகியுள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க டெல்லிப் பல்கலைகழகம் தனது கல்விப் பணியில் ஒரு நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது. இச்சிறப்பை பறைசாற்றி மகிழ பல்கலைக்கழகத்தின் சார்பில் பஞ்சாங்க நாட்காட்டி ஒன்று வெளியாகி … Read more

ராகுல் காந்தி அவதூறு வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் காரசாரம்.. என்ன தீர்ப்பு வரப்போகுதோ.?

வழக்கு முடியும் வரை சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துடிப்பான தலைவராக ராகுல் காந்தி உள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் நடத்திய இந்திய ஒற்றுமை பேரணிக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்தனர். ஒன்றிய பாஜக அரசையும், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஐயும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல் தொழிலதிபர் அதானிக்கு நாட்டின் வளங்கள் கொடுக்கப்பட்டது பற்றியும், … Read more

“ஏழை மக்களின் வலி, போராட்டங்களை காங்கிரஸ் எப்போதும் புரிந்துகொள்ளாது” – பிரதமர் மோடி!

காங்கிரஸ் கட்சியினர் தன்னை 91 முறை அவதூறாக பேசியதாக பிடாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிடாரின் ஹம்னாபாத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பாஜக ஆட்சியின் கீழ் கர்நாடகாவில் மூன்று மடங்கு அந்நிய முதலீடு அதிகரித்துள்ளதாக கூறினார். விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதிகள் அளித்து விவசாயிகளையும், மக்களையும் காங்கிரஸ் கட்சி மோசம் செய்ததாக குற்றஞ்சாட்டினார். ஏழை மக்களின் வலி மற்றும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சி எப்போதும் புரிந்து கொள்ளாது என்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன … Read more

தற்கொலைக்கு முன்னர் திருமணமான இளம்பெண் எழுதிய கடிதம்..!!

மத்தியபிரதேச மாநிலத்தின் சித்ரகூட் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மேந்திரா சிங்.இவர் மனைவி துவாரகா. நேற்று முன் தினம் தர்மேந்திரா வீட்டில் இருந்து பணி விடயமாக வெளியில் சென்ற போது துவாரகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் துவாரகாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.துவாரகா எழுதி வைத்திருந்த கடிதத்தில், வாழ்க்கையே வெறுத்து விட்டது, பல தேர்வுகளில் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை, இனியும் என்னால் வெற்றி பெற முடியாது என்று தோன்றுகிறது என எழுதப்பட்டிருந்தது.விசாரணையில், துவாரகா … Read more

ஆர்டர் செய்தது ஐபோன்… போலி ஐபோன் ஆக மாற்றிய பலே டெலிவரி பாய்!

அமேசான் நிறுவன பார்சல்களை டெலிவரி செய்து வரும் நிறுவனம் மேட்ரிக்ஸ் ஃபைனான்ஸ் சொல்யூசன்ஸ். அந்நிறுவனத்தில் விநியோக நிர்வாகியாக வேலை பார்த்து வரும் லலித் என்ற இளைஞர் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்களை டெலிவரி செய்யாமல் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.அந்த டெலிவரி நிறுவனத்தின் நிலைய பொறுப்பாளரான ரவி என்பவரே இதைக் கண்டறிந்து காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். ஆன்லைன் தளத்தில் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் 1 ஆப்பிள் ஏர்பாட் ஆகியவை லலித்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதனைக் கொண்டு சென்ற லலித் … Read more

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

புதுடெல்லி: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது. இந்தியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ (ANI)-ன் ட்விட்டர் பக்கத்தை, ட்விட்டர் நிர்வாகம் சனிக்கிழமை பிற்பகல் முடக்கியது. இது தொடர்பாக ஏஎன்ஐ-க்கு, தெரிவிக்கப்பட்ட தகவலில், “ட்விட்டர் கணக்கை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 13 வயதாகி இருக்க வேண்டும். இதில் ட்விட்டர் நிறுவனம் உறுதியாக உள்ளது. இந்த விதியை மீறும் வகையில் உங்கள் கணக்கு இருப்பதால், அது முடக்கப்படுகிறது. பின்னர் உங்கள் கணக்கு டெலிட் … Read more

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கணக்கை முடக்கியது ட்விட்டர்.. சொன்ன காரணம் தான் ஹைலைட்டே..!

டெல்லி: இந்தியாவில் உள்ள பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஏ (ANI) நிறுவனத்தின் கணக்கை ட்விட்டர் நிறுவனமே முடக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் மக்களின் ஏகபோக வரவேற்புடன் இருந்த ட்விட்டரின் தற்போதைய நிலைமையை காணும் போது, “என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..” என்ற மெர்சல் வசனத்தை போலதான் கேட்க தோன்றுகிறது. லாபகரமாக இயக்குகிறேன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை வேலையில் இருந்து நீக்குவது, பயனர்களுக்கு புதுப்பது விதிமுறைகளை கொண்டு வருவது என எலான் மஸ்க் இஷ்டத்துக்கு விளையாடி வருகிறார். சமீபத்தில் … Read more

“அத்தீக் அகமதுவை போல என்னை யாரேனும் சுட விரும்புகிறீர்களா?” – பொதுக் கூட்டத்தில் கேட்ட ஆசம் கான்

ராம்பூர் (உத்தரப் பிரதேசம்): சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி அத்தீக் அகமது சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தன்னை யாரேனும் சுட்டுக்கொல்ல விரும்புகிறீர்களா என அக்கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான் பொதுக்கூட்டம் ஒன்றில் கேள்வி எழுப்பினார். சமாஜ்வாதி காட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ராம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “அத்தீக் அகமது சுட்டுக் கொல்லப்பட்டது போல, நானும் எனது குடும்பமும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என யாரேனும் விரும்புகிறீர்களா? என்னிடம் இருந்தும் எனது … Read more